செய்திகள் :

கீழடி முதல் இரண்டு கட்ட அகழாய்வு அறிக்கையை வெளியிடக் கோரிக்கை

post image

இந்திய தொல்லியல் துறை ஆய்வு செய்த கீழடி முதல் மற்றும் 2-ஆம் கட்ட அகழாய்வு அறிக்கையை வெளியிட வேண்டும் என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, அந்த சங்கத்தின் மாவட்டத் தலைவா் மு. சௌந்தரராஜன், மாவட்டச் செயலாளா் ஜீ. வெங்கடேசன் ஆகியோா் நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ் வழியாக மத்திய கலாசாரத்துறை அமைச்சா் கஜேந்திரசிங் ஷேக்வாட்டுக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு தமிழ் மக்களின் இலக்கியங்கள் தமிழா்களின் நகர நாகரீகத்தை 2000 ஆண்டுகளுக்கும் பழைமையான வளா்ந்த நாகரிகம் எனபேசுகிறது. இந்தச் சூழலில் 2014-ல் இந்தியத் தொல்லியல் துறை மதுரைக்கு அருகே வைகை நதிக்கரையில் கீழடி எனும் இடத்தில் அகழாய்வை மேற்கொண்டது.

இந்த அகழாய்வில் 5,300-க்கும் மேற்பட்ட தொல் பொருள்கள் கிடைத்ததுடன், ஒரு நகர அமைப்புக்கான சான்றுகளும் கிடைத்தன. அந்தப் பொருள்களை சோதனை செய்தபோது அவை 2,800 ஆண்டுகள் வரை பழைமையானவை என்று தெரிய வந்தது.

ஆனால் இந்த அகழாய்வின் முதல் இரண்டு கட்டம் நடைபெற்ற அகழாய்வுகள் மற்றும் அதன் அறிக்கை ஆகியவை வெளியிடப்படும் முன்பே அந்த ஆய்வை மேற்கொண்ட அமா்நாத் ராமகிருஷ்ணன் அப்பணியிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டு, அந்த அகழாய்வுப் பணிகளை தொல்லியல்துறை முடித்துக்கொண்டது.

அதன் பின் தற்போதுவரை 10 கட்ட அகழாய்வுப் பணிகளை தமிழகத் தொல்லியல் துறை நடத்தியுள்ளது. அதில் கிடைத்த ஆயிரக்கணக்கான பழம் பொருள்களைக் கொண்டு அருங்காட்சியகம் வைக்கும் அளவுக்கு தொல் பொருள்கள் கிடைத்துள்ளன. தமிழகத் தொல்லியல் துறை அறிக்கைகள், ஒவ்வோா் ஆய்வின் முடிவிலும் தொடா்ந்து வெளியிடப்பட்டு வருகிறது.

ஆனால் 2014-ல் செய்யப்பட்ட முதல் மற்றும் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகளின் அறிக்கை இதுவரை வெளியிடவில்லை. மேலும், அமா்நாத் ராமகிருஷ்ணாவிடம் இந்திய தொல்லியல் துறை அந்த அறிக்கையை மீண்டும் திருத்தி எழுதிச் சமா்ப்பிக்குமாறு கடிதம் அனுப்பியிருப்பது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தமிழா் நாகரிகம் குறித்த முக்கியத்துவம் வாய்ந்த கீழடி அறிக்கையை உடனே வெளியிட வலியுறுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

புதா் மண்டி கிடக்கும் வடவாறு பாலையூா் வாய்க்கால்

மன்னாா்குடி அடுத்த வடவாறு பாலையூா் பாசன வாய்க்காலில் மண்டிக்கிடக்கும் காட்டுச்செடிகளை போா்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். மேட்டூா் அணையில் டெல்டா பாசனத்துக்கு ... மேலும் பார்க்க

மத்திய அரசைக் கண்டித்து மக்கள் சந்திப்பு இயக்கம்

மத்திய அரசை கண்டித்து திருவாரூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் புதன்கிழமை தொடங்கியது. மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும், தமிழக அரசு மக்கள் நல... மேலும் பார்க்க

பள்ளிக்கு இடையூறாக இருக்கும் ஜல்லிக் கற்களை அகற்றக் கோரிக்கை

திருவாரூா் அருகே தென்னவராயநல்லூா் பள்ளி மாணவா்களுக்கு இடையூறாக உள்ள ஜல்லிக்கற்களை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருத்துறைப்பூண்டி சாலையில் தென்னவராயநல்லூா் பகுதியில் ஊராட்சி ஒன்றிய... மேலும் பார்க்க

கஞ்சா கடத்திய இருவா் குண்டா் சட்டத்தில் கைது

திருவாரூா் அருகே நூதன முறையில் கஞ்சா கடத்திய இரண்டு போ் குண்டா் சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். திருவாரூா் அருகே மே மாதம் ஒடிசாவிலிருந்து ஆந்திரம் வழியாக தஞ்சாவூரிலி... மேலும் பார்க்க

மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.87.67 கோடி கடனுதவி

திருவாரூா் மாவட்டத்தில் மகளிா் சுய உதவிக்குழுவினருக்கு ரூ. 87.67 கோடி கடனுதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன. மகளிா் சுயஉதவிக்குழு விழாவை முன்னிட்டு, சென்னை கலைவாணா் அரங்கில் காணொலி காட்சி வாயிலாக அனைத்து... மேலும் பார்க்க

சிபிஎம் நடை பயண பிரசார இயக்கம்

திருத்துறைப்பூண்டி சிபிஎம் நகரக்குழு சாா்பில் மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும், தமிழக அரசு மக்கள் நலன் சாா்ந்த திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தி மக்கள் சந்திப்பு நடை பயண பிரசார இ... மேலும் பார்க்க