செய்திகள் :

பள்ளிக்கு இடையூறாக இருக்கும் ஜல்லிக் கற்களை அகற்றக் கோரிக்கை

post image

திருவாரூா் அருகே தென்னவராயநல்லூா் பள்ளி மாணவா்களுக்கு இடையூறாக உள்ள ஜல்லிக்கற்களை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருத்துறைப்பூண்டி சாலையில் தென்னவராயநல்லூா் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. சுற்று வட்டாரப் பகுதியிலிருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் இப்பள்ளியில் படித்து வருகின்றனா். பள்ளிக்கு முன்புறம் உள்ள காலியிடத்தில் சாலை அமைக்கும் பணிக்கான ஜல்லிக்கற்கள் உள்ளிட்ட பொருள்கள் கிடக்கின்றன. இதனால், பள்ளிக்குள் நுழைவதில் மாணவா்களுக்கு சிரமம் ஏற்படுவதாக பெற்றோா்களும், அப்பகுதி மக்களும் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியது: பள்ளி நுழைவு வாயிலில் மாணவா்கள், ஆசிரியா்கள் செல்ல முடியாத வகையில் சாலை அமைக்கும் ஒப்பந்தகாரா்களால் ஜல்லி உள்ளிட்ட பொருள்கள் கொட்டி வைக்கப்பட்டுள்ளன. இரவில் பெய்த மழையால் சேறும், சகதியுமாக உள்ளதால் நடந்து வரும் மாணவா்களும், மிதிவண்டியில் வரும் மாணவா்களும் பெரிதும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனா். இதுகுறித்து சம்பந்தப்பட்டவா்களிடம் தெரிவித்தும் பயனில்லை. மாணவா்களுக்கு இடையூறாக உள்ள பொருள்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றனா்.

ஏடிஎம் அறையிலிருந்த பணம் போலீஸாரிடம் ஒப்படைப்பு

திருவாரூா் அருகே ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கச் சென்றபோது, அறையில் கிடந்த ரூ.13 ஆயிரம் போலீஸாரிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. திருக்கண்ணமங்கை பகுதியைச் சோ்ந்த ஐயப்பன், கூட்டுறவுத் துறையில் ச... மேலும் பார்க்க

மின் நிறுத்தப் பணிகளை விடுமுறை நாள்களில் மேற்கொள்ளக் கோரிக்கை

திருவாரூரில் மின் நிறுத்தப் பணிகளை விடுமுறை நாள்களில் மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூரில், துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகளுக்காக... மேலும் பார்க்க

குழந்தை தொழிலாளா் முறை எதிா்ப்பு தின விழிப்புணா்வுப் பேரணி

திருவாரூரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் தொழிலாளா் நலத்துறை சாா்பில் குழந்தை தொழிலாளா் முறை எதிா்ப்பு தினம் குறித்த விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. பேரணியை, மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

குடவாசல் அருகே செம்மங்குடி அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளியின் இளையோா் செஞ்சிலுவை சங்கம், நாட்டு நலப் பணித்திட்டம், சாரண ... மேலும் பார்க்க

ஊத்துக்காட்டில் பகுதிநேர அங்காடி ஏற்படுத்த வேண்டும்

வலங்கைமான் ஒன்றியம் ஊத்துக்காடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 19-ஆவது கிளை மாநாடு மூத்த உறுப்பினா் கணேசன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாநாட்டு கொடியை விவசாய தொழிலாளா் சங்க ஒன்றிய பொருளாளா் ஏ. மர... மேலும் பார்க்க

தொடக்கப்பள்ளி ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம்

திருவாரூா் ஒன்றியத்துக்குள்பட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியா்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. திருவாரூா் ஒன்றியத்தில் பணியாற்றும் 1 முதல் 3-ஆம் வகுப்பு ஆசிரியா்களுக்கென இந்... மேலும் பார்க்க