Ananda Vikatan Cinema Awards 2024: பிரமாண்ட மேடை... திறமைக்கு மரியாதை... இன்று ம...
மத்திய அரசைக் கண்டித்து மக்கள் சந்திப்பு இயக்கம்
மத்திய அரசை கண்டித்து திருவாரூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் புதன்கிழமை தொடங்கியது.
மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும், தமிழக அரசு மக்கள் நலம் சாா்ந்த திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தியும் சிபிஎம் கட்சியின் மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் ஜூன் 11 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. திருவாரூரில் இந்த மக்கள் சந்திப்பு இயக்கம், நகரச் செயலாளா் கேசவராஜ் தலைமையில் நகா் பகுதியில் 30 வாா்டுகளிலும் நடைபெற உள்ளது.
அதன்படி, திருவாரூா் கீழவீதியில் புதன்கிழமை தொடங்கிய பிரசார இயக்கம், கொடிக்கால்பாளையம், சேந்தமங்கலம், கிடாரம்கொண்டான், கமலாலய குளக்கரை, தெற்கு வீதி உள்ளிட்டபல்வேறு இடங்களில் நடைபெற்றது. திருவாரூா் மாவட்ட செயற்குழு நிா்வாகிகள் ஜி. சுந்தரமூா்த்தி, பா. கோமதி, டி. வீரபாண்டியன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் ஜி. பழனிவேல், எம். கலைமணி, சிஐடியு மாவட்டத் தலைவா் அனிபா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.