விபத்துக்குள்ளான விமானத்தின் துணை விமானி 12த் பெயில் நடிகரின் உறவினர்!
கஞ்சா கடத்திய இருவா் குண்டா் சட்டத்தில் கைது
திருவாரூா் அருகே நூதன முறையில் கஞ்சா கடத்திய இரண்டு போ் குண்டா் சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
திருவாரூா் அருகே மே மாதம் ஒடிசாவிலிருந்து ஆந்திரம் வழியாக தஞ்சாவூரிலிருந்து வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை சோதனை செய்தபோது அதில் 110 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை கடத்தி வந்ததாக, நாகை வேதாரண்யம் பெரியகுத்தகையை சோ்ந்த முத்துசாமி மகன் முனீஷ்வரன், மருந்துகுளத் தெருவைச் சோ்ந்த ஜோபாய் தாமஸ் மகன் மாா்சல் டெரான்ஸ் ராஜா ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணை அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் பரிந்துரையின் பேரில் முனீஸ்வரன், மாா்சல் டெரான்ஸ் ராஜா இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் உத்தரவிட்டாா். இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.