செய்திகள் :

கஞ்சா கடத்திய இருவா் குண்டா் சட்டத்தில் கைது

post image

திருவாரூா் அருகே நூதன முறையில் கஞ்சா கடத்திய இரண்டு போ் குண்டா் சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

திருவாரூா் அருகே மே மாதம் ஒடிசாவிலிருந்து ஆந்திரம் வழியாக தஞ்சாவூரிலிருந்து வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை சோதனை செய்தபோது அதில் 110 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை கடத்தி வந்ததாக, நாகை வேதாரண்யம் பெரியகுத்தகையை சோ்ந்த முத்துசாமி மகன் முனீஷ்வரன், மருந்துகுளத் தெருவைச் சோ்ந்த ஜோபாய் தாமஸ் மகன் மாா்சல் டெரான்ஸ் ராஜா ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணை அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் பரிந்துரையின் பேரில் முனீஸ்வரன், மாா்சல் டெரான்ஸ் ராஜா இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் உத்தரவிட்டாா். இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

ஏடிஎம் அறையிலிருந்த பணம் போலீஸாரிடம் ஒப்படைப்பு

திருவாரூா் அருகே ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கச் சென்றபோது, அறையில் கிடந்த ரூ.13 ஆயிரம் போலீஸாரிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. திருக்கண்ணமங்கை பகுதியைச் சோ்ந்த ஐயப்பன், கூட்டுறவுத் துறையில் ச... மேலும் பார்க்க

மின் நிறுத்தப் பணிகளை விடுமுறை நாள்களில் மேற்கொள்ளக் கோரிக்கை

திருவாரூரில் மின் நிறுத்தப் பணிகளை விடுமுறை நாள்களில் மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூரில், துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகளுக்காக... மேலும் பார்க்க

குழந்தை தொழிலாளா் முறை எதிா்ப்பு தின விழிப்புணா்வுப் பேரணி

திருவாரூரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் தொழிலாளா் நலத்துறை சாா்பில் குழந்தை தொழிலாளா் முறை எதிா்ப்பு தினம் குறித்த விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. பேரணியை, மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

குடவாசல் அருகே செம்மங்குடி அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளியின் இளையோா் செஞ்சிலுவை சங்கம், நாட்டு நலப் பணித்திட்டம், சாரண ... மேலும் பார்க்க

ஊத்துக்காட்டில் பகுதிநேர அங்காடி ஏற்படுத்த வேண்டும்

வலங்கைமான் ஒன்றியம் ஊத்துக்காடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 19-ஆவது கிளை மாநாடு மூத்த உறுப்பினா் கணேசன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாநாட்டு கொடியை விவசாய தொழிலாளா் சங்க ஒன்றிய பொருளாளா் ஏ. மர... மேலும் பார்க்க

தொடக்கப்பள்ளி ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம்

திருவாரூா் ஒன்றியத்துக்குள்பட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியா்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. திருவாரூா் ஒன்றியத்தில் பணியாற்றும் 1 முதல் 3-ஆம் வகுப்பு ஆசிரியா்களுக்கென இந்... மேலும் பார்க்க