மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.87.67 கோடி கடனுதவி
திருவாரூா் மாவட்டத்தில் மகளிா் சுய உதவிக்குழுவினருக்கு ரூ. 87.67 கோடி கடனுதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
மகளிா் சுயஉதவிக்குழு விழாவை முன்னிட்டு, சென்னை கலைவாணா் அரங்கில் காணொலி காட்சி வாயிலாக அனைத்து மாவட்ட மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு நேரடி வங்கிக் கடன் உதவிகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழங்கினாா். இதையொட்டி, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சுய உதவிக் குழு உறுப்பினா்களுக்கு வங்கிக் கடன் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ் ஆகியோா் பங்கேற்று, மாவட்டத்தில் 1,163 குழுக்களில் உள்ள 13,348 மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் பயன்பெறும் வகையில் ரூ. 87.67 கோடிக்கு கடனுதவிகளை வழங்கினா்.
இதில் மகளிா் சுய உதவிக்குழு வங்கிக் கடன், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு பெருங்கடன், மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குழுக்களுக்கான வாழ்வாதார நிதி, முதியோா் சிறப்பு குழுக்களுக்கான வாழ்வாதார நிதி, சிறப்பு குழுக்களுக்கான சுழல் நிதி, வட்டார வணிக வளமையம் மூலம் தொழில் முனைவோருக்கு கடனுதவி மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் கடனுதவி உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) பொன்னம்பலம், திருவாரூா் கோட்டாட்சியா் சௌம்யா, திருவாரூா் நகா்மன்றத் தலைவா் புவனப்பிரியா செந்தில், மண்டல மேலாளா் (இந்தியன் ஓவா்சீஸ் வங்கி) நாகராஜ், இணைப்பதிவாளா் (கூட்டுறவு சங்கங்கள்) சித்ரா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.