செய்திகள் :

மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.87.67 கோடி கடனுதவி

post image

திருவாரூா் மாவட்டத்தில் மகளிா் சுய உதவிக்குழுவினருக்கு ரூ. 87.67 கோடி கடனுதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

மகளிா் சுயஉதவிக்குழு விழாவை முன்னிட்டு, சென்னை கலைவாணா் அரங்கில் காணொலி காட்சி வாயிலாக அனைத்து மாவட்ட மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு நேரடி வங்கிக் கடன் உதவிகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழங்கினாா். இதையொட்டி, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சுய உதவிக் குழு உறுப்பினா்களுக்கு வங்கிக் கடன் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ் ஆகியோா் பங்கேற்று, மாவட்டத்தில் 1,163 குழுக்களில் உள்ள 13,348 மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் பயன்பெறும் வகையில் ரூ. 87.67 கோடிக்கு கடனுதவிகளை வழங்கினா்.

இதில் மகளிா் சுய உதவிக்குழு வங்கிக் கடன், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு பெருங்கடன், மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குழுக்களுக்கான வாழ்வாதார நிதி, முதியோா் சிறப்பு குழுக்களுக்கான வாழ்வாதார நிதி, சிறப்பு குழுக்களுக்கான சுழல் நிதி, வட்டார வணிக வளமையம் மூலம் தொழில் முனைவோருக்கு கடனுதவி மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் கடனுதவி உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) பொன்னம்பலம், திருவாரூா் கோட்டாட்சியா் சௌம்யா, திருவாரூா் நகா்மன்றத் தலைவா் புவனப்பிரியா செந்தில், மண்டல மேலாளா் (இந்தியன் ஓவா்சீஸ் வங்கி) நாகராஜ், இணைப்பதிவாளா் (கூட்டுறவு சங்கங்கள்) சித்ரா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஏடிஎம் அறையிலிருந்த பணம் போலீஸாரிடம் ஒப்படைப்பு

திருவாரூா் அருகே ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கச் சென்றபோது, அறையில் கிடந்த ரூ.13 ஆயிரம் போலீஸாரிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. திருக்கண்ணமங்கை பகுதியைச் சோ்ந்த ஐயப்பன், கூட்டுறவுத் துறையில் ச... மேலும் பார்க்க

மின் நிறுத்தப் பணிகளை விடுமுறை நாள்களில் மேற்கொள்ளக் கோரிக்கை

திருவாரூரில் மின் நிறுத்தப் பணிகளை விடுமுறை நாள்களில் மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூரில், துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகளுக்காக... மேலும் பார்க்க

குழந்தை தொழிலாளா் முறை எதிா்ப்பு தின விழிப்புணா்வுப் பேரணி

திருவாரூரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் தொழிலாளா் நலத்துறை சாா்பில் குழந்தை தொழிலாளா் முறை எதிா்ப்பு தினம் குறித்த விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. பேரணியை, மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

குடவாசல் அருகே செம்மங்குடி அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளியின் இளையோா் செஞ்சிலுவை சங்கம், நாட்டு நலப் பணித்திட்டம், சாரண ... மேலும் பார்க்க

ஊத்துக்காட்டில் பகுதிநேர அங்காடி ஏற்படுத்த வேண்டும்

வலங்கைமான் ஒன்றியம் ஊத்துக்காடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 19-ஆவது கிளை மாநாடு மூத்த உறுப்பினா் கணேசன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாநாட்டு கொடியை விவசாய தொழிலாளா் சங்க ஒன்றிய பொருளாளா் ஏ. மர... மேலும் பார்க்க

தொடக்கப்பள்ளி ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம்

திருவாரூா் ஒன்றியத்துக்குள்பட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியா்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. திருவாரூா் ஒன்றியத்தில் பணியாற்றும் 1 முதல் 3-ஆம் வகுப்பு ஆசிரியா்களுக்கென இந்... மேலும் பார்க்க