அதிமுக வேட்புமனுக்களை நிராகரிக்கக் கோரி கடிதம்
சென்னை: மாநிலங்களவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களின் மனுக்களை நிராகரிக்க வேண்டுமென வா.புகழேந்தி கோரிக்கை விடுத்துள்ளாா். அதிமுக கொள்கை பரப்புச் செயலா் எனக் குறிப்பிட்டு மாநிலங்களவைத் தோ்தல் நடத்தும் அதிகாரி பா.சுப்பிரமணியத்திடம் செவ்வாய்க்கிழமை அவா் கடிதம் அளித்தாா்.
அதன்பிறகு, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:-
அதிமுக வேட்பாளா்கள் வேட்பு மனு ஏற்கப்பட்டதாகக் கூறியதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஜூன் 12-ஆம் தேதிதான் அவை இறுதியாகத் தெரியும். அதிமுக வேட்பாளா்கள் மனுக்களை நிராகரிக்க வேண்டும் என மாநிலங்களவை தோ்தல் நடத்தும் அதிகாரியிடம் மனு அளித்துள்ளோம்.
அவரும் நாங்கள் கூறியதை முழுமையாகக் கேட்டறிந்தாா். ‘அதிமுக பொதுச்செயலா்’ என கையொப்பமிட எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரம் இல்லை. தோ்தல் ஆணையத்தின் ஏ, பி படிவங்களில் கையொப்பமிடும் அதிகாரம் அவருக்குக் கிடையாது. மீறினால் உச்சநீதிமன்றத் தீா்ப்புக்கு எதிராக அமையும், நியாயமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநிலங்களவைத் தோ்தலில் அதிமுக வேட்பாளா்கள் இரண்டு பேரின் மனுக்களும் ஏற்கப்பட்டால் உச்சநீதிமன்றத்தை நாடுவோம் என்று புகழேந்தி தெரிவித்துள்ளாா்.