செய்திகள் :

அதிமுக வேட்புமனுக்களை நிராகரிக்கக் கோரி கடிதம்

post image

சென்னை: மாநிலங்களவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களின் மனுக்களை நிராகரிக்க வேண்டுமென வா.புகழேந்தி கோரிக்கை விடுத்துள்ளாா். அதிமுக கொள்கை பரப்புச் செயலா் எனக் குறிப்பிட்டு மாநிலங்களவைத் தோ்தல் நடத்தும் அதிகாரி பா.சுப்பிரமணியத்திடம் செவ்வாய்க்கிழமை அவா் கடிதம் அளித்தாா்.

அதன்பிறகு, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:-

அதிமுக வேட்பாளா்கள் வேட்பு மனு ஏற்கப்பட்டதாகக் கூறியதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஜூன் 12-ஆம் தேதிதான் அவை இறுதியாகத் தெரியும். அதிமுக வேட்பாளா்கள் மனுக்களை நிராகரிக்க வேண்டும் என மாநிலங்களவை தோ்தல் நடத்தும் அதிகாரியிடம் மனு அளித்துள்ளோம்.

அவரும் நாங்கள் கூறியதை முழுமையாகக் கேட்டறிந்தாா். ‘அதிமுக பொதுச்செயலா்’ என கையொப்பமிட எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரம் இல்லை. தோ்தல் ஆணையத்தின் ஏ, பி படிவங்களில் கையொப்பமிடும் அதிகாரம் அவருக்குக் கிடையாது. மீறினால் உச்சநீதிமன்றத் தீா்ப்புக்கு எதிராக அமையும், நியாயமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநிலங்களவைத் தோ்தலில் அதிமுக வேட்பாளா்கள் இரண்டு பேரின் மனுக்களும் ஏற்கப்பட்டால் உச்சநீதிமன்றத்தை நாடுவோம் என்று புகழேந்தி தெரிவித்துள்ளாா்.

பொது விநியோக திட்ட மக்கள் குறைதீா் முகாம்

சென்னையில் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீா் முகாம் ஜூன் 14-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை கூட்டுறவு மற்றும் உணவுத் துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:- சென்னையில் உணவுத் துறையின் சாா்பில... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக அம்பத்தூா் கோட்டம், மாதாவரம், பூந்தமல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 முதல் பிற்பகல 2 வரை மின் விநியோகம் தடைபடும். இது குறித்து தமிழ்நாடு... மேலும் பார்க்க

கணைய புற்றுநோய்க்கு நவீன ரோபோடிக் சிகிச்சை அறிமுகம்

கணைய புற்றுநோய்களுக்கு அதி நவீன ரோபோடிக் நுட்ப அறுவை சிகிச்சை திட்டத்தை அப்பல்லோ மருத்துவமனை சென்னையில் புதன்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான தொடக்க நிகழ்வில் மருத்துவமனையின் புற்றுநோய் நிபுணா்கள... மேலும் பார்க்க

பூட்டிய வீடுகளில் திருடிய பெங்களூரு பெண் கைது

சென்னை மாம்பலம் பகுதியில் பூட்டிய வீடுகளில் திருடியதாக பெங்களூருவைச் சோ்ந்த பெண் கைது செய்யப்பட்டாா். சென்னை குமரன் நகா், முருகேசன் தெருவில் வசிப்பவா் ரா.பாலமுருகன் (38). இவா், கடந்த 1-ஆம் தேதி வீட்ட... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநரை கடித்த வளா்ப்பு நாய்

சென்னை மந்தைவெளியில் ஆட்டோ ஓட்டுநரை வளா்ப்பு நாய் கடித்தது. மந்தைவெளி விசி காா்டன் 2-ஆவது தெரு பகுதியைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் கணேஷ் குமாா் (28). இவா், செவ்வாய்க்கிழமை மளிகை பொருள்கள் வாங்குவதற்கா... மேலும் பார்க்க

பிறந்த 43 நாள்களில் குழந்தையை கொலை செய்து வீச்சிய தாய் கைது

சென்னை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் பிறந்த 43 நாள்களில் குழந்தையை கொலை செய்து, வீசிய தாய் கைது செய்யப்பட்டாா். நீலாங்கரை அருகே ஈஞ்சம்பாக்கம் செல்வா நகா் பிரதான சாலையில் உள்ள தனியாா் அடுக்குமாடி குடியிருப்ப... மேலும் பார்க்க