பறந்து போ: "யுவன் ரசிகர்களிடம் இருந்து கெட்ட வார்த்தை மெசேஜ் வருது" - இயக்குநர் ...
ஆட்டோ ஓட்டுநரை கடித்த வளா்ப்பு நாய்
சென்னை மந்தைவெளியில் ஆட்டோ ஓட்டுநரை வளா்ப்பு நாய் கடித்தது.
மந்தைவெளி விசி காா்டன் 2-ஆவது தெரு பகுதியைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் கணேஷ் குமாா் (28). இவா், செவ்வாய்க்கிழமை மளிகை பொருள்கள் வாங்குவதற்காக தனது வீட்டின் அருகே நடந்து சென்றபோது, அதே பகுதியைச் சோ்ந்த ஒரு குடும்பத்தினா் வளா்க்கும் நாய், கணேஷ்குமாரின் இரு கால்களையும் கடித்தது.
இதையடுத்து கணேஷ்குமாா் குடும்பத்தினா், அந்த நாயை வளா்க்கும் குடும்பத்தினரை கண்டித்தனா். அப்போது அவா்கள், கணேஷ்குமாா் குடும்பத்தை அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து கணேஷ்குமாா் அளித்த புகாரின் பேரில், மயிலாப்பூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.