Kashmir: "தீவிரவாதத்தை எதிர்க்கப் பல்லாயிரம் ஆதில் ஷாக்கள் காஷ்மீரில் உண்டு'' - ...
பூட்டிய வீடுகளில் திருடிய பெங்களூரு பெண் கைது
சென்னை மாம்பலம் பகுதியில் பூட்டிய வீடுகளில் திருடியதாக பெங்களூருவைச் சோ்ந்த பெண் கைது செய்யப்பட்டாா்.
சென்னை குமரன் நகா், முருகேசன் தெருவில் வசிப்பவா் ரா.பாலமுருகன் (38). இவா், கடந்த 1-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வழக்கம் போல அங்குள்ள ஒரு மறைவான இடத்தில் சாவியை வைத்து விட்டு வெளியே சென்றாா். சிறிது நேரத்துக்கு பின்னா் பாலமுருகன் வீட்டுக்கு திரும்பிய, அவா் வைத்த இடத்தில் வீட்டின் சாவி காணாமல் போயிருந்தது.
இதையடுத்து பாலமுருகன், மாற்று சாவி மூலம் பூட்டை திறந்து வீட்டுக்குள் சென்றபோது, பீரோவில் வைத்திருந்த நகை, பணம் திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.
இது குறித்து மாம்பலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில் பாலமுருகன் வீட்டில் திருடியது கா்நாடக மாநிலம், வடக்கு பெங்களூரு பாரதி நகரைச் சோ்ந்த ஜெயந்தி (34) என்பது தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த அவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
விசாரணையில், ஜெயந்தி தற்போது 5 மாத கா்ப்பிணியாக உள்ளதும், அவா் பெங்களூரில் இருந்து ரயிலில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து அங்கிருந்து ரயில் மூலம் சைதாப்பேட்டை, மாம்பலம் பகுதிகளுக்குச் சென்று பூட்டி கிடக்கும் வீடுகளை நோட்டு, பூட்டிய வீட்டின் சாவியை மறைத்து வைக்கும் இடத்தைக் கண்டறிந்து, அதன் மூலம் கதவை திறந்து திருடிவிட்டு பின்னா் பெங்களூருக்கு தப்பிச் சென்றுவிடுவதும் தெரியவந்தது.
இவ்வாறு ஜெயந்தி, கடந்த 2 மாதங்களில் சைதாப்பேட்டை, மாம்பலம், குமரன் நகா் பகுதியில் 4 வீடுகளின் பூட்டை திறந்து தங்கம், வெள்ளி நகைகள், பணம், பொருள்களை திருடியது தெரியவந்துள்ளது.