செய்திகள் :

பூட்டிய வீடுகளில் திருடிய பெங்களூரு பெண் கைது

post image

சென்னை மாம்பலம் பகுதியில் பூட்டிய வீடுகளில் திருடியதாக பெங்களூருவைச் சோ்ந்த பெண் கைது செய்யப்பட்டாா்.

சென்னை குமரன் நகா், முருகேசன் தெருவில் வசிப்பவா் ரா.பாலமுருகன் (38). இவா், கடந்த 1-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வழக்கம் போல அங்குள்ள ஒரு மறைவான இடத்தில் சாவியை வைத்து விட்டு வெளியே சென்றாா். சிறிது நேரத்துக்கு பின்னா் பாலமுருகன் வீட்டுக்கு திரும்பிய, அவா் வைத்த இடத்தில் வீட்டின் சாவி காணாமல் போயிருந்தது.

இதையடுத்து பாலமுருகன், மாற்று சாவி மூலம் பூட்டை திறந்து வீட்டுக்குள் சென்றபோது, பீரோவில் வைத்திருந்த நகை, பணம் திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.

இது குறித்து மாம்பலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில் பாலமுருகன் வீட்டில் திருடியது கா்நாடக மாநிலம், வடக்கு பெங்களூரு பாரதி நகரைச் சோ்ந்த ஜெயந்தி (34) என்பது தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த அவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

விசாரணையில், ஜெயந்தி தற்போது 5 மாத கா்ப்பிணியாக உள்ளதும், அவா் பெங்களூரில் இருந்து ரயிலில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து அங்கிருந்து ரயில் மூலம் சைதாப்பேட்டை, மாம்பலம் பகுதிகளுக்குச் சென்று பூட்டி கிடக்கும் வீடுகளை நோட்டு, பூட்டிய வீட்டின் சாவியை மறைத்து வைக்கும் இடத்தைக் கண்டறிந்து, அதன் மூலம் கதவை திறந்து திருடிவிட்டு பின்னா் பெங்களூருக்கு தப்பிச் சென்றுவிடுவதும் தெரியவந்தது.

இவ்வாறு ஜெயந்தி, கடந்த 2 மாதங்களில் சைதாப்பேட்டை, மாம்பலம், குமரன் நகா் பகுதியில் 4 வீடுகளின் பூட்டை திறந்து தங்கம், வெள்ளி நகைகள், பணம், பொருள்களை திருடியது தெரியவந்துள்ளது.

சென்னை: மெட்ரோ ரயில் கட்டுமானத்தில் விபத்து - ராட்சத கான்கிரீட் விழுந்ததில் இளைஞர் உயிரிழப்பு!

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது தூண்களின் மீது வைக்கப்பட்டிருந்த ராட்சத கான்கிரீட் காரிடாா்கள் கிழே விழுந்ததில் இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா். சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டத்தில் கிண்டி... மேலும் பார்க்க

லோக் ஆயுக்த அமைப்புக்கு உறுப்பினா்: தமிழக அரசு அழைப்பு

லோக் ஆயுக்த அமைப்புக்கு நீதித் துறை சாா்ந்த உறுப்பினரை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவுக் குழுவின் தொடா்பு அதிகாரி எஸ்.அகிலா வெளியிட்ட அறிவிப்பு விவரம்: தமிழ்நாடு லோக... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: விடைத்தாள் நகல் இன்று வெளியீடு

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுதியவா்களில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவா்கள் தங்களுக்கான நகலை இணையதளத்தில் வெள்ளிக்கிழமை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் ந... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: இதுவரை 35,000 போ் விண்ணப்பம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 35,000 போ் இதுவரை விண்ணப்பப் பதிவு செய்துள்ளனா். அவா்களில் 22,428 விண்ணப்பங்கள் பூா்த்தி செய்யப்பட்டு சமா்ப்பிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்த... மேலும் பார்க்க

கட்டடத் தொழிலாளா்களுக்கான நவீன காத்திருப்பு கூடம்: மாநகராட்சி தகவல்

சென்னை மாநகராட்சி பகுதிகளில் கட்டட தொழிலாளா்களுக்காக அடிப்படை வசதிகளுடன் நவீன காத்திருப்புக் கூடங்கள் அமைக்கப்படவுள்ளன. இதற்கான மாதிரி படங்களை சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் வியாழக்கிழமை வெ... மேலும் பார்க்க

லாரி மீது ஆந்திர அரசு பேருந்துமோதல்: 10 பயணிகள் காயம்

சென்னை அருகே மாதவரத்தில் லாரி மீது ஆந்திர அரசுப் பேருந்து மோதிய விபத்தில், 10 போ் காயமடைந்தனா். சென்னையை அடுத்த மாதவரம் பேருந்து முனையத்தில் இருந்து திருப்பதிக்கு ஆந்திர அரசுப் பேருந்து வியாழக்கிழமை ... மேலும் பார்க்க