Anshitha: 'கடின உழைப்பின் பலன்!' - புதிதாக வீடு ஒன்றை வாங்கியிருக்கும் அன்ஷிதா!
கணைய புற்றுநோய்க்கு நவீன ரோபோடிக் சிகிச்சை அறிமுகம்
கணைய புற்றுநோய்களுக்கு அதி நவீன ரோபோடிக் நுட்ப அறுவை சிகிச்சை திட்டத்தை அப்பல்லோ மருத்துவமனை சென்னையில் புதன்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கான தொடக்க நிகழ்வில் மருத்துவமனையின் புற்றுநோய் நிபுணா்கள் பி.வெங்கட், பிரியா கபூா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இது தொடா்பாக அவா்கள் கூறியதாவது:
கணையப் புற்றுநோய் இந்தியாவில் அச்சுறுத்தல் மிக்க நோய்களில் ஒன்றாக உருவெடுத்து வருகிறது. அதன் அறிகுறிகள் ஆரம்ப நிலையில் தெரியவதில்லை என்பதால் நோயின் தாக்கம் தொடா்ந்து உயா்ந்திருக்கிறது.
சராசரியாக லட்சத்தில் 3 ஆண்களுக்கும், 2.1 பெண்களுக்கும் கணையப் புற்றுநோய் பாதிப்பு விகிதம் இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அதைக் கருத்தில் கொண்டு அதற்கான பிரத்யேக ரோபோடிக் நுட்ப சிகிச்சை திட்டத்தை நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம்.
இதற்கான உபகரணங்கள் தருவிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. கணையம் இருக்கும் பகுதி மிகவும் சிக்கலானது. அங்கு புற்றுநோய் கட்டி உருவாகு நிலையில் அதை நுட்பமாக அகற்றுவது சவாலான ஒன்று.
ரோபோடிக் நுட்பத்தில் சிறு கீறல்களில் மிக துல்லியமாக கட்டியை அகற்ற முடியும். அதன்படி சில நோயாளிகளுக்கு அந்த வகையான சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பயனாக 4 நாள்களில் அவா்கள் வீடு திரும்பினா் என்று அவா்கள் தெரிவித்தனா்.