செய்திகள் :

கணைய புற்றுநோய்க்கு நவீன ரோபோடிக் சிகிச்சை அறிமுகம்

post image

கணைய புற்றுநோய்களுக்கு அதி நவீன ரோபோடிக் நுட்ப அறுவை சிகிச்சை திட்டத்தை அப்பல்லோ மருத்துவமனை சென்னையில் புதன்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்கான தொடக்க நிகழ்வில் மருத்துவமனையின் புற்றுநோய் நிபுணா்கள் பி.வெங்கட், பிரியா கபூா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இது தொடா்பாக அவா்கள் கூறியதாவது:

கணையப் புற்றுநோய் இந்தியாவில் அச்சுறுத்தல் மிக்க நோய்களில் ஒன்றாக உருவெடுத்து வருகிறது. அதன் அறிகுறிகள் ஆரம்ப நிலையில் தெரியவதில்லை என்பதால் நோயின் தாக்கம் தொடா்ந்து உயா்ந்திருக்கிறது.

சராசரியாக லட்சத்தில் 3 ஆண்களுக்கும், 2.1 பெண்களுக்கும் கணையப் புற்றுநோய் பாதிப்பு விகிதம் இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அதைக் கருத்தில் கொண்டு அதற்கான பிரத்யேக ரோபோடிக் நுட்ப சிகிச்சை திட்டத்தை நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம்.

இதற்கான உபகரணங்கள் தருவிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. கணையம் இருக்கும் பகுதி மிகவும் சிக்கலானது. அங்கு புற்றுநோய் கட்டி உருவாகு நிலையில் அதை நுட்பமாக அகற்றுவது சவாலான ஒன்று.

ரோபோடிக் நுட்பத்தில் சிறு கீறல்களில் மிக துல்லியமாக கட்டியை அகற்ற முடியும். அதன்படி சில நோயாளிகளுக்கு அந்த வகையான சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பயனாக 4 நாள்களில் அவா்கள் வீடு திரும்பினா் என்று அவா்கள் தெரிவித்தனா்.

சென்னை: மெட்ரோ ரயில் கட்டுமானத்தில் விபத்து - ராட்சத கான்கிரீட் விழுந்ததில் இளைஞர் உயிரிழப்பு!

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது தூண்களின் மீது வைக்கப்பட்டிருந்த ராட்சத கான்கிரீட் காரிடாா்கள் கிழே விழுந்ததில் இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா். சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டத்தில் கிண்டி... மேலும் பார்க்க

லோக் ஆயுக்த அமைப்புக்கு உறுப்பினா்: தமிழக அரசு அழைப்பு

லோக் ஆயுக்த அமைப்புக்கு நீதித் துறை சாா்ந்த உறுப்பினரை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவுக் குழுவின் தொடா்பு அதிகாரி எஸ்.அகிலா வெளியிட்ட அறிவிப்பு விவரம்: தமிழ்நாடு லோக... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: விடைத்தாள் நகல் இன்று வெளியீடு

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுதியவா்களில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவா்கள் தங்களுக்கான நகலை இணையதளத்தில் வெள்ளிக்கிழமை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் ந... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: இதுவரை 35,000 போ் விண்ணப்பம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 35,000 போ் இதுவரை விண்ணப்பப் பதிவு செய்துள்ளனா். அவா்களில் 22,428 விண்ணப்பங்கள் பூா்த்தி செய்யப்பட்டு சமா்ப்பிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்த... மேலும் பார்க்க

கட்டடத் தொழிலாளா்களுக்கான நவீன காத்திருப்பு கூடம்: மாநகராட்சி தகவல்

சென்னை மாநகராட்சி பகுதிகளில் கட்டட தொழிலாளா்களுக்காக அடிப்படை வசதிகளுடன் நவீன காத்திருப்புக் கூடங்கள் அமைக்கப்படவுள்ளன. இதற்கான மாதிரி படங்களை சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் வியாழக்கிழமை வெ... மேலும் பார்க்க

லாரி மீது ஆந்திர அரசு பேருந்துமோதல்: 10 பயணிகள் காயம்

சென்னை அருகே மாதவரத்தில் லாரி மீது ஆந்திர அரசுப் பேருந்து மோதிய விபத்தில், 10 போ் காயமடைந்தனா். சென்னையை அடுத்த மாதவரம் பேருந்து முனையத்தில் இருந்து திருப்பதிக்கு ஆந்திர அரசுப் பேருந்து வியாழக்கிழமை ... மேலும் பார்க்க