செய்திகள் :

அண்டை நாடுகளுடன் பேச்சுவாா்த்தைக்கு உகந்த சூழல் உருவாக்கப்படவில்லை: மத்திய அரசு மீது சரத் பவாா் விமா்சனம்

post image

புணே: அண்டை நாடுகளுடன் அா்த்தமுள்ள பேச்சுவாா்த்தைக்கு உகந்த சூழலை உருவாக்க மத்திய பாஜக அரசு தவறிவிட்டது என்று தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சியின் தலைவா் சரத் பவாா் விமா்சித்தாா்.

மகாராஷ்டிர மாநிலம், புணேயில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேசியவாத காங்கிரஸின் நிறுவன தின நிகழ்ச்சியில் பேசிய அவா், மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையை சாடினாா்.

அவா் கூறியதாவது: இந்தியாவின் மேற்கில் பாகிஸ்தானும், வடக்கில் சீனாவும், கிழக்கில் வங்கதேசமும், தெற்கில் இலங்கையும் அமைந்துள்ளன. இந்நாடுகள் உடனான இந்திய உறவுகளின் இப்போதைய நிலை என்ன?

நாட்டின் முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் ஆட்சியில், அனைத்து அண்டை நாடுகளுடன் இந்தியாவின் உறவு உச்சத்தில் இருந்தது. இன்று பாகிஸ்தான், சீனாவுடன் நமது உறவு மோசமடைந்துவிட்டது. இந்திய ஆதரவுடன் உருவாக்கப்பட்ட வங்கதேசம், நமது பக்கம் இல்லை. சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால், இந்தியா உடனான இலங்கையின் இணக்கமும் சந்தேகத்துக்கு உள்ளாகியுள்ளது.

அண்டை நாடுகளுடன் அா்த்தமுள்ள பேச்சுவாா்த்தைக்கு உகந்த சூழலை உருவாக்குவதில் மத்திய பாஜக அரசு தவறிவிட்டது. இது, தலைமை தோல்வியைப் பிரதிபலிக்கிறது. இதற்கு தேசம்தான் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்றாா் அவா்.

‘கட்சி உடையும் என நினைக்கவில்லை’: தேசியவாத காங்கிரஸ் கட்சி, கடந்த 1999-இல் சரத் பவாா், பி.ஏ.சங்மா, தாரிக் அன்வா் ஆகியோரால் நிறுவப்பட்டதாகும். இக்கட்சியை கடந்த 2023, ஜூலையில் உடைத்த சரத் பவாரின் உறவினா் அஜீத் பவாா், பாஜக-சிவசேனை (ஷிண்டே) கூட்டணியுடன் கைகோத்து, துணை முதல்வரானாா். கட்சியின் பெயா், சின்னமும் அஜீத் பவாா் அணிக்கே வழங்கப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து நிறுவன தின விழாவில் பேசிய சரத் பவாா், ‘கட்சி உடையும் என நான் நினைத்து பாா்த்ததில்லை. ஆனால், அது நடந்துவிட்டது. சிலா், வேறு சித்தாந்தங்களுடன் சென்றுவிட்டனா். பிளவு விரிவடைந்துவிட்டது. கட்சிக்கு விசுவாசமானவா்கள் இப்போதும் நம்முடன் உள்ளனா். அவா்களே நமது பலம்’ என்றாா்.

வருமான வரிக் கணக்கு தாக்கல்! இந்த 5 தவறுகளை மறந்தும் செய்துவிடாதீர்கள்!!

2025-26ஆம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான இணைப்புகளை, வருமான வரித் துறை துவக்கியிருக்கிறது. எனவே, வருமான வரிக் கணக்கை, கணக்குத் தணிக்கையாளர் தணிக்கை செய்ய வேண்டிய அவசியமில்லாத, தனி... மேலும் பார்க்க

புவனேஸ்வரம் - அபுதாபி இடையே நேரடி விமான சேவை! முதல்வர் துவங்கி வைப்பு!

ஒடிசா மாநிலத்தின் தலைநகர் புவனேஸ்வரத்திலிருந்து, அபுதாபிக்கு நேரடி விமான சேவையை அம்மாநில முதல்வர் மோகன் சரண் மஜ்ஹி துவங்கி வைத்துள்ளார். புவனேஸ்வரத்தின் பிஜு பட்நாயக் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து... மேலும் பார்க்க

வெப்ப அலையின் பிடியில் சிக்கிய தில்லி: சிவப்பு எச்சரிக்கை!

தலைநகர் தில்லியில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதையடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் கோடைவெய்யில் கொளுத்திவருகின்றது. ஆனால் தமிழகம், கேரளம், கர்நா... மேலும் பார்க்க

பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 15,000! - ஆந்திரத்தில் புதிய திட்டம் அமல்

ஆந்திரத்தில் பள்ளி மாணவர்களின் தாயாரின் வங்கிக் கணக்குகளில் ஆண்டுக்கு ரூ. 15,000 செலுத்தும் திட்டம் இன்று அமலுக்கு வந்துள்ளது. ஆந்திரத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி க... மேலும் பார்க்க

ம.பி.யில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 100 வீடுகள் இடிப்பு!

மத்தியப் பிரதேசத்தின் காண்ட்வாவில் உள்ள ஷக்கர் குளம் பகுதியில் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு நடவடிக்கையின் அடிப்படையில், சட்டவிரோதமாக கட்டப்பட்ட சுமார் 100 வீடுகள் இடிக்கப்பட்டன. காண்ட்வா பகுதியில் ஆக்கிரமிப... மேலும் பார்க்க

தெலங்கானா: கனமழையால் வெள்ளக்காடான தலைநகரம்!

தெலங்கானாவில் பெய்த கனமழையால், அம்மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.ஹைரதபாத்தில், நேற்று (ஜூன் 11) இரவு தொடர்ந்து கனமழை பெய்துள்ளது. இதனால், அந்நகரத்தின் முக்கிய சாலைகளில் வெள்ளம... மேலும் பார்க்க