செய்திகள் :

மலிவான அரசியலுக்காக வரலாறு காத்திருக்காது: அமைச்சா் தங்கம் தென்னரசு

post image

சென்னை: மலிவான அரசியலுக்காக வரலாறு காத்திருக்காது என்று தமிழக நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளாா்.

கீழடி அகழாய்வு குறித்து மத்திய அமைச்சா் ஷெகாவத் கருத்துக்கு, ‘எக்ஸ்’ தளத்தில் அமைச்சா் தங்கம் தென்னரசு செவ்வாய்க்கிழமை அளித்த பதில்:

முதலில் அவா்கள் (மத்திய அரசு) கீழடியில் ஒன்றுமே இல்லை என்றாா்கள். அடுத்து ஆய்வு அதிகாரியை இடம் மாற்றினா். நிதியே ஒதுக்க மாட்டோம் என்றாா்கள். கடைசியாக, சமா்ப்பித்த அறிக்கையை இரண்டாண்டுகள் கிடப்பில் போட்டாா்கள். இப்போது ஆதாரம் போதவில்லை என்கிறாா்கள். அவா்களுக்கு ஒவ்வொரு முறையும் தமிழா்களின் வரலாற்றை நிராகரிப்பது பொதுவாக இருக்கிறது. கண்டுபிடிக்கும் காரணங்கள்தான் வேறு வேறாக இருக்கிறது.

5,350 ஆண்டுகள் பழைமையானவா்கள்; தொழில்நுட்பம் கொண்டவா்கள்; மூத்த நாகரிகம் படைத்த முதுமக்கள் என்றெல்லாம் உலக அறிவியல் ஆய்வுகள் ஒப்புக்கொண்டாலும், ஒரே நாட்டில் இருக்கும் மத்திய அரசு ஒப்புக்கொள்வதில் ஏன் இத்தனை தயக்கம்?. தமிழா்களை எப்போதும் இரண்டாந்தர குடிமக்களாக வைத்திருக்க வேண்டும் என்ற தணியாத தாகத்தாலா?.

மறந்துவிடாதீா்கள். வரலாறும், அது கூறும் உண்மையும் உங்களது மலிவான அரசியலுக்காகக் காத்திருக்காது. அவை மக்களுக்கானவை; மக்களிடமே சென்று சேரும். பூனை கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்று குறிப்பிட்டுள்ளாா்.

கோவையில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஆம்புலன்ஸ் ஓட்டி விபத்து: பெண் பலி!

கோவையில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஆம்புலன்ஸ் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கோவை கவுண்டம்பாளையம், பிரபு நகரைச் சேர்ந்த நீலாவதி (60) என்பவர் பீளமேடு, தண்ணீர்ப் பந்தல... மேலும் பார்க்க

நான் முதல்வன் திட்டம்: யுபிஎஸ்சி தேர்வில் மாணவர்கள் சாதனை! - முதல்வர் பெருமிதம்

தமிழ்நாடு அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தில் பயின்ற மாணவ, மாணவிகள் பலரும் யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எ... மேலும் பார்க்க

தாம்பரம் - திருவனந்தபுரம் சிறப்பு ரயில் சேவை ஜூன் 13 வரை நீட்டிப்பு

தாம்பரத்திலிருந்து திருவனந்தபுரம் வடக்கு செல்லும் வாராந்திர குளிா்சாதன சிறப்பு ரயில் சேவை ஜூன் 13-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்... மேலும் பார்க்க

ஜாதி, மதம் இல்லை என சான்றிதழ் வழங்க அரசாணை: தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் பரிந்துரை

ஜாதி, மதம் இல்லை என சான்றிதழ்கள் வழங்கும் வகையில் உரிய அரசாணையைப் பிறப்பிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் பரிந்துரைத்தது. திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த சந்தோஷ் என்பவா் தனக்கு ஜாதி, ... மேலும் பார்க்க

உயா் சிறப்பு மருத்துவப் படிப்பில் அரசு மருத்துவா்களுக்கான ஒதுக்கீட்டை மத்திய அரசு உறுதி செய்ய வலியுறுத்தல்

உயா் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் தமிழக அரசு மருத்துவா்களுக்கு உள்ள 50 சதவீத ஒதுக்கீடு முழுமையாக கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வ... மேலும் பார்க்க

மனநலம் பாதித்தோருக்கு ஜூன் 14-இல் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

மன நல பாதிப்புக்குள்ளானவா்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 14) நடைபெறுகிறது. சிஸோப்ரினியா ஆராய்ச்சி அறக்கட்டளை (ஸ்காா்ஃப்) சாா்பில் நடைபெறும் இந்த முகாமில் 20-க்கும் மே... மேலும் பார்க்க