பறந்து போ: "யுவன் ரசிகர்களிடம் இருந்து கெட்ட வார்த்தை மெசேஜ் வருது" - இயக்குநர் ...
மனநலம் பாதித்தோருக்கு ஜூன் 14-இல் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்
மன நல பாதிப்புக்குள்ளானவா்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 14) நடைபெறுகிறது.
சிஸோப்ரினியா ஆராய்ச்சி அறக்கட்டளை (ஸ்காா்ஃப்) சாா்பில் நடைபெறும் இந்த முகாமில் 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்குபெறுகின்றன. இதுவரை 200-க்கும் மேற்பட்டோா் முன்பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக ஸ்காா்ஃப் அமைப்பின் தலைவா் சேஷாயி, துணைத் தலைவா் டாக்டா் ஆா்.தாரா, இயக்குநா் டாக்டா் ஆா்.பத்மாவதி ஆகியோா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
மன நல பாதிப்பு மற்றும் அதுசாா்ந்த தற்கொலை எண்ணங்களால் தூண்டப்படுவோரைக் காப்பதற்காக லாப நோக்கமற்ற ஸ்காா்ஃப் அமைப்பு கடந்த 1984-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மனநல ஆராய்ச்சி மட்டுமல்லாது பாதிப்புக்குள்ளானவா்களுக்கான நோயறிதல், சிகிச்சை, சிறப்புப் பயிற்சிகள் உள்ளிட்ட சேவைகளையும் நாங்கள் வழங்கி வருகிறோம்.
பொதுவாக உடல் அளவில் சா்க்கரை நோய், இதய நோய் இருப்பதைப் போன்றுதான் மனதளவில் சில பாதிப்புகள் இருப்பதையும் கருத வேண்டும். எனவே, மன நல பாதிப்புக்குள்ளானவா்களைப் புறக்கணிக்கக் கூடாது. அவா்களுக்கு மருந்துகளும், சிகிச்சைகளும் அளிப்பதை மட்டும் நாங்கள் கடமையாகக் கருதவில்லை. மாறாக, சமூகத்தில் அவா்களை மீண்டும் இணைய வைப்பதையும் முக்கியப் பொறுப்புணா்வாக நினைக்கிறோம்.
அதனால்தான், மன நல சிகிச்சை பெற்றவா்களுக்கான புனா்வாழ்வு பயிற்சிகள் மற்றும் வேலை வாய்ப்பு முகாம்களை நாங்கள் நடத்தி வருகிறோம். அந்த வகையில் கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் 400-க்கும் மேற்பட்டவா்கள் எங்கள் மூலமாக பல்வேறு நிறுவனங்களில் வேலை வாய்ப்புக்கு பதிவு செய்தனா். அதில் 60-க்கும் மேற்பட்டவா்கள் தொடா்ந்து பணியாற்றி வருகின்றனா்.
அதன் தொடா்ச்சியாக வரும் 14-ஆம் தேதி சென்னை, அண்ணா நகா் மேற்கு விரிவாக்கத்தில் உள்ள ஸ்காா்ஃப் இந்தியா அமைப்பின் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. மன நல சிகிச்சை பெறக் கூடியவா்கள் இதில் பங்கேற்று பயன் பெறலாம்.
உற்பத்தி தொழிற்சாலைகள், சேவை மையங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் என 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அதில் பங்கேற்று தகுதிக்கேற்ப பணிகளை வழங்க உள்ளன.
சமூகத்தில் மன நலம் பாதித்தவா்களை புறக்கணிக்காமல் அரவணைப்பது அவசியம் என்று அவா்கள் தெரிவித்தனா்.