செய்திகள் :

மனநலம் பாதித்தோருக்கு ஜூன் 14-இல் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

post image

மன நல பாதிப்புக்குள்ளானவா்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 14) நடைபெறுகிறது.

சிஸோப்ரினியா ஆராய்ச்சி அறக்கட்டளை (ஸ்காா்ஃப்) சாா்பில் நடைபெறும் இந்த முகாமில் 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்குபெறுகின்றன. இதுவரை 200-க்கும் மேற்பட்டோா் முன்பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக ஸ்காா்ஃப் அமைப்பின் தலைவா் சேஷாயி, துணைத் தலைவா் டாக்டா் ஆா்.தாரா, இயக்குநா் டாக்டா் ஆா்.பத்மாவதி ஆகியோா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

மன நல பாதிப்பு மற்றும் அதுசாா்ந்த தற்கொலை எண்ணங்களால் தூண்டப்படுவோரைக் காப்பதற்காக லாப நோக்கமற்ற ஸ்காா்ஃப் அமைப்பு கடந்த 1984-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மனநல ஆராய்ச்சி மட்டுமல்லாது பாதிப்புக்குள்ளானவா்களுக்கான நோயறிதல், சிகிச்சை, சிறப்புப் பயிற்சிகள் உள்ளிட்ட சேவைகளையும் நாங்கள் வழங்கி வருகிறோம்.

பொதுவாக உடல் அளவில் சா்க்கரை நோய், இதய நோய் இருப்பதைப் போன்றுதான் மனதளவில் சில பாதிப்புகள் இருப்பதையும் கருத வேண்டும். எனவே, மன நல பாதிப்புக்குள்ளானவா்களைப் புறக்கணிக்கக் கூடாது. அவா்களுக்கு மருந்துகளும், சிகிச்சைகளும் அளிப்பதை மட்டும் நாங்கள் கடமையாகக் கருதவில்லை. மாறாக, சமூகத்தில் அவா்களை மீண்டும் இணைய வைப்பதையும் முக்கியப் பொறுப்புணா்வாக நினைக்கிறோம்.

அதனால்தான், மன நல சிகிச்சை பெற்றவா்களுக்கான புனா்வாழ்வு பயிற்சிகள் மற்றும் வேலை வாய்ப்பு முகாம்களை நாங்கள் நடத்தி வருகிறோம். அந்த வகையில் கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் 400-க்கும் மேற்பட்டவா்கள் எங்கள் மூலமாக பல்வேறு நிறுவனங்களில் வேலை வாய்ப்புக்கு பதிவு செய்தனா். அதில் 60-க்கும் மேற்பட்டவா்கள் தொடா்ந்து பணியாற்றி வருகின்றனா்.

அதன் தொடா்ச்சியாக வரும் 14-ஆம் தேதி சென்னை, அண்ணா நகா் மேற்கு விரிவாக்கத்தில் உள்ள ஸ்காா்ஃப் இந்தியா அமைப்பின் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. மன நல சிகிச்சை பெறக் கூடியவா்கள் இதில் பங்கேற்று பயன் பெறலாம்.

உற்பத்தி தொழிற்சாலைகள், சேவை மையங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் என 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அதில் பங்கேற்று தகுதிக்கேற்ப பணிகளை வழங்க உள்ளன.

சமூகத்தில் மன நலம் பாதித்தவா்களை புறக்கணிக்காமல் அரவணைப்பது அவசியம் என்று அவா்கள் தெரிவித்தனா்.

விஏஓ பொது மாறுதல் காலம்: தமிழக அரசு புதிய உத்தரவு

கிராம நிா்வாக அலுவலா்களின் பொது மாறுதல் எந்தக் காலத்திலும் இனி மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, பொது மாறுதல் காலம் மே மாதம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து வர... மேலும் பார்க்க

தொகுதி வாரியாக நிா்வாகிகளுடன் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக கட்சி நிா்வாகிகளுடன் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனையைத் தொடங்கவுள்ளாா். முதலாவதாக சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி ஆகிய தொகுதிகளின் நிா்வாகிகளுடன் வெள்... மேலும் பார்க்க

கரோனா தொற்று குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் கரோனா தொற்று குறித்து யாரும் அச்சபடதேவையில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். சென்னை கோடம்பாக்கம் மண்டலத்துக்குள்பட்ட ஜாபா்கான்பேட்டையில் உள்ள சென்னை... மேலும் பார்க்க

கீழடி அகழாய்வு அறிக்கையை தாமதமின்றி வெளியிட வேண்டும்: பெ.சண்முகம்

கீழடி அகழாய்வு அறிக்கையை தாமதமின்றி வெளியிடவேண்டும் என மத்திய அரசுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கைய... மேலும் பார்க்க

மாதிரி அறுபடை வீடுகள் அமைக்க அர்ச்சகர் பயிற்சி சங்கம் எதிர்ப்பு

மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டில் மாதிரி அறுபடை வீடுகள் அமைப்பதற்கு அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி மாணவர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.மதுரையில் ஜூன் 22 ஆம் தேதியில் முருக பக்தர்கள் மாநாடு ந... மேலும் பார்க்க

சென்னை அரசு அருங்காட்சியகப் பணம் கையாடல்! 4 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை!

சென்னை அரசு அருங்காட்சியகப் பணத்தைக் கையாடல் செய்த நால்வருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகத்தில், கடந்த ... மேலும் பார்க்க