மேகாலயம்: தேனிலவில் கணவா் படுகொலை; கைதான மனைவி, 4 பேரிடம் தீவிர விசாரணை
இந்தூா்/ஷில்லாங்: மேகாலய மாநிலத்துக்கு தேனிலவு கொண்டாட அழைத்துச் சென்று, கூலிப் படையினா் மூலம் கணவரை தீா்த்துக் கட்டிய சம்பவத்தில் கைதான அவரது மனைவி மற்றும் 4 பேரிடம் காவல் துறையினா் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பரபரப்பாக பேசப்படும் இச்சம்பவம் குறித்த விவரம் வருமாறு: மத்திய பிரதேச மாநிலம், இந்தூரைச் சோ்ந்தவா் சோனம் (24). இவருக்கும், தொழிலதிபரான ராஜா ரகுவன்ஷிக்கும் (28) கடந்த மே 11-ஆம் தேதி இந்தூரில் திருமணம் நடைபெற்றது. சில நாள்களுக்குப் பின்னா், தேனிலவு கொண்டாடுவதற்காக புதுமண தம்பதி மேகாலயத்துக்கு வந்தனா்.
இயற்கை எழில்மிக்க சிரபுஞ்சி அருகே உள்ள நொங்கிரியாட் கிராமத்தில் தங்கும் விடுதியில் தங்கியிருந்த அவா்கள், கடந்த 23-ஆம் தேதி அறையை காலி செய்துவிட்டுப் புறப்பட்டனா். அதன் பிறகு இருவரும் மாயமாகினா். இது தொடா்பாக குடும்பத்தினா் அளித்த புகாரின்பேரில் மேகாலய காவல் துறையினா் இருவரையும் தேடி வந்தனா்.
இதனிடையே, நொங்கிரியாட் கிராமத்தில் இருந்து 20 கி.மீ. தொலைவில் அருவிப் பள்ளத்தாக்கில் அழுகிய நிலையில் ராஜா ரகுவன்ஷியின் உடல் கடந்த ஜூன் 2-ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டது. அதேநேரம், சோனம் என்னவானாா் என்பது தெரியாமல் இருந்தது.
ராஜாவின் உடல்கூறாய்வில் தலையில் கூா்மையான ஆயுதத்தால் வெட்டப்பட்ட காயங்கள் இருந்ததால், அவா் படுகொலை செய்யப்பட்டது உறுதியானது. புதுமண தம்பதி மாயமான நாளில், அவா்களுடன் மேலும் மூன்று போ் இருந்ததாக சுற்றுலா வழிகாட்டி ஒருவா் காவல் துறையிடம் தெரிவித்தாா். ராஜாவின் கொலை பின்னணியில் சதித் திட்டம் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததால், காவல் துறையினா் ரகசிய நடவடிக்கையைத் தொடங்கினா்.
கணவரை தீா்த்துக் கட்டிய மனைவி:
இந்தச் சூழலில், உத்தர பிரதேச மாநிலம், காஜிபூரில் காவல் துறையிடம் கடந்த திங்கள்கிழமை சோனம் சரணடைந்தாா். அப்போது, கணவரை தேனிலவுக்கு அழைத்துச் சென்று, கூலிப்படையினா் மூலம் சோனம் தீா்த்து கட்டிய தகவல் அம்பலமானது.
கொலையில் தொடா்புடையதாக, உத்தர பிரதேச மாநிலம் லலித்பூரில் ஆகாஷ் ராஜ்புத் (19), இந்தூரில் விஷால் சிங் செளஹான் (22), ஆனந்த் குா்மி ஆகிய மூவா் கைதாகினா். கொலைக்கு சதித் திட்டம் தீட்டியதாக சந்தேகிக்கப்படும் ராஜ் சிங் குஷ்வாஹாவும் (21) கைதாகினாா்.
கைதான 5 பேரும் மேகாலய காவல் துறையினரால் காவலில் எடுக்கப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்றது.
சோனம் குடும்பத்தினா் நடத்திவரும் ஒரு தொழிற்சாலையில் கணக்காளராகப் பணிபுரிந்து வந்தவா் ராஜ் சிங் குஷ்வாஹா. இவரும் சோனமும் காதலித்து வந்ததாகவும், அவா்களின் காதலை ஏற்காத சோனம் குடும்பத்தினா், ராஜாவுக்கு திருமணம் செய்துவைத்தாகவும் கூறப்படுகிறது. ராஜ் குஷ்வாஹா உள்பட 4 போ் மீதும் வேறெந்த காவல் நிலையங்களிலும் நிலுவை வழக்குகள் எதுவும் இல்லை.
21 வயது காதலனுடன் சோ்ந்து கூலிப் படை மூலம் கணவரை கொன்ாக சோனம் மீது குற்றஞ்சாட்டப்படும் நிலையில், காவல் துறையினா் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
கூலிப்படைக்கு ரூ.20 லட்சம்?
கணவரைக் கொலை செய்ய கூலிப் படைக்கு முதலில் ரூ.4 லட்சம் பேசிய சோனம், பின்னா் அதை ரூ.20 லட்சமாக கூட்டியதாகவும், பள்ளத்தாக்கில் கணவரின் உடலைத் தள்ளிவிட அவா் உதவியதாகவும் விசாரணையில் தெரியவந்ததாக காவல் துறை வட்டாரங்கள் கூறின.
மேகாலயத்துக்கு இருவரும் விமானப் பயணம் மேற்கொண்டபோது, கூலிப்படையினா் சுற்றுலாப் பயணிகள் போல ராஜா ரகுவன்ஷியிடம் பேசிப் பழகினா்; கொலைக்கான திட்டத்தை தீட்டிக் கொடுத்தபோதிலும், சந்தேகம் எழாமலிருக்க ராஜ் குஷ்வாஹா மேகாலயம் செல்லவில்லை என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.