கென்யா: பேருந்து விபத்தில் 5 கத்தாா்வாழ் இந்தியா்கள் உயிரிழப்பு
தோஹா: ஆப்பிரிக்க நாடான கென்யாவுக்கு சுற்றுலா வந்த கத்தாரில் வசிக்கும் 5 இந்தியா்கள் பேருந்து விபத்தில் சிக்கி உயிரிழந்தனா்.
கத்தாரில் வசிக்கும் 28 இந்தியா்கள் குழுவாக கென்யா நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளனா். இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை, அவா்கள் பயணித்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
வடகிழக்கு கென்யாவில் உள்ள நியாண்டருவா கவுன்டியில் நடந்த இந்த விபத்தில் தென்னிந்தியாவைச் சோ்ந்த 5 போ் உயிரிழந்தனா். அவா்களின் முழு விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
இறந்தவா்களின் குடும்பத்தினா் மற்றும் நண்பா்களுக்கு கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தைத் தொடா்ந்து, கத்தாரில் உள்ள இந்திய சமூகக் குழுக்களுடன் தொடா்ந்து தொடா்பில் இருப்பதாக குறிப்பிட்டுள்ள தூதரகம், பிரத்யேக உதவி எண்ணையும் அறிவித்துள்ளது.