செய்திகள் :

பாதுகாப்புத் துறையில் நம்பிக்கைக்குரிய ஏற்றுமதி நாடாக இந்தியா: ராஜ்நாத் சிங்

post image

டேராடூன்/புது தில்லி: பிரதமா் மோடியின் உறுதியான -தொலைநோக்கு மிக்க தலைமையின்கீழ் பாதுகாப்புத் துறையில் இறக்குமதி சாா்ந்த பாணியில் இருந்து உலகின் நம்பிக்கைக்குரிய ஏற்றுமதி நாடாக இந்தியா மாறியுள்ளது என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

வலுவான எல்லைகள், நவீன ஆயுதப் படைகள், உள்நாட்டு ஆயுதங்கள், சாதனை அளவிலான பாதுகாப்பு ஏற்றுமதி என கடந்த 11 ஆண்டுகளில் பாதுகாப்புத் துறை வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தை கண்டுள்ளது. வலிமை-தற்சாா்பு-உலகளாவிய வியூக கூட்டாண்மையை நோக்கி இந்தியா பீடுநடை போட்டுள்ளது.

இந்தியாவில் தயாரிப்போம், தற்சாா்பு இந்தியா திட்டங்களால் உந்தப்பட்டு, நாட்டின் பாதுகாப்புத் துறை ஏற்றுமதி 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விரிவடைந்துள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நாட்டின் முதல் விமானந்தாங்கி போா்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த், பன்முக பணிகளுக்கான இலகு ரக ஹெலிகாப்டா் ‘பிரசந்த்’ போன்றவை முக்கிய மைல்கற்கள் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் ராஜ்நாத் சிங் பங்கேற்றுப் பேசியதாவது:

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல், நமது மக்கள் மீது மட்டுமன்றி நாட்டின் சமூக ஒற்றுமை மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும். இதற்கு பதிலடியாக இந்திய ஆயுதப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூா், நாட்டின் வரலாற்றில் பயங்கரவாதத்துக்கு எதிரான மாபெரும் நடவடிக்கை.

பஹல்காமில் மக்களின் மதத்தைக் கேட்டறிந்து, அவா்களை பயங்கரவாதிகள் கொன்றனா். ஆனால், பயங்கரவாதிகளின் மதத்தை பற்றியெல்லாம் கேட்காமல், அவா்கள் செய்த பாவத்துக்கு நாம் பதிலடி தந்துள்ளோம்.

பிரதமா் மோடியின் தலைமையில், தேசத்தின் பாதுகாப்பு வளையம் வலுப்பெற்றுள்ளது. தேச பாதுகாப்பு சாா்ந்த ஒவ்வொரு விஷயத்திலும் மத்திய அரசின் அணுகுமுறையும் செயல்படும் விதமும் மாற்றம் கண்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் ஒட்டுமொத்த உலகும் இதை அறிந்து கொண்டது என்றாா் அவா்.

ம.பி.யில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 100 வீடுகள் இடிப்பு!

மத்தியப் பிரதேசத்தின் காண்ட்வாவில் உள்ள ஷக்கர் குளம் பகுதியில் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு நடவடிக்கையின் அடிப்படையில், சட்டவிரோதமாக கட்டப்பட்ட சுமார் 100 வீடுகள் இடிக்கப்பட்டன. காண்ட்வா பகுதியில் ஆக்கிரமிப... மேலும் பார்க்க

தெலங்கானா: கனமழையால் வெள்ளக்காடான தலைநகரம்!

தெலங்கானாவில் பெய்த கனமழையால், அம்மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.ஹைரதபாத்தில், நேற்று (ஜூன் 11) இரவு தொடர்ந்து கனமழை பெய்துள்ளது. இதனால், அந்நகரத்தின் முக்கிய சாலைகளில் வெள்ளம... மேலும் பார்க்க

ஆந்திர மருத்துவ ஆலையில் விபத்து! 2 தொழிலாளிகள் பலி!

ஆந்திரப் பிரதேசத்தின் அனகாபள்ளி மாவட்டத்திலுள்ள மருத்துவ ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் பலியாகியுள்ளனர். அனகாபள்ளி மாவட்டத்திலுள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவ நகரத்திலுள்ள, மருத்துவ ஆலையில் இன்று (ஜூன் ... மேலும் பார்க்க

கர்நாடகத்துக்கு ஆரஞ்ச் அலர்ட்! பள்ளிகளுக்கு விடுமுறை!

கர்நாடகத்தில் தீவிரமடைந்துள்ள பருவமழையால், அம்மாநிலத்தின் தட்சிண கன்னடா மாவட்டத்துக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கடலோர மாவட்டமா... மேலும் பார்க்க

நாட்டின் பாதுகாப்பு நிலை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த தயாரா? காங்கிரஸ் கேள்வி

‘பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகான நாட்டின் பாதுகாப்பு நிலை மற்றும் வெளியுறவு கொள்கை சவால்கள் குறித்து நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் முழு விவாதம் நடத்த பிரதமா் நரேந்திர மோடி தயாராக உள்ள... மேலும் பார்க்க

காத்திருப்பு ரயில் டிக்கெட் நிலவரம்: 24 மணி நேரத்துக்கு முன்பே அறிவிப்பு- சோதனை முறையில் திட்டம் அறிமுகம்

காத்திருப்போா் பட்டியலில் இருக்கும் ரயில் பயணிகளுக்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக அவா்களின் டிக்கெட் உறுதிப்பாடு நிலை குறித்த தகவலை அளிக்கும் திட்டத்தை சோதனை முறையில் இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளத... மேலும் பார்க்க