செய்திகள் :

கர்நாடகத்துக்கு ஆரஞ்ச் அலர்ட்! பள்ளிகளுக்கு விடுமுறை!

post image

கர்நாடகத்தில் தீவிரமடைந்துள்ள பருவமழையால், அம்மாநிலத்தின் தட்சிண கன்னடா மாவட்டத்துக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கடலோர மாவட்டமான தட்சிண கன்னடாவுக்கு, இந்திய வானிலை ஆய்வு மையம், ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, அம்மாவட்டத்தின் அங்கன்வாடி நிலையங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களுக்கு இன்று (ஜூன் 12) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அம்மாவட்டத்தில் அதிகப்படியான கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், பேரிடர் மீட்புப் படையினர் தயார்நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், மீனவர்கள், உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கடல் உள்ளிட்ட நீர்நிலைகளுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், அம்மாவட்டத்தின் ஒவ்வொரு தாலுக்காவிலும் கண்காணிப்பு மையங்கள் மற்றும் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: கேரளம்: சரக்குக் கப்பலில் மீண்டும் கரும்புகையால் பரபரப்பு!

விமான விபத்து: மருத்துவமனையில் துர்நாற்றம்! உடல்களை ஒப்படைப்பதில் சிக்கல்!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் இதுவரை 265 உடல்கள் வைக்கப்பட்டிருப்பதாகவும், மருத்துவமனையைச் சுற்றிலும் துர்நாற்றம் வீசுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஏர் இந்தியா விமான விபத்... மேலும் பார்க்க

விபத்துக்குள்ளான விமானத்தின் துணை விமானி 12த் பெயில் நடிகரின் உறவினர்!

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தை இயக்கிய துணை விமானி கிளைவ் குந்தர் தனது உறவினர் என்று நடிகர் விக்ராந்த் மாஸே தெரிவித்துள்ளார்.அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் நேற்று க... மேலும் பார்க்க

இஸ்ரேல் - ஈரான் போர்! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு!

ஈரானில் போர்ப் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அணுசக்தி நிலையங்கள், ராணுவ அலுவலகங்கள், ராணுவ தளவாடங்கள் உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்டவை குறித்து ஆபரேஷன்... மேலும் பார்க்க

விமானத்தில் அதிர்ஷ்டமான இருக்கையாக 11ஏ மீண்டும் நிரூபணம்! ஏன்? எப்படி?

அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 242 பேரில் 241 பேரும் பலியாக, ஒரே ஒருவர் உயிர் பிழைத்தார்.நிச்சயம், ஏர் இந்தியா விமான விபத்து குறித்து அறிந்... மேலும் பார்க்க

பேரழிவுக் காட்சிகளால் வேதனை! மோடி

விமான விபத்து நடைபெற்ற இடத்தின் பேரழிவுக் காட்சிகள் வேதனை அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.அகமதாபாத் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான இடத்தை இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி நேரில்... மேலும் பார்க்க

விமான விபத்து: உயர்நிலை குழுவுடன் மோடி ஆலோசனை!

அகமதாபாத்தில் விமான விபத்து குறித்து உயர்நிலை குழுவுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனையில் ஈடுபட்டார்.அகமதாபாத் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான இடத்தை இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி நேரில் ஆய்வு ... மேலும் பார்க்க