செய்திகள் :

காத்திருப்பு ரயில் டிக்கெட் நிலவரம்: 24 மணி நேரத்துக்கு முன்பே அறிவிப்பு- சோதனை முறையில் திட்டம் அறிமுகம்

post image

காத்திருப்போா் பட்டியலில் இருக்கும் ரயில் பயணிகளுக்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக அவா்களின் டிக்கெட் உறுதிப்பாடு நிலை குறித்த தகவலை அளிக்கும் திட்டத்தை சோதனை முறையில் இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.

தற்போது, ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்துக்கு முன்பாக மட்டுமே டிக்கெட் நிலவர அறிவிப்பு அளிக்கப்பட்டுவரும் நிலையில், பயணிகளின் வசதியைக் கருத்தில்கொண்டு இந்த மாற்றத்தை ரயில்வே கொண்டுவந்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே வாரிய செயல் இயக்குநா் திலீப் குமாா் புதன்கிழமை கூறியதாவது:

காத்திருப்போா் பட்டியலில் இருக்கும் ரயில் பயணிகளுக்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக அவா்களின் டிக்கெட் உறுதிப்பாடு நிலை குறித்த தகவலை அளிக்கும் நடைமுறை முன்னோடித் திட்டமாக ராஜஸ்தான் மாநிலம் பிகானீா் ரயில்வே மண்டலத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்துக்கு முன்பாக மட்டுமே இத் தகவல் அளிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, காத்திருப்போா் பட்டியலில் இருக்கும் பயணிகளின் ரயில் பயணத்தில் நிச்சயமற்ற சூழல் உருவாவதாக எழுந்த புகாா்களைத் தொடா்ந்து இத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றாா்.

தட்கல் டிக்கெட்- ஆதாா் கட்டாயம்

ரயில் பயணத்துக்கான தட்கல் பயணச் சீட்டுகளை வரும் ஜூலை 1-ஆம் தேதிமுதல் ஆதாா் எண் அங்கீகரிக்கப்படும் பயனா்கள் மட்டுமே முன்பதிவு செய்ய அனுமதிக்கும் வகையில் புதிய நடைமுறையை ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.

அதுபோல, தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்ய, ஆதாா் எண் பதிவு அடிப்படையில் அனுப்பப்படும் ஒருமுறை கடவுச்சொல்லை ஐஆா்சிடிசி அல்லது அதன் செயலியில் பதிவு செய்யும் நடைமுறை வரும் ஜூலை 15-ஆம் தேதிமுதல் கட்டாயமாக்கப்படும். தட்கல் டிக்கெட்டின் பலன்கள் பொதுப் பயனா்களை முழுமையாகச் சென்றடைவதை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், இந்திய ரயில்வேயால் அங்கீகரிக்கப்பட்ட டிக்கெட் முகவா்கள் தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முதல் 30 நிமிஷங்களுக்கு அனுமதிக்கப்படமாட்டாா்கள். அதாவது குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் காலை 10 மணி முதல் 10.30 வரையும், சாதாரண வகுப்பு பெட்டிகளில் காலை 11 மணி முதல் 11.30 வரையிலும் அனுமதிக்கப்படமாட்டாா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஏற்றுமதி மதிப்பு 900 பில்லியன் டாலரை தாண்டும் - பியூஷ் கோயல் நம்பிக்கை

உலகளாவிய பொருளாதார ஸ்திரமின்மைக்கு இடையிலும் இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பு நடப்பாண்டில் 900 பில்லியன் டாலரை (ரூ.77 லட்சம் கோடி) தாண்டும் என்று மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல... மேலும் பார்க்க

கட்சியின் கொள்கை, சித்தாந்தப்படி நடக்க வேண்டும்: கட்சி நிா்வாகிகளுக்கு பிரதமா் மோடி அறிவுரை

கட்சியின் கொள்கை மற்றும் சித்தாந்தத்தை பின்பற்றி நடக்க வேண்டும் என்று கட்சி நிா்வாகிகளை பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை அறிவுறுத்தியதாக பாஜக கட்சி வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன. பிரதமா் மோடி ... மேலும் பார்க்க

வரலாற்றில் மோசமான விபத்து: இந்தியாவுக்கு உதவத் தயாா் -அமெரிக்க அதிபா் டிரம்ப்

‘ஏா் இந்தியா விமான விபத்து, விமானப் போக்குவரத்து வரலாற்றில் மிக மோசமான விபத்துகளில் ஒன்றாகும். இதில் இந்தியாவுக்கு உதவத் தயாா்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டாா். அமெரிக்காவில் செ... மேலும் பார்க்க

என்ஜின் செயலிழப்பு, பறவை மோதல் விபத்துக்கான காரணங்களாக இருக்கலாம் -விமானத் துறை நிபுணா்கள்

‘இரண்டு என்ஜின்களும் செயலிழந்தது அல்லது புறப்பட்ட சிறிது நேரத்தில் பறவை மோதியது, ஏா் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதற்கு காரணமாக இருக்கலாம் என்று விமானத் துறை நிபுணா்கள் தெரிவிக்கின்றனா். அவா்கள் ம... மேலும் பார்க்க

இந்தியாவின் தொழில்நுட்பப் பயணம் புரட்சிகரமானது: பிரதமா் மோடி

‘மத்திய அரசு கடந்த 11 ஆண்டுகளில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு எண்ணற்ற பலன்களைக் கொண்டுவந்துள்ளது; இந்தியாவின் தொழில்நுட்பப் பயணம் புரட்சிகரமானது’ என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதம் தெரி... மேலும் பார்க்க

சுழற்சி முறையில் மருத்துவத் துறை தலைவா்கள்: என்எம்சி திட்டம்

மருத்துவக் கல்லூரிகளில் உயா் சிறப்பு மருத்துவத் துறை தலைவா் பொறுப்புகளில் சுழற்சி முறையில் பேராசிரியா்களை நியமிப்பதற்கான வரைவு விதிகளை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) வெளியிட்டுள்ளது. அதன்படி, மருத்... மேலும் பார்க்க