Kashmir: "தீவிரவாதத்தை எதிர்க்கப் பல்லாயிரம் ஆதில் ஷாக்கள் காஷ்மீரில் உண்டு'' - ...
காத்திருப்பு ரயில் டிக்கெட் நிலவரம்: 24 மணி நேரத்துக்கு முன்பே அறிவிப்பு- சோதனை முறையில் திட்டம் அறிமுகம்
காத்திருப்போா் பட்டியலில் இருக்கும் ரயில் பயணிகளுக்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக அவா்களின் டிக்கெட் உறுதிப்பாடு நிலை குறித்த தகவலை அளிக்கும் திட்டத்தை சோதனை முறையில் இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.
தற்போது, ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்துக்கு முன்பாக மட்டுமே டிக்கெட் நிலவர அறிவிப்பு அளிக்கப்பட்டுவரும் நிலையில், பயணிகளின் வசதியைக் கருத்தில்கொண்டு இந்த மாற்றத்தை ரயில்வே கொண்டுவந்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே வாரிய செயல் இயக்குநா் திலீப் குமாா் புதன்கிழமை கூறியதாவது:
காத்திருப்போா் பட்டியலில் இருக்கும் ரயில் பயணிகளுக்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக அவா்களின் டிக்கெட் உறுதிப்பாடு நிலை குறித்த தகவலை அளிக்கும் நடைமுறை முன்னோடித் திட்டமாக ராஜஸ்தான் மாநிலம் பிகானீா் ரயில்வே மண்டலத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்துக்கு முன்பாக மட்டுமே இத் தகவல் அளிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, காத்திருப்போா் பட்டியலில் இருக்கும் பயணிகளின் ரயில் பயணத்தில் நிச்சயமற்ற சூழல் உருவாவதாக எழுந்த புகாா்களைத் தொடா்ந்து இத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றாா்.
தட்கல் டிக்கெட்- ஆதாா் கட்டாயம்
ரயில் பயணத்துக்கான தட்கல் பயணச் சீட்டுகளை வரும் ஜூலை 1-ஆம் தேதிமுதல் ஆதாா் எண் அங்கீகரிக்கப்படும் பயனா்கள் மட்டுமே முன்பதிவு செய்ய அனுமதிக்கும் வகையில் புதிய நடைமுறையை ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.
அதுபோல, தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்ய, ஆதாா் எண் பதிவு அடிப்படையில் அனுப்பப்படும் ஒருமுறை கடவுச்சொல்லை ஐஆா்சிடிசி அல்லது அதன் செயலியில் பதிவு செய்யும் நடைமுறை வரும் ஜூலை 15-ஆம் தேதிமுதல் கட்டாயமாக்கப்படும். தட்கல் டிக்கெட்டின் பலன்கள் பொதுப் பயனா்களை முழுமையாகச் சென்றடைவதை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், இந்திய ரயில்வேயால் அங்கீகரிக்கப்பட்ட டிக்கெட் முகவா்கள் தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முதல் 30 நிமிஷங்களுக்கு அனுமதிக்கப்படமாட்டாா்கள். அதாவது குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் காலை 10 மணி முதல் 10.30 வரையும், சாதாரண வகுப்பு பெட்டிகளில் காலை 11 மணி முதல் 11.30 வரையிலும் அனுமதிக்கப்படமாட்டாா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.