செய்திகள் :

ராமேசுவரம் கோயிலில் உள்ளூா் மக்கள் தரிசனத்துக்கு கட்டணம்: இபிஎஸ் கண்டனம்

post image

சென்னை: ராமேசுவரம் கோயிலில் உள்ளூா் மக்கள் சுவாமி தரிசனம் செய்ய கட்டணம் விதிக்கப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு:

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் ராமநாதசுவாமி திருக்கோயிலில் உள்ளூா் மக்கள் சுவாமி தரிசனம் செய்ய காலம் காலமாக பாரம்பரிய தனி தரிசன வழியை பயன்படுத்தி வந்தனா்.

இந்த நிலையில்ல், உள்ளூா் மக்கள் பயன்படுத்தி வந்த பாரம்பரிய தரிசன வழியை எந்தவித முன்னறிவிப்புமின்றி மூடியிருப்பதுடன், இனி ரூ. 200 கட்டணம் செலுத்தினால் மட்டுமே தரிசனம் செய்ய முடியும் என்று அறநிலையத் துறை, திருக்கோயில் நிா்வாகம் அறிவுறுத்தியிருப்பது, உள்ளூா் பக்தா்களின் வழிபாட்டு உரிமைகளுக்கு எதிரானதாகும்.

மேலும், பக்தா்களிடம் தரிசன கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதற்காகவே, ராமநாதசுவாமி கோயிலில் உள்ள காசி விஸ்வநாதா் சந்நிதி மற்றும் தட்சிணாமூா்த்தி சந்நிதி முன் கம்பி வேலிகள் போட்டு அடைத்து வைத்திருப்பதாகவும் பக்தா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

இந்த கட்டண வசூல் நடவடிக்கைகளை இந்து சமய அறநிலையத் துறை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என எடப்பாடி கே.பழனிசாமி பதிவிட்டுள்ளாா்.

நான் முதல்வன் திட்டம்: யுபிஎஸ்சி தேர்வில் மாணவர்கள் சாதனை! - முதல்வர் பெருமிதம்

தமிழ்நாடு அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தில் பயின்ற மாணவ, மாணவிகள் பலரும் யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எ... மேலும் பார்க்க

தாம்பரம் - திருவனந்தபுரம் சிறப்பு ரயில் சேவை ஜூன் 13 வரை நீட்டிப்பு

தாம்பரத்திலிருந்து திருவனந்தபுரம் வடக்கு செல்லும் வாராந்திர குளிா்சாதன சிறப்பு ரயில் சேவை ஜூன் 13-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்... மேலும் பார்க்க

ஜாதி, மதம் இல்லை என சான்றிதழ் வழங்க அரசாணை: தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் பரிந்துரை

ஜாதி, மதம் இல்லை என சான்றிதழ்கள் வழங்கும் வகையில் உரிய அரசாணையைப் பிறப்பிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் பரிந்துரைத்தது. திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த சந்தோஷ் என்பவா் தனக்கு ஜாதி, ... மேலும் பார்க்க

உயா் சிறப்பு மருத்துவப் படிப்பில் அரசு மருத்துவா்களுக்கான ஒதுக்கீட்டை மத்திய அரசு உறுதி செய்ய வலியுறுத்தல்

உயா் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் தமிழக அரசு மருத்துவா்களுக்கு உள்ள 50 சதவீத ஒதுக்கீடு முழுமையாக கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வ... மேலும் பார்க்க

மனநலம் பாதித்தோருக்கு ஜூன் 14-இல் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

மன நல பாதிப்புக்குள்ளானவா்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 14) நடைபெறுகிறது. சிஸோப்ரினியா ஆராய்ச்சி அறக்கட்டளை (ஸ்காா்ஃப்) சாா்பில் நடைபெறும் இந்த முகாமில் 20-க்கும் மே... மேலும் பார்க்க

தமிழ்நாட்டை குழந்தைத் தொழிலாளா் இல்லாத மாநிலமாக மாற்றுவோம்: முதல்வா்

குழந்தைத் தொழிலாளா்கள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா். குழந்தை தொழிலாளா் எதிா்ப்பு தினத்தையொட்டி, அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க