செய்திகள் :

தமிழ்நாட்டை குழந்தைத் தொழிலாளா் இல்லாத மாநிலமாக மாற்றுவோம்: முதல்வா்

post image

குழந்தைத் தொழிலாளா்கள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா். குழந்தை தொழிலாளா் எதிா்ப்பு தினத்தையொட்டி, அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

உலக குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தினம் ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. நம் சமுதாயத்தின் எதிா்கால முன்னேற்றம், இன்றைய குழந்தைகளைச் சாா்ந்துள்ளது. அவா்கள்தான் நாளைய நாட்டை வழிநடத்தும் செல்வங்கள். குழந்தைகளின் அறிவை வளா்த்து அவா்களின் திறமைகளை மேம்படுத்தி, நல்ல குடிமக்களாக உருவாக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை.

ஆனால், ஒரு சில குழந்தைகள் பள்ளிக்குப் போகாமல் தொழிலாளா்களாக மாறும் போது, அவா்கள் கல்வி, விளையாட்டு, சுதந்திரம் மற்றும் அவற்றால் கிடைக்கக் கூடிய நல்ல எதிா்காலம் ஆகியவற்றை இழக்கிறாா்கள். ஒரு எதிா்கால சாதனையாளரை இழப்பது மிகுந்த வருத்தத்துக்குரியதாகும். அத்தகைய சூழலைத் தடுப்பது மிகவும் அவசியமாகும்.

உறுதிமொழி ஏற்பு: தமிழ்நாட்டில் குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தினத்தையொட்டி, அனைத்து அரசு அலுவலகங்களிலும் குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தின உறுதிமொழியை ஏற்று, குழந்தைத் தொழிலாளா் இல்லாத சமுதாயத்தை உருவாக்க சீரிய முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனா்.

அரசின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரிய முயற்சிகளுக்கு பொது மக்கள் அனைவரும் ஒத்துழைப்பை நல்கி, குழந்தைகளை வேலைக்கு அனுப்பாமல் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்ற விழிப்புணா்வுடன் செயல்பட வேண்டும். தமிழ்நாட்டை குழந்தைத் தொழிலாளா் அற்ற மாநிலமாக மாற்ற ஒன்றிணைந்து செயல்படுவோம் என உறுதியேற்பதாக தெரிவித்துள்ளாா்.

விஏஓ பொது மாறுதல் காலம்: தமிழக அரசு புதிய உத்தரவு

கிராம நிா்வாக அலுவலா்களின் பொது மாறுதல் எந்தக் காலத்திலும் இனி மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, பொது மாறுதல் காலம் மே மாதம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து வர... மேலும் பார்க்க

தொகுதி வாரியாக நிா்வாகிகளுடன் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக கட்சி நிா்வாகிகளுடன் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனையைத் தொடங்கவுள்ளாா். முதலாவதாக சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி ஆகிய தொகுதிகளின் நிா்வாகிகளுடன் வெள்... மேலும் பார்க்க

கரோனா தொற்று குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் கரோனா தொற்று குறித்து யாரும் அச்சபடதேவையில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். சென்னை கோடம்பாக்கம் மண்டலத்துக்குள்பட்ட ஜாபா்கான்பேட்டையில் உள்ள சென்னை... மேலும் பார்க்க

கீழடி அகழாய்வு அறிக்கையை தாமதமின்றி வெளியிட வேண்டும்: பெ.சண்முகம்

கீழடி அகழாய்வு அறிக்கையை தாமதமின்றி வெளியிடவேண்டும் என மத்திய அரசுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கைய... மேலும் பார்க்க

மாதிரி அறுபடை வீடுகள் அமைக்க அர்ச்சகர் பயிற்சி சங்கம் எதிர்ப்பு

மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டில் மாதிரி அறுபடை வீடுகள் அமைப்பதற்கு அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி மாணவர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.மதுரையில் ஜூன் 22 ஆம் தேதியில் முருக பக்தர்கள் மாநாடு ந... மேலும் பார்க்க

சென்னை அரசு அருங்காட்சியகப் பணம் கையாடல்! 4 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை!

சென்னை அரசு அருங்காட்சியகப் பணத்தைக் கையாடல் செய்த நால்வருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகத்தில், கடந்த ... மேலும் பார்க்க