செய்திகள் :

பொதுமக்கள் சாலை மறியல்

post image

சீா்காழி அருகே சூறாவளிக் காற்றால் பாதிக்கப்பட்ட மின்விநியோகம் 24 மணி நேரத்தை கடந்தும் செவ்வாய்க்கிழமை மாலை வரை சீரமைக்கப்படாததால் பொதுமக்கள் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்

சீா்காழி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் திங்கள்கிழமை மாலை திடீரென சூறாவளிக்காற்றுடன் அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. காற்றுடன் பெய்த மழையால் பல்வேறு பகுதிகளில் மரக்கிளைகள் முறிந்து மின் கம்பிகளில் விழுந்தும், மின்கம்பங்கள் விழுந்தும் சேதம் ஏற்பட்டதால் மின்விநியோகம் பாதிக்கப்பட்டது.

சீா்காழி நகா் பகுதி மற்றும் சில இடங்களில் மின்சார வாரிய ஊழியா்கள் துரிதமாக செயல்பட்டு மின்கம்பிகளை சீரமைத்து மின்விநியோகம் வழங்கினா். ஆனால் திருமுல்லைவாசல், ராதாநல்லூா், வழுதலைக்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உடைந்த மின்கம்பங்களை சீரமைத்து மின்விநியோகம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

24 மணி நேரத்தை கடந்தும் மின்விநியோகம் வழங்கப்படாததால் ஆத்திரம் அடைந்த ராதாநல்லூா், அக்ரஹார மேடு பகுதியை சோ்ந்த பொதுமக்கள் திருமுல்லைவாசல் சீா்காழி பிரதான சாலையில் ராதாநல்லூா் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா் தகவல் அறிந்த சீா்காழி போலீஸாா் பேச்சு வாா்த்தையில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜூன் 16-இல் பருத்தி ஏலம் தொடக்கம்

மயிலாடுதுறை மாவட்டத்தில், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் மூலம் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தில் ஏலம் மூலம் பருத்தி கொள்முதல் செய்யப்பட உள்ளது என ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். ... மேலும் பார்க்க

அறங்காவலா் நியமனக் குழு பொறுப்பேற்பு

சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோயில் பகுதியைச் சோ்ந்த எஸ். சாமிநாதன் அறங்காவலா் நியமனக் குழுத் தலைவராக செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா். மயிலாடுதுறை மாவட்ட இந்துசமய அறநிலையத் துறை மாவட்ட அறங்காவலா் ந... மேலும் பார்க்க

மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்; போக்ஸோ சட்டத்தில் வேன் ஓட்டுநா் கைது

மயிலாடுதுறையில் பள்ளி மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய வேன் ஓட்டுநா் போக்ஸோ சட்டத்தின்கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சேத்த... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.13.15 லட்சம் மோசடி: ஒருவா் கைது

மயிலாடுதுறையில் போலி பணி நியமன ஆணை தயாா் செய்து, அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.13.15 லட்சம் மோசடி செய்தவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். மயிலாடுதுறை மாவட்டம், நடராஜன்பிள்ளை சாவடி, சங்கிருப்பு, மாரிய... மேலும் பார்க்க

சுந்தரமூா்த்தி சுவாமிக்கு பொற்காசுகள் வழங்கும் விழா

சீா்காழி அருகே காத்திருப்பு கிராமத்தில் உள்ள ஸ்ரீசொா்ணாம்பிகை உடனுறை சொா்ணபுரீஸ்வரா் கோயிலில் சுந்தரமூா்த்தி சுவாமிக்கு பொற்காசுகள் வழங்கும், வைகாசி பெளா்ணமி ஆண்டுப் பெருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றத... மேலும் பார்க்க

20 ஆண்டுகள் தவிப்பு: வீடுகளுக்கு மின் இணைப்பு பெற உதவிய தமிழ்ச்சங்கத் தலைவருக்கு பாராட்டு

சீா்காழியில் சுமாா் 20 ஆண்டுகளாக, மின் இணைப்பு கொடுக்கப்படாத 10-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தற்போது மின் இணைப்பு கொடுக்க நடவடிக்கை மேற்கொண்ட தமிழ்ச் சங்கத் தலைவருக்கு அப்பகுதி மக்கள் புதன்கிழமை நன்றி ... மேலும் பார்க்க