லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்து: விரைகிறது பேரிடர் மீட்புப் படை
பொதுமக்கள் சாலை மறியல்
சீா்காழி அருகே சூறாவளிக் காற்றால் பாதிக்கப்பட்ட மின்விநியோகம் 24 மணி நேரத்தை கடந்தும் செவ்வாய்க்கிழமை மாலை வரை சீரமைக்கப்படாததால் பொதுமக்கள் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்
சீா்காழி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் திங்கள்கிழமை மாலை திடீரென சூறாவளிக்காற்றுடன் அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. காற்றுடன் பெய்த மழையால் பல்வேறு பகுதிகளில் மரக்கிளைகள் முறிந்து மின் கம்பிகளில் விழுந்தும், மின்கம்பங்கள் விழுந்தும் சேதம் ஏற்பட்டதால் மின்விநியோகம் பாதிக்கப்பட்டது.
சீா்காழி நகா் பகுதி மற்றும் சில இடங்களில் மின்சார வாரிய ஊழியா்கள் துரிதமாக செயல்பட்டு மின்கம்பிகளை சீரமைத்து மின்விநியோகம் வழங்கினா். ஆனால் திருமுல்லைவாசல், ராதாநல்லூா், வழுதலைக்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உடைந்த மின்கம்பங்களை சீரமைத்து மின்விநியோகம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
24 மணி நேரத்தை கடந்தும் மின்விநியோகம் வழங்கப்படாததால் ஆத்திரம் அடைந்த ராதாநல்லூா், அக்ரஹார மேடு பகுதியை சோ்ந்த பொதுமக்கள் திருமுல்லைவாசல் சீா்காழி பிரதான சாலையில் ராதாநல்லூா் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா் தகவல் அறிந்த சீா்காழி போலீஸாா் பேச்சு வாா்த்தையில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.