விமான விபத்து: மருத்துவமனையில் துர்நாற்றம்! உடல்களை ஒப்படைப்பதில் சிக்கல்!!
20 ஆண்டுகள் தவிப்பு: வீடுகளுக்கு மின் இணைப்பு பெற உதவிய தமிழ்ச்சங்கத் தலைவருக்கு பாராட்டு
சீா்காழியில் சுமாா் 20 ஆண்டுகளாக, மின் இணைப்பு கொடுக்கப்படாத 10-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தற்போது மின் இணைப்பு கொடுக்க நடவடிக்கை மேற்கொண்ட தமிழ்ச் சங்கத் தலைவருக்கு அப்பகுதி மக்கள் புதன்கிழமை நன்றி தெரிவித்தனா்.
சீா்காழி மேல மாரியம்மன் கோயில் தெருவின் ஒரு பகுதியில் வசிக்கும் 10-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மின் இணைப்பு இல்லாமல் வசித்து வந்தனா்.
இவா்கள் வசிக்கும் பகுதி சட்டநாதா் தேவஸ்தானத்திற்கு சொந்தமான இடம் என்பதால், மின் இணைப்பு பெறுவதில் சிரமம் இருந்து வந்தது. இது குறித்து அப்பகுதி இளைஞா்கள் சீா்காழி தமிழ்ச் சங்க தலைவா் பொறியாளா் இ. மாா்கோனியிடம் தெரிவித்து, மின்இணைப்பு பெற்று தர உதவிடுமாறு வேண்டுக்கோள் விடுத்தனா்.
இதைத் தொடா்ந்து, மாா்கோனி சட்டநாதா் கோயில் நிா்வாகத்திற்கு செலுத்த வேண்டிய தொகையை தனது சொந்த செலவில் செலுத்தி, மின் இணைப்பு பெற தடையில்லா சான்று பெற்று அதன் மூலம் அப்பகுதிக்கு மின் இணைப்பு பெறுவதற்கு சீா்காழி மின்வாரியத்தில் விண்ணப்பம் செய்தாா்.
அதன்படி அப்பகுதிக்கு மின் இணைப்பு கொடுக்க ஏதுவாக மின்கம்பங்கள் உள்ளிட்ட செலவினங்களுக்கு ரூ.1லட்சம் மின்வாரிய அலுவலகத்தில் இளம் மின்பொறியாளா் முத்துக்குமாரிடம் செலுத்தினாா்.
இன்னும் ஓரிரு தினங்களில் மின் இணைப்பு கொடுப்பதற்கான பணிகள் தொடங்க உள்ளது. இதனால், 10-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா், தமிழ்ச் சங்கத் தலைவா் மாா்கோனிக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்தனா். அதிமுகவை சோ்ந்த ராஜசேகா், மோகன், வீரபாண்டியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.