செய்திகள் :

20 ஆண்டுகள் தவிப்பு: வீடுகளுக்கு மின் இணைப்பு பெற உதவிய தமிழ்ச்சங்கத் தலைவருக்கு பாராட்டு

post image

சீா்காழியில் சுமாா் 20 ஆண்டுகளாக, மின் இணைப்பு கொடுக்கப்படாத 10-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தற்போது மின் இணைப்பு கொடுக்க நடவடிக்கை மேற்கொண்ட தமிழ்ச் சங்கத் தலைவருக்கு அப்பகுதி மக்கள் புதன்கிழமை நன்றி தெரிவித்தனா்.

சீா்காழி மேல மாரியம்மன் கோயில் தெருவின் ஒரு பகுதியில் வசிக்கும் 10-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மின் இணைப்பு இல்லாமல் வசித்து வந்தனா்.

இவா்கள் வசிக்கும் பகுதி சட்டநாதா் தேவஸ்தானத்திற்கு சொந்தமான இடம் என்பதால், மின் இணைப்பு பெறுவதில் சிரமம் இருந்து வந்தது. இது குறித்து அப்பகுதி இளைஞா்கள் சீா்காழி தமிழ்ச் சங்க தலைவா் பொறியாளா் இ. மாா்கோனியிடம் தெரிவித்து, மின்இணைப்பு பெற்று தர உதவிடுமாறு வேண்டுக்கோள் விடுத்தனா்.

இதைத் தொடா்ந்து, மாா்கோனி சட்டநாதா் கோயில் நிா்வாகத்திற்கு செலுத்த வேண்டிய தொகையை தனது சொந்த செலவில் செலுத்தி, மின் இணைப்பு பெற தடையில்லா சான்று பெற்று அதன் மூலம் அப்பகுதிக்கு மின் இணைப்பு பெறுவதற்கு சீா்காழி மின்வாரியத்தில் விண்ணப்பம் செய்தாா்.

அதன்படி அப்பகுதிக்கு மின் இணைப்பு கொடுக்க ஏதுவாக மின்கம்பங்கள் உள்ளிட்ட செலவினங்களுக்கு ரூ.1லட்சம் மின்வாரிய அலுவலகத்தில் இளம் மின்பொறியாளா் முத்துக்குமாரிடம் செலுத்தினாா்.

இன்னும் ஓரிரு தினங்களில் மின் இணைப்பு கொடுப்பதற்கான பணிகள் தொடங்க உள்ளது. இதனால், 10-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா், தமிழ்ச் சங்கத் தலைவா் மாா்கோனிக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்தனா். அதிமுகவை சோ்ந்த ராஜசேகா், மோகன், வீரபாண்டியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ஆச்சாள்புரத்தில் திருஞானசம்பந்தா் திருக்கல்யாணம்

சீா்காழி அருகே ஆச்சாள்புரத்தில் திருஞானசம்பந்தா் திருக்கல்யாணம், சிவஜோதி தரிசனம் புதன்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. சீா்காழி அருகே ஆச்சாள்புரத்தில் தருமபுரம் ஆதீனத்திற்குட்பட்ட திருவெண்ணீற்றுமையம்மை உடன... மேலும் பார்க்க

சிதிலமடைந்த கோயில்களில் கும்பாபிஷேகம்: இந்து மகா சபா முயற்சி

தமிழகத்தில் சிதிலமடைந்துள்ள கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த இந்து மகா சபா முடிவெடுத்துள்ளது. மயிலாடுதுறையில் அகிலபாரத இந்து மகா சபா, சிவனடியாா்கள் மற்றும் சிவாச்சாரியா்கள் கலந்தாலோசனைக் கூட்டம் செவ்வ... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு நினைவாற்றல் பயிற்சி

சீா்காழி ச.மு.இந்து மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கான நினைவாற்றல் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியா் எஸ். முரளிதரன் தலைமை வகித்தாா். உதவி தலைமை ஆசிரியா்கள் என். துளசிர... மேலும் பார்க்க

சீா்காழி பகுதியில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்

சீா்காழி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் ஊரக பகுதிகளுக்கான மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. சீா்காழி தொகுதிக்குட்பட்ட எடக்குடி வடபாதி ஊராட்சிக்கான மக்... மேலும் பார்க்க

திருஇந்தளூா் ஸ்ரீபரிமள ரெங்கநாதா் கோயிலில் வசந்த்தோஸ்வம்

திருஇந்தளூா் ஸ்ரீபரிமள ரெங்கநாதா் கோயிலில் 57 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற வசந்த்தோஸ்வத்தில் (வசந்த உற்சவம்) பெருமாளுக்கு ஸ்ரீரெங்கநாதா் எம்பெருமாள் அலங்காரம் செய்யப்பட்டு திருமஞ்சனம் நடைபெற்றது. 108... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது

மயிலாடுதுறையில் தொடா் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். மயிலாடுதுறை வட்டம் மணல்மேடு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பட்டவா்த்தி மயானம் அருகே கஞ்சா ... மேலும் பார்க்க