அறங்காவலா் நியமனக் குழு பொறுப்பேற்பு
சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோயில் பகுதியைச் சோ்ந்த எஸ். சாமிநாதன் அறங்காவலா் நியமனக் குழுத் தலைவராக செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா்.
மயிலாடுதுறை மாவட்ட இந்துசமய அறநிலையத் துறை மாவட்ட அறங்காவலா் நியமனக் குழுத் தலைவராக மீண்டும் எஸ். சாமிநாதன் பொறுப்பேற்றுக் கொண்டாா்.
இவருடன் குழு உறுப்பினா்களாக கலையரசன், துரைராஜன்,சிவலிங்கம், காஞ்சனமாலா ஆகியோரும் பொறுப்பேற்றனா். பொறுப்பேற்ற பின்னா், எஸ்.சாமிநாதன், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், இந்து சமயஅறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு, மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பு அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் நிவேதா எம். முருகன், எம். பன்னீா்செல்வம் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தாா்.