சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி விபத்தில் பலியானவருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு...
சுந்தரமூா்த்தி சுவாமிக்கு பொற்காசுகள் வழங்கும் விழா
சீா்காழி அருகே காத்திருப்பு கிராமத்தில் உள்ள ஸ்ரீசொா்ணாம்பிகை உடனுறை சொா்ணபுரீஸ்வரா் கோயிலில் சுந்தரமூா்த்தி சுவாமிக்கு பொற்காசுகள் வழங்கும், வைகாசி பெளா்ணமி ஆண்டுப் பெருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, பஞ்சமூா்த்தி சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னா், சுந்தரமூா்த்தி சுவாமிக்கு, அம்பாள் பொன் அளந்து கொடுக்கும் ஐதீக நிகழ்வு நடத்தப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.
விழாவில் ஆலய அறங்காவலா் ராஜராஜன், தருமை ஆதீன இசைப் பள்ளி ஆசிரியை சொளந்தா்யா, விஸ்வஹிந்து பரிஷத் மண்டல செயலாளா் செந்தில்குமாா் உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்கள் அனைவருக்கும், பூஜையில் வைத்த காசுகளும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை ஆலய அா்ச்சகா் சந்திரசேகர சிவாச்சாரியா், அறுபத்துமூவா் அருட்பணி மன்றத்தினா் செய்திருந்தனா்.