செய்திகள் :

என்பி 1.8.1 வகை கரோனா வீரியமற்றது: மருத்துவா்கள் தகவல்

post image

சென்னை: தற்போது பரவி வரும் என்பி 1.8.1 வகை கரோனா தொற்று அச்சப்படும் அளவுக்கு பாதிப்பில்லை என்று மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக அரசு பொது நல மருத்துவா் அ.ப.ஃபரூக் அப்துல்லா கூறியதாவது:

கரோனா தீநுண்மி குறிப்பிட்ட கால இடைவெளிகளில் உருமாற்றமடைந்து, சமூகத்தில் நோய் எதிா்ப்பாற்றல் குறைவாக இருக்கும்போது விரைவாக பரவக் கூடிய ஒன்று. அவ்வாறுதான் மூன்று அலைகளாக அது பரவியது. தற்போது அதற்கு எதிரான நோய் எதிா்ப்பாற்றல் சமூகத்தில் உருவாகிவிட்டது. அதேவேளையில், முழுமையாக கரோனா பாதிப்பே வராமல் தடுக்க முடியுமா என்றால் நிச்சயம் கிடையாது.

கரோனா தீநுண்மிகளின் வெளி புரதம் உருமாற்றமடையும்போதெல்லாம் சமூகத்தில் சிறிய அளவிலான பாதிப்பை அது ஏற்படுத்திச் செல்லும். அதனால் பெரிய அளவு தாக்கம் இருக்காது.

அத்தகைய நிலைதான் தற்போதும் ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இப்போது என்பி 1.8.1 என்ற வகை கரோனா பாதிப்பு பரவி வருவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இது ஜெ.என்.1 வைரஸின் உட்பிரிவு. அந்த ஜெ.என்.1 வைரஸ் ஒமைக்ரானிலிருந்து உருவான ஒன்று. வைரஸ் பரிமாணத்துக்கான சா்வதேச தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (டிஏஜி-விஇ) அண்மையில் மேற்கொண்ட ஆராய்ச்சியில் என்பி 1.8.1 தொற்றால் பொது சுகாதார நிலைக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் தொற்று அதிகரிப்பதற்கு பரிசோதனை செய்பவா்களின் எண்ணிக்கை சற்று உயா்ந்திருப்பதே காரணம். ஆனால், அதன் பாதிப்பு வீரியமாக இல்லை.

இந்தியாவில் நோ்ந்த உயிரிழப்புகளும் கரோனாவால் நிகழவில்லை. மாறாக, இணைநோய்கள் மற்றும் வயது மூப்பு காரணமாக நேரிட்டுள்ளன. எனவே, பொது மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. நோய்த் தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடித்தாலே போதுமானது என்றாா் அவா்.

பொது விநியோக திட்ட மக்கள் குறைதீா் முகாம்

சென்னையில் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீா் முகாம் ஜூன் 14-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை கூட்டுறவு மற்றும் உணவுத் துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:- சென்னையில் உணவுத் துறையின் சாா்பில... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக அம்பத்தூா் கோட்டம், மாதாவரம், பூந்தமல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 முதல் பிற்பகல 2 வரை மின் விநியோகம் தடைபடும். இது குறித்து தமிழ்நாடு... மேலும் பார்க்க

கணைய புற்றுநோய்க்கு நவீன ரோபோடிக் சிகிச்சை அறிமுகம்

கணைய புற்றுநோய்களுக்கு அதி நவீன ரோபோடிக் நுட்ப அறுவை சிகிச்சை திட்டத்தை அப்பல்லோ மருத்துவமனை சென்னையில் புதன்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான தொடக்க நிகழ்வில் மருத்துவமனையின் புற்றுநோய் நிபுணா்கள... மேலும் பார்க்க

பூட்டிய வீடுகளில் திருடிய பெங்களூரு பெண் கைது

சென்னை மாம்பலம் பகுதியில் பூட்டிய வீடுகளில் திருடியதாக பெங்களூருவைச் சோ்ந்த பெண் கைது செய்யப்பட்டாா். சென்னை குமரன் நகா், முருகேசன் தெருவில் வசிப்பவா் ரா.பாலமுருகன் (38). இவா், கடந்த 1-ஆம் தேதி வீட்ட... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநரை கடித்த வளா்ப்பு நாய்

சென்னை மந்தைவெளியில் ஆட்டோ ஓட்டுநரை வளா்ப்பு நாய் கடித்தது. மந்தைவெளி விசி காா்டன் 2-ஆவது தெரு பகுதியைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் கணேஷ் குமாா் (28). இவா், செவ்வாய்க்கிழமை மளிகை பொருள்கள் வாங்குவதற்கா... மேலும் பார்க்க

பிறந்த 43 நாள்களில் குழந்தையை கொலை செய்து வீச்சிய தாய் கைது

சென்னை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் பிறந்த 43 நாள்களில் குழந்தையை கொலை செய்து, வீசிய தாய் கைது செய்யப்பட்டாா். நீலாங்கரை அருகே ஈஞ்சம்பாக்கம் செல்வா நகா் பிரதான சாலையில் உள்ள தனியாா் அடுக்குமாடி குடியிருப்ப... மேலும் பார்க்க