செய்திகள் :

மதுரை : சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; போக்சோ வழக்கு - குற்றம்சாட்டப்பட்டவர் தற்கொலை

post image

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சோமசுந்தரபுரத்தைச் சேர்ந்தவர் 52 வயதான சின்னன். விவசாய கூலித் தொழிலாளியான இவர், அப்பகுதியில் உள்ள தோட்டங்களில் வேலைகளுக்கு சென்று வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மள்ளப்புரம் பகுதியில் உள்ள தோட்டப் பகுதிக்கு வேலைக்கு சென்ற போது அங்கு தனியாக இருந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது.

போக்சோ
போக்சோ

இதனைக் கண்ட சிறுமியின் தாயார், சின்னனை சத்தம் போட்டு விரட்டி விட்டு உசிலம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் சின்னன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்தது.

தன் மீது புகார் அளித்துள்ளது குறித்து அறிந்த சின்னன், போலீஸ் விசாரணைக்கு பயந்து ராஜேந்திரன் என்பவரது தோட்டத்தில் உள்ள புளிய மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த எம்.கல்லுப்பட்டி காவல் நிலைய போலீஸார் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலை செய்தது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

Operation Honeymoon: கணவரைக் கொல்ல கூலிப்படைக்கு உத்தரவிட்டது எப்படி? விசாரணையில் பகீர் தகவல்

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த சோனம் என்பவரும், அவரது கணவர் ராஜா ரகுவன்சியும் கடந்த மாதம் மேகாலயாவிற்குத் தேனிலவு சென்றனர்.அவர்கள் கடந்த 23ம் தேதி திடீரென காணாமல் போய்விட்டனர். ஆனால் 10 நாட... மேலும் பார்க்க

Blinkits: ``10 நிமிட டெலிவரிக்கு பின்னால் நடக்கும் கொடுமையான சம்பவங்கள்..'' - தொழிலாளரின் பதிவு

டெக் உலகில் நொடிப்பொழுது விரும்பியது எல்லாம் நம் கைகளை வந்து சேர்ந்துவிடுகிறது. அந்த வகையில் ஒவ்வொன்றிற்கும் ஒரு ஆப்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தற்போது வீட்டுக்கு தேவையான பொருள்கள் வாங்குவதற்கும் வசதியாக... மேலும் பார்க்க

புதுக்கோட்டை கொலை வழக்கில் புதிய திருப்பம்; தூங்கிய மகனை அடித்துக் கொன்ற தந்தை; என்ன நடந்தது?

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள சங்கம்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன். இவர், மதுவுக்கு அடிமையாகி தினந்தோறும் வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார்.வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு குடித்துவிட்... மேலும் பார்க்க

பொதுத் தேர்வில் கோட்டைவிட்ட அரசு மாதிரிப் பள்ளி; ஆசிரியர்கள் மீது பாய்ந்த நடவடிக்கை; பின்னணி என்ன?

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகராட்சியில் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.இதில் கடந்த ஆண்டு அரசு பொதுத்தேர்வுகளில் அதிகமானவர்கள் தோல்வி அடைந்தனர்.குறிப்பாக, நடந்து ம... மேலும் பார்க்க

நாமக்கல் மூதாட்டி கொடூர கொலை... மர்ம நபர்களைப் பிடிக்க எட்டு தனிப்படைகள்; காவல்துறை என்ன சொல்கிறது?

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், சித்தம்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் சாமியாத்தாள்(67). இவரது கணவர் இறந்து விட்டார். வீட்டின் அருகில் உள்ள சொந்தத் தோட்டத்தில் விவசாயம் செய்து தனியாக வசித்து வருகிறார்.ச... மேலும் பார்க்க

Meghalaya Husband Murder: "நகையுடன் வரச் சொன்னார்" - குடும்பத்தினர் சந்தேகம்; மனைவி கைதானது எப்படி?

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்சி என்பவர் தனது மனைவியுடன் கடந்த மாதம் மேகாலயாவிற்குத் தேனிலவு சென்றனர்.அவர்கள் சிரபுஞ்சிக்குச் சென்றபோது கடந்த 23ம் தேதி திடீரென காணாமல் போய்விட்ட... மேலும் பார்க்க