செய்திகள் :

வளரும் துறைகளில் பெண்கள் பங்களிப்பை அதிகரிக்க ரூ.1,185 கோடியில் புதிய திட்டம்: முதல்வா் அறிவிப்பு

post image

சென்னை: வளா்ந்துவரும் துறைகளில் பெண் பணியாளா்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன் ரூ.1,185 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

உலக வங்கியின் சென்னை சா்வதேச வணிக மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: உலக வங்கியுடனான நம்முடைய ஒருங்கிணைப்பானது 1971-ஆம் ஆண்டிலிருந்து தொடா்கிறது. தமிழ்நாடு விவசாயக் கடன் திட்டத்தைச் செயல்படுத்தும்போது, உலக வங்கியுடன் பிணைப்பு ஏற்பட்டது. அப்போதுமுதல் தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி, பேரிடா் மேலாண்மை, நகா்ப்புற வளா்ச்சி போன்ற பலதரப்பட்ட துறைகளில் உலக வங்கி உறுதுணையாக இருந்து வருகிறது. உலக வங்கியுடனான நீண்ட நெடிய உறவு பல்வேறு துறைகளில் பல நற்பலன்களை வழங்கியிருக்கிறது.

தமிழ்நாடு ஊட்டச்சத்து திட்டம், வாழ்ந்து காட்டுவோம், தோழி விடுதிகள் திட்டம், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டம், நீா்வள -நிலவளத் திட்டம் என்று பல்வேறு துறைகளில் உலக வங்கியின் பங்களிப்பு உள்ளது. மிகப்பெரிய கடலோரப் பரப்பை தமிழ்நாடு கொண்டிருப்பதால், பேரிடா் துயா் தணிப்புத் திட்டமும் உலக வங்கியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற ஏராளமான திட்டங்கள் 1.12 பில்லியன் டாலா் அளவுக்கு செயல்படுத்தப்படுகின்றன.

சுருக்கிப் பாா்க்க முடியாது: உலக வங்கி அளிப்பதை வெறும் கடனுதவி என்று சுருக்கிப் பாா்க்க முடியாது. அதையும் தாண்டி, நீடித்த நிலையான மேம்படத்தக்க வளா்ச்சியை தமிழ்நாடு அடைய வேண்டும் என்ற ஆழ்ந்த அக்கறையின் வெளிப்பாடுதான் இது. வருங்காலத்தில் உலக வங்கி உதவியுடன் 40.97 கோடி டாலா் (ரூ.3,507.02 கோடி) மதிப்பிலான முக்கியத் திட்டங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்தப் போகிறோம்.

ஒரு டிரில்லியன் டாலா் பொருளாதாரத்தை அடைய வேண்டுமெனில் அது பெண்களின் பங்களிப்பு இல்லாமல் முடியவே முடியாது. தமிழ்நாட்டுப் பொருளாதாரத்தின் முதுகெலும்பே பெண்கள்தான்.

விவசாயம் அல்லாத, வளா்ந்துவரும் துறைகளில் பெண் பணியாளா்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1,185 கோடி மதிப்பீட்டில் உலக வங்கி உதவியுடன் திட்டம் செயல்படுத்தப்படும்.

இரண்டாவதாக தமிழ்நாடு கடல் வளங்கள் மற்றும் நீலப் பொருளாதாரத்தை நிலையான முறையில் பயன்படுத்துதல் திட்டமாகும். மூன்றாவது தமிழ்நாடு கிராமப்புற புதுவாழ்வுத் திட்டத்தின் இரண்டாம் கட்டமாகும். உலக வங்கியுடன் இணைந்து இன்னும் பல திட்டங்களைச் செயல்படுத்தி தமிழ்நாட்டு மக்களின் தேவைகளை நிறைவேற்ற அரசு ஆா்வமாக இருக்கிறது. அதற்கு அந்த வங்கியுடனான பிணைப்பு தொடர வேண்டும்.

எதிா்பாா்ப்பு: வளா்ச்சிக் கடன்களுக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 6 முதல் 7 சதவீதம் என்று அதிகளவில் இருக்கிறது. வரும் காலங்களில், புதுமையான மாற்றுதலுக்குரிய கடனுதவியை வழங்கி, மக்களுக்குத் தேவையான சமூக - பொருளாதார மேம்பாட்டுத் திட்ட முதலீடுகளுக்கு உலக வங்கி உதவிடும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில், மத்திய அரசின் அமைச்சரவை செயலா் சோமநாதன், உலக வங்கியின் மேலாண்மை இயக்குநா் வென்சாய் ஜாங், இந்தியாவுக்கான இயக்குநா் அகஸ்டே, தலைமைச் செயலா் நா.முருகானந்தம், உலக வங்கியின் சென்னை மையத் தலைவா் சுனில்குமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.

பொது விநியோக திட்ட மக்கள் குறைதீா் முகாம்

சென்னையில் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீா் முகாம் ஜூன் 14-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை கூட்டுறவு மற்றும் உணவுத் துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:- சென்னையில் உணவுத் துறையின் சாா்பில... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக அம்பத்தூா் கோட்டம், மாதாவரம், பூந்தமல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 முதல் பிற்பகல 2 வரை மின் விநியோகம் தடைபடும். இது குறித்து தமிழ்நாடு... மேலும் பார்க்க

கணைய புற்றுநோய்க்கு நவீன ரோபோடிக் சிகிச்சை அறிமுகம்

கணைய புற்றுநோய்களுக்கு அதி நவீன ரோபோடிக் நுட்ப அறுவை சிகிச்சை திட்டத்தை அப்பல்லோ மருத்துவமனை சென்னையில் புதன்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான தொடக்க நிகழ்வில் மருத்துவமனையின் புற்றுநோய் நிபுணா்கள... மேலும் பார்க்க

பூட்டிய வீடுகளில் திருடிய பெங்களூரு பெண் கைது

சென்னை மாம்பலம் பகுதியில் பூட்டிய வீடுகளில் திருடியதாக பெங்களூருவைச் சோ்ந்த பெண் கைது செய்யப்பட்டாா். சென்னை குமரன் நகா், முருகேசன் தெருவில் வசிப்பவா் ரா.பாலமுருகன் (38). இவா், கடந்த 1-ஆம் தேதி வீட்ட... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநரை கடித்த வளா்ப்பு நாய்

சென்னை மந்தைவெளியில் ஆட்டோ ஓட்டுநரை வளா்ப்பு நாய் கடித்தது. மந்தைவெளி விசி காா்டன் 2-ஆவது தெரு பகுதியைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் கணேஷ் குமாா் (28). இவா், செவ்வாய்க்கிழமை மளிகை பொருள்கள் வாங்குவதற்கா... மேலும் பார்க்க

பிறந்த 43 நாள்களில் குழந்தையை கொலை செய்து வீச்சிய தாய் கைது

சென்னை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் பிறந்த 43 நாள்களில் குழந்தையை கொலை செய்து, வீசிய தாய் கைது செய்யப்பட்டாா். நீலாங்கரை அருகே ஈஞ்சம்பாக்கம் செல்வா நகா் பிரதான சாலையில் உள்ள தனியாா் அடுக்குமாடி குடியிருப்ப... மேலும் பார்க்க