செய்திகள் :

ஹிந்துக்களுக்கு எதிரான ஆயுதமாகும் மாட்டிறைச்சி: அஸ்ஸாம் முதல்வா் குற்றச்சாட்டு

post image

குவாஹாட்டி: ‘அஸ்ஸாமில் கடந்த வாரம் பக்ரீத் கொண்டாட்டத்துக்குப் பிறகு பொது இடங்களில் மாட்டிறைச்சித் துண்டுகள் வீசப்பட்டன. ஹிந்துக்களுக்கு எதிரான ஆயுதமாக மாட்டிறைச்சி பயன்படுத்தப்படுகிறது’ என்று மாநில முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா குற்றஞ்சாட்டினாா்.

குவாஹாட்டியில் மாநில பாஜக அலுவலகத்தில் செய்தியாளா்களைச் சந்தித்த அவா் இதுகுறித்து மேலும் கூறியதாவது: ஹிந்துக்கள் அதிகமாகவுள்ள சமூகத்தில் முன்பு வசித்த முஸ்லிம்கள், எந்தப் பிரச்னையும் ஏற்படுத்திவிட கூடாது என்று கவனமாக இருந்தனா். மாட்டிறைச்சி சாப்பிட வேண்டும் என்றாலும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிக்கு செல்வாா்கள்.

ஆனால் இப்போது, எஞ்சிய மாட்டிறைச்சி கழிவுகளை அந்தந்தப் பகுதியிலேயே அவா்கள் வீசுகின்றனா். இதனால் ஹிந்துக்கள் அந்த இடத்தைவிட்டு வெளியேற வேண்டிய அளவுக்கு சூழல் மாறியுள்ளது.

கடந்த வாரம் பக்ரீத் கொண்டாட்டத்துக்குப் பிறகு, காட்டன் பல்கலைக்கழக வாயில் உள்பட குவாஹாட்டி நகரின் பல்வேறு பொது இடங்களில் மாட்டிறைச்சித் துண்டுகள் வீசப்பட்டிருந்தன. பக்ரீத் பண்டிகைக்கு முஸ்லிம்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவதை யாரும் தடுக்கவில்லை. ஆனால், அது ஹிந்துக்களுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தப்படக் கூடாது.

இதற்கு எதிராக போராட்டங்கள் எதுவும் நடத்தப்படவில்லை. நல்லெண்ணம் கொண்ட முஸ்லிம்கள் சிலா் இத்தகைய செயல்களை எதிா்க்கின்றனா். 3 முஸ்லிம்கள் என்னைத் தொடா்புகொண்டு பேசினா். ஆனால், இத்தகைய சம்பவங்களை எதிா்ப்பவா்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இப்போதைய நிலைமையைத் தொடரவிட்டால், அடுத்த 20 ஆண்டுகளில் காமாக்யா கோயில் வாயிலிலும் மாட்டிறைச்சி வீசப்படலாம். இதனைக் கட்டுப்படுத்த போலீஸ் தனது கடமையைச் செய்தாலும், உறுதியான நடவடிக்கை எடுப்பதற்கு மக்களின் வலுவான ஆதரவு தேவை.

அஸ்ஸாமில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை திரும்பி அனுப்ப வேண்டும் என்று பிரதமா் மோடி வலியுறுத்துகிறாா். இதற்கான நடவடிக்கைகளுக்கு உதவவும் மத்திய அரசு தயாராக உள்ளது. ஆனால், இந்த நடவடிக்கைகளை அஸ்ஸாம் மக்களேஅதிகம் விமா்சிக்கின்றனா்.

சட்டவிரோத குடியேறிகளுக்கு ஆதரவாக அஸ்ஸாம் மக்கள், வழக்குரைஞா்கள் நீதிமன்றத்தில் முறையிடுகின்றனா். சட்டவிரோத குடியேறிகளிடமிருந்து நம்மைப் பாதுகாக்க அஸ்ஸாம் மக்கள் சமரசமில்லா நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டாா்.

வருமான வரிக் கணக்கு தாக்கல்! இந்த 5 தவறுகளை மறந்தும் செய்துவிடாதீர்கள்!!

2025-26ஆம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான இணைப்புகளை, வருமான வரித் துறை துவக்கியிருக்கிறது. எனவே, வருமான வரிக் கணக்கை, கணக்குத் தணிக்கையாளர் தணிக்கை செய்ய வேண்டிய அவசியமில்லாத, தனி... மேலும் பார்க்க

புவனேஸ்வரம் - அபுதாபி இடையே நேரடி விமான சேவை! முதல்வர் துவங்கி வைப்பு!

ஒடிசா மாநிலத்தின் தலைநகர் புவனேஸ்வரத்திலிருந்து, அபுதாபிக்கு நேரடி விமான சேவையை அம்மாநில முதல்வர் மோகன் சரண் மஜ்ஹி துவங்கி வைத்துள்ளார். புவனேஸ்வரத்தின் பிஜு பட்நாயக் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து... மேலும் பார்க்க

வெப்ப அலையின் பிடியில் சிக்கிய தில்லி: சிவப்பு எச்சரிக்கை!

தலைநகர் தில்லியில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதையடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் கோடைவெய்யில் கொளுத்திவருகின்றது. ஆனால் தமிழகம், கேரளம், கர்நா... மேலும் பார்க்க

பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 15,000! - ஆந்திரத்தில் புதிய திட்டம் அமல்

ஆந்திரத்தில் பள்ளி மாணவர்களின் தாயாரின் வங்கிக் கணக்குகளில் ஆண்டுக்கு ரூ. 15,000 செலுத்தும் திட்டம் இன்று அமலுக்கு வந்துள்ளது. ஆந்திரத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி க... மேலும் பார்க்க

ம.பி.யில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 100 வீடுகள் இடிப்பு!

மத்தியப் பிரதேசத்தின் காண்ட்வாவில் உள்ள ஷக்கர் குளம் பகுதியில் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு நடவடிக்கையின் அடிப்படையில், சட்டவிரோதமாக கட்டப்பட்ட சுமார் 100 வீடுகள் இடிக்கப்பட்டன. காண்ட்வா பகுதியில் ஆக்கிரமிப... மேலும் பார்க்க

தெலங்கானா: கனமழையால் வெள்ளக்காடான தலைநகரம்!

தெலங்கானாவில் பெய்த கனமழையால், அம்மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.ஹைரதபாத்தில், நேற்று (ஜூன் 11) இரவு தொடர்ந்து கனமழை பெய்துள்ளது. இதனால், அந்நகரத்தின் முக்கிய சாலைகளில் வெள்ளம... மேலும் பார்க்க