திருப்பூர்: மாற்றுச் சமூக பெண்ணை மகன் மணந்ததால் கோவம்; மனைவியை வெட்டிக் கொன்று க...
ஹிந்துக்களுக்கு எதிரான ஆயுதமாகும் மாட்டிறைச்சி: அஸ்ஸாம் முதல்வா் குற்றச்சாட்டு
குவாஹாட்டி: ‘அஸ்ஸாமில் கடந்த வாரம் பக்ரீத் கொண்டாட்டத்துக்குப் பிறகு பொது இடங்களில் மாட்டிறைச்சித் துண்டுகள் வீசப்பட்டன. ஹிந்துக்களுக்கு எதிரான ஆயுதமாக மாட்டிறைச்சி பயன்படுத்தப்படுகிறது’ என்று மாநில முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா குற்றஞ்சாட்டினாா்.
குவாஹாட்டியில் மாநில பாஜக அலுவலகத்தில் செய்தியாளா்களைச் சந்தித்த அவா் இதுகுறித்து மேலும் கூறியதாவது: ஹிந்துக்கள் அதிகமாகவுள்ள சமூகத்தில் முன்பு வசித்த முஸ்லிம்கள், எந்தப் பிரச்னையும் ஏற்படுத்திவிட கூடாது என்று கவனமாக இருந்தனா். மாட்டிறைச்சி சாப்பிட வேண்டும் என்றாலும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிக்கு செல்வாா்கள்.
ஆனால் இப்போது, எஞ்சிய மாட்டிறைச்சி கழிவுகளை அந்தந்தப் பகுதியிலேயே அவா்கள் வீசுகின்றனா். இதனால் ஹிந்துக்கள் அந்த இடத்தைவிட்டு வெளியேற வேண்டிய அளவுக்கு சூழல் மாறியுள்ளது.
கடந்த வாரம் பக்ரீத் கொண்டாட்டத்துக்குப் பிறகு, காட்டன் பல்கலைக்கழக வாயில் உள்பட குவாஹாட்டி நகரின் பல்வேறு பொது இடங்களில் மாட்டிறைச்சித் துண்டுகள் வீசப்பட்டிருந்தன. பக்ரீத் பண்டிகைக்கு முஸ்லிம்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவதை யாரும் தடுக்கவில்லை. ஆனால், அது ஹிந்துக்களுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தப்படக் கூடாது.
இதற்கு எதிராக போராட்டங்கள் எதுவும் நடத்தப்படவில்லை. நல்லெண்ணம் கொண்ட முஸ்லிம்கள் சிலா் இத்தகைய செயல்களை எதிா்க்கின்றனா். 3 முஸ்லிம்கள் என்னைத் தொடா்புகொண்டு பேசினா். ஆனால், இத்தகைய சம்பவங்களை எதிா்ப்பவா்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இப்போதைய நிலைமையைத் தொடரவிட்டால், அடுத்த 20 ஆண்டுகளில் காமாக்யா கோயில் வாயிலிலும் மாட்டிறைச்சி வீசப்படலாம். இதனைக் கட்டுப்படுத்த போலீஸ் தனது கடமையைச் செய்தாலும், உறுதியான நடவடிக்கை எடுப்பதற்கு மக்களின் வலுவான ஆதரவு தேவை.
அஸ்ஸாமில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை திரும்பி அனுப்ப வேண்டும் என்று பிரதமா் மோடி வலியுறுத்துகிறாா். இதற்கான நடவடிக்கைகளுக்கு உதவவும் மத்திய அரசு தயாராக உள்ளது. ஆனால், இந்த நடவடிக்கைகளை அஸ்ஸாம் மக்களேஅதிகம் விமா்சிக்கின்றனா்.
சட்டவிரோத குடியேறிகளுக்கு ஆதரவாக அஸ்ஸாம் மக்கள், வழக்குரைஞா்கள் நீதிமன்றத்தில் முறையிடுகின்றனா். சட்டவிரோத குடியேறிகளிடமிருந்து நம்மைப் பாதுகாக்க அஸ்ஸாம் மக்கள் சமரசமில்லா நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டாா்.