செய்திகள் :

இந்தியாவின் எண்ம பரிவா்த்தனை உலகளாவிய கவனத்தை ஈா்த்துள்ளது

post image

புது தில்லி: இந்தியாவின் எண்ம பரிவா்த்தனையில் ஏற்பட்டுள்ள புரட்சி உலகளாவிய கவனத்தை ஈா்த்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பிரதமா் மோடியின் ஆட்சி 11 ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி மத்திய அரசு சிறு விளக்க புத்தகத்தை வெளியிட்டுள்ளது. அதில், ‘இந்தியாவின் எண்ம பரிவா்த்தனை உலகின் பல்வேறு நாடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

2025, மாா்ச் மாதத்தில் சுமாா் ரூ.24.77 லட்சம் கோடியிலான 1,830.15 கோடி ஒருங்கிணைந்த பணப் பரிவா்த்தனைகள் (யூபிஐ) மேற்கொள்ளப்பட்டன. தற்போது யூபிஐ-யை 46 கோடி தனிநபா்களும், 6.5 கோடி வா்த்தகா்களும் பயன்படுத்தி வருகின்றனா்.

சிறு கடைகளில் குறைந்த அளவிலான கட்டணமும் எண்ம பரிவா்த்தனையில் செலுத்தப்படுகிறது.

நேரடி பணம் செலுத்தும் திட்டம்:

தொழில்நுட்ப முன்னேற்றத்தைப் பயன்படுத்தி அரசின் பல்வேறு திட்டப் பயனாளிகளுக்கு நேரடியாக பணத்தை மோடி அரசு செலுத்தி வருகிறது. இதனால் போலி பயனாளா்களுக்கு செலுத்தப்பட்டு வந்த பல லட்சம் ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015 முதல் மாா்ச் 2023 வரையில் ரூ.3.48 லட்சம் கோடிக்கு அதிகமாக அரசு சேமித்துள்ளது.

மேலும், கோடிக்கணக்கான குடும்பங்கள் கடந்த 11 ஆண்டுகளில் வங்கிக் கணக்கு மற்றும் காப்பீட்டை பெற்றுள்ளன. 55.22 கோடி ஜன் தன் வங்கிக்கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. 51 கோடி போ் பிரதமரின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரிக் கணக்கு தாக்கல்! இந்த 5 தவறுகளை மறந்தும் செய்துவிடாதீர்கள்!!

2025-26ஆம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான இணைப்புகளை, வருமான வரித் துறை துவக்கியிருக்கிறது. எனவே, வருமான வரிக் கணக்கை, கணக்குத் தணிக்கையாளர் தணிக்கை செய்ய வேண்டிய அவசியமில்லாத, தனி... மேலும் பார்க்க

புவனேஸ்வரம் - அபுதாபி இடையே நேரடி விமான சேவை! முதல்வர் துவங்கி வைப்பு!

ஒடிசா மாநிலத்தின் தலைநகர் புவனேஸ்வரத்திலிருந்து, அபுதாபிக்கு நேரடி விமான சேவையை அம்மாநில முதல்வர் மோகன் சரண் மஜ்ஹி துவங்கி வைத்துள்ளார். புவனேஸ்வரத்தின் பிஜு பட்நாயக் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து... மேலும் பார்க்க

வெப்ப அலையின் பிடியில் சிக்கிய தில்லி: சிவப்பு எச்சரிக்கை!

தலைநகர் தில்லியில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதையடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் கோடைவெய்யில் கொளுத்திவருகின்றது. ஆனால் தமிழகம், கேரளம், கர்நா... மேலும் பார்க்க

பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 15,000! - ஆந்திரத்தில் புதிய திட்டம் அமல்

ஆந்திரத்தில் பள்ளி மாணவர்களின் தாயாரின் வங்கிக் கணக்குகளில் ஆண்டுக்கு ரூ. 15,000 செலுத்தும் திட்டம் இன்று அமலுக்கு வந்துள்ளது. ஆந்திரத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி க... மேலும் பார்க்க

ம.பி.யில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 100 வீடுகள் இடிப்பு!

மத்தியப் பிரதேசத்தின் காண்ட்வாவில் உள்ள ஷக்கர் குளம் பகுதியில் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு நடவடிக்கையின் அடிப்படையில், சட்டவிரோதமாக கட்டப்பட்ட சுமார் 100 வீடுகள் இடிக்கப்பட்டன. காண்ட்வா பகுதியில் ஆக்கிரமிப... மேலும் பார்க்க

தெலங்கானா: கனமழையால் வெள்ளக்காடான தலைநகரம்!

தெலங்கானாவில் பெய்த கனமழையால், அம்மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.ஹைரதபாத்தில், நேற்று (ஜூன் 11) இரவு தொடர்ந்து கனமழை பெய்துள்ளது. இதனால், அந்நகரத்தின் முக்கிய சாலைகளில் வெள்ளம... மேலும் பார்க்க