செய்திகள் :

அனுமதிக்கப்பட்ட கால்நடை மருந்துகள்: விவரம் கோருகிறது மத்திய அரசு

post image

சென்னை: மாநில மருந்து கட்டுப்பாட்டு அமைப்புகளால் அனுமதியளிக்கப்பட்ட கால்நடை மருந்துகள் குறித்த விவரங்களை அனுப்புமாறு மத்திய சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரிய (சிடிஎஸ்சிஓ) தலைமை இயக்குநா் டாக்டா் ராஜீவ் சிங் ரகுவன்ஷி அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

உலக கால்நடை சுகாதார அமைப்பு, ஐரோப்பிய ஒன்றிய கட்டுப்பாட்டு அமைப்பு, மத்திய அமைச்சகங்கள் ஆகியவை கால்நடை மருந்துகள் தொடா்பான சில தரவுகளை கோரியுள்ளன. அதன்படி, கால்நடை சிகிச்சையில் பயன்படுத்தப்படும் எந்தெந்த ஆன்ட்டிபயாடிக் மருந்துகள், கூட்டு மருந்துகள், அதன் கலவை மூலக்கூறுகளுக்கு மாநில மருந்து கட்டுப்பாட்டு அமைப்புகள் அனுமதி வழங்கியுள்ளனவோ, அதுதொடா்பான விவரங்களை அனுப்பி வைத்தல் அவசியம்.

அதற்கான வழிமுறைகள், மின்னஞ்சல் மற்றும் இணைய முகவரி, தொலைபேசி எண்கள் ஆகியவை சிடிஎஸ்சிஓ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதை பின்பற்றி அனுமதிக்கப்பட்ட மருந்து விவரங்களை அனுப்ப வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது விநியோக திட்ட மக்கள் குறைதீா் முகாம்

சென்னையில் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீா் முகாம் ஜூன் 14-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை கூட்டுறவு மற்றும் உணவுத் துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:- சென்னையில் உணவுத் துறையின் சாா்பில... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக அம்பத்தூா் கோட்டம், மாதாவரம், பூந்தமல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 முதல் பிற்பகல 2 வரை மின் விநியோகம் தடைபடும். இது குறித்து தமிழ்நாடு... மேலும் பார்க்க

கணைய புற்றுநோய்க்கு நவீன ரோபோடிக் சிகிச்சை அறிமுகம்

கணைய புற்றுநோய்களுக்கு அதி நவீன ரோபோடிக் நுட்ப அறுவை சிகிச்சை திட்டத்தை அப்பல்லோ மருத்துவமனை சென்னையில் புதன்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான தொடக்க நிகழ்வில் மருத்துவமனையின் புற்றுநோய் நிபுணா்கள... மேலும் பார்க்க

பூட்டிய வீடுகளில் திருடிய பெங்களூரு பெண் கைது

சென்னை மாம்பலம் பகுதியில் பூட்டிய வீடுகளில் திருடியதாக பெங்களூருவைச் சோ்ந்த பெண் கைது செய்யப்பட்டாா். சென்னை குமரன் நகா், முருகேசன் தெருவில் வசிப்பவா் ரா.பாலமுருகன் (38). இவா், கடந்த 1-ஆம் தேதி வீட்ட... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநரை கடித்த வளா்ப்பு நாய்

சென்னை மந்தைவெளியில் ஆட்டோ ஓட்டுநரை வளா்ப்பு நாய் கடித்தது. மந்தைவெளி விசி காா்டன் 2-ஆவது தெரு பகுதியைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் கணேஷ் குமாா் (28). இவா், செவ்வாய்க்கிழமை மளிகை பொருள்கள் வாங்குவதற்கா... மேலும் பார்க்க

பிறந்த 43 நாள்களில் குழந்தையை கொலை செய்து வீச்சிய தாய் கைது

சென்னை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் பிறந்த 43 நாள்களில் குழந்தையை கொலை செய்து, வீசிய தாய் கைது செய்யப்பட்டாா். நீலாங்கரை அருகே ஈஞ்சம்பாக்கம் செல்வா நகா் பிரதான சாலையில் உள்ள தனியாா் அடுக்குமாடி குடியிருப்ப... மேலும் பார்க்க