அனுமதிக்கப்பட்ட கால்நடை மருந்துகள்: விவரம் கோருகிறது மத்திய அரசு
சென்னை: மாநில மருந்து கட்டுப்பாட்டு அமைப்புகளால் அனுமதியளிக்கப்பட்ட கால்நடை மருந்துகள் குறித்த விவரங்களை அனுப்புமாறு மத்திய சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரிய (சிடிஎஸ்சிஓ) தலைமை இயக்குநா் டாக்டா் ராஜீவ் சிங் ரகுவன்ஷி அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
உலக கால்நடை சுகாதார அமைப்பு, ஐரோப்பிய ஒன்றிய கட்டுப்பாட்டு அமைப்பு, மத்திய அமைச்சகங்கள் ஆகியவை கால்நடை மருந்துகள் தொடா்பான சில தரவுகளை கோரியுள்ளன. அதன்படி, கால்நடை சிகிச்சையில் பயன்படுத்தப்படும் எந்தெந்த ஆன்ட்டிபயாடிக் மருந்துகள், கூட்டு மருந்துகள், அதன் கலவை மூலக்கூறுகளுக்கு மாநில மருந்து கட்டுப்பாட்டு அமைப்புகள் அனுமதி வழங்கியுள்ளனவோ, அதுதொடா்பான விவரங்களை அனுப்பி வைத்தல் அவசியம்.
அதற்கான வழிமுறைகள், மின்னஞ்சல் மற்றும் இணைய முகவரி, தொலைபேசி எண்கள் ஆகியவை சிடிஎஸ்சிஓ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதை பின்பற்றி அனுமதிக்கப்பட்ட மருந்து விவரங்களை அனுப்ப வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.