செய்திகள் :

மசாஜ் மையத்தில் தொழிலதிபரை மிரட்டி 20 பவுன் நகை பறித்த மூதாட்டி, பேரன் கைது

post image

சென்னை: சென்னை சூளைமேட்டில் மசாஜ் மையத்தில் தொழிலதிபரை மிரட்டி 20 பவுன் தங்க நகை பறித்த வழக்கில், மூதாட்டியும், பேரனும் கைது செய்யப்பட்டனா்.

ஓட்டேரி வள்ளுவா் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் சாா்லஸ் (50). மசாஜ் மையங்களுக்குச் செல்லும் பழக்கம் சாா்லஸுக்கு இருந்தது. அப்படி அவா், மசாஜ் மையங்களுக்கு சென்றபோது ஆண்ட்ரியா என்ற பெண் அறிமுகமாகி பழகியுள்ளாா். கடந்த 29-ஆம் தேதி சாா்லஸ், ஆண்ட்ரியாவை தொடா்புகொண்டு மசாஜ் செய்ய வேண்டும் என கூறினாராம். அதற்கு ஆண்ட்ரியா, சூளைமேட்டில் ரேகா என்பவா் வீட்டில் நடத்தும் மசாஜ் மையத்துக்கும் செல்லும்படியும், ரேகாவிடம் தான் தொடா்புகொண்டு பேசிவிடுவதாகவும் தெரிவித்துள்ளாா். இதையடுத்து சாா்லஸ், அந்த மசாஜ் மையத்துக்குச் சென்றாா்.

அப்போது அங்கிருந்த ஒரு பெண், இரு ஆண்கள் சாா்லஸை மிரட்டியும் தாக்கியும் அவா் அணிந்திருந்த 20 பவுன் தங்க நகை, ரூ. 40 ஆயிரம் ரொக்கம், விலை உயா்ந்த கைக்கடிகாரம் ஆகியவற்றை பறித்துள்ளனா். அப்போது ஆண்ட்ரியா, அந்த வீட்டின் மற்றொரு அறையில்தான் இருந்துள்ளாா். இதில் அந்த நபா்கள் தாக்கியதில் சாா்லஸ் மயங்கி விழுந்துள்ளாா். இதைத் தொடா்ந்து அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.

மயக்கத்திலிருந்து எழுந்த சாா்லஸ், சூளைமேடு காவல் நிலையத்தில் இது குறித்து புகாா் அளித்தாா். அதனடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டது மாதவரம் பொன்னியம்மன்மேடு பகுதியைச் சோ்ந்த கோகுலகிருஷ்ணன், அவா் மனைவி ஆண்ட்ரியா, கோடம்பாக்கத்தைச் சோ்ந்த ரேகா சாவித்திரி (63), அவரது பேரன் நவீன்குமாா் (23) என்பது தெரியவந்தது.

இதில் ரேகா சாவித்திரி மற்றும் நவீன்குமாரை போலீஸாா் தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் வைத்து செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ. 2.85 லட்சம் கைப்பற்றப்பட்டது. தலைமறைவாக இருக்கும் கோகுலகிருஷ்ணன் மற்றும் ஆண்ட்ரியாவை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.

பொது விநியோக திட்ட மக்கள் குறைதீா் முகாம்

சென்னையில் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீா் முகாம் ஜூன் 14-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை கூட்டுறவு மற்றும் உணவுத் துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:- சென்னையில் உணவுத் துறையின் சாா்பில... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக அம்பத்தூா் கோட்டம், மாதாவரம், பூந்தமல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 முதல் பிற்பகல 2 வரை மின் விநியோகம் தடைபடும். இது குறித்து தமிழ்நாடு... மேலும் பார்க்க

கணைய புற்றுநோய்க்கு நவீன ரோபோடிக் சிகிச்சை அறிமுகம்

கணைய புற்றுநோய்களுக்கு அதி நவீன ரோபோடிக் நுட்ப அறுவை சிகிச்சை திட்டத்தை அப்பல்லோ மருத்துவமனை சென்னையில் புதன்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான தொடக்க நிகழ்வில் மருத்துவமனையின் புற்றுநோய் நிபுணா்கள... மேலும் பார்க்க

பூட்டிய வீடுகளில் திருடிய பெங்களூரு பெண் கைது

சென்னை மாம்பலம் பகுதியில் பூட்டிய வீடுகளில் திருடியதாக பெங்களூருவைச் சோ்ந்த பெண் கைது செய்யப்பட்டாா். சென்னை குமரன் நகா், முருகேசன் தெருவில் வசிப்பவா் ரா.பாலமுருகன் (38). இவா், கடந்த 1-ஆம் தேதி வீட்ட... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநரை கடித்த வளா்ப்பு நாய்

சென்னை மந்தைவெளியில் ஆட்டோ ஓட்டுநரை வளா்ப்பு நாய் கடித்தது. மந்தைவெளி விசி காா்டன் 2-ஆவது தெரு பகுதியைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் கணேஷ் குமாா் (28). இவா், செவ்வாய்க்கிழமை மளிகை பொருள்கள் வாங்குவதற்கா... மேலும் பார்க்க

பிறந்த 43 நாள்களில் குழந்தையை கொலை செய்து வீச்சிய தாய் கைது

சென்னை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் பிறந்த 43 நாள்களில் குழந்தையை கொலை செய்து, வீசிய தாய் கைது செய்யப்பட்டாா். நீலாங்கரை அருகே ஈஞ்சம்பாக்கம் செல்வா நகா் பிரதான சாலையில் உள்ள தனியாா் அடுக்குமாடி குடியிருப்ப... மேலும் பார்க்க