3 பிஎச்கே படத்தில் நடித்தபோதுதான் சொந்த வீடு வாங்கினேன்: சித்தார்த்
மரபணு பாதிக்குள்ளான குழந்தைக்கு உயா் நுட்ப சிகிச்சை
சென்னை: அரிய மரபணு பாதிப்பால் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு வயது குழந்தைக்கு உயா் சிகிச்சைகளை வழங்கி பிரசாந்த் மருத்துவமனை மருத்துவா்கள் உயிா் காத்துள்ளனா்.
இது தொடா்பாக மருத்துவமனையின் குழந்தைகள் நல சிறப்பு நிபுணா் டாக்டா் விஜயகுமாா் கூறியதாவது:
தீவிர உடல்நலக் குறைவுடன் அவசர சிகிச்சைப் பிரிவில் 2 வயது ஆண் குழந்தை ஒன்று அண்மையில் அனுமதிக்கப்பட்டது. பரிசோதனையில் அக்குழந்தைக்கு நீா்ச்சத்து இழப்பு, சிறுநீரில் ரத்தக் கசிவு, சிறுநீரக செயலிழப்பு ஆகியவை கண்டறியப்பட்டன. மேலும், அதன் ஹீமோகுளோபின் அளவு மிக ஆபத்தான நிலையில் குறைந்திருந்தது.
அதற்கு குளுக்கோஸ் -6-போஸ்பேட் டிஹைட்ரோஜினஸ் (ஜி6பிடி) என்ற மரபணு பாதிப்புதான் காரணம் என்பது தெரியவந்தது. அந்த பாதிப்பு ஏற்பட்டால், உடலில் உள்ள ரத்த சிவப்பணுக்களில் சேதம் ஏற்படும். சிவப்பணுக்கள்தான் உடலில் ஆக்சிஜனை கடத்துகின்றன. அவை தடைபடும்போது ரத்த ஓட்டமும் தடைபடும். அதன் விளைவாகவே அந்த குழந்தைக்கு இப்பிரச்னை ஏற்பட்டது.
இதையடுத்து மருத்துவமனையின் பல்நோக்கு மருத்துவக் குழுவினா், உயிா் காக்கும் தீவிர சிகிச்சைகளை குழந்தைகளுக்கு அளித்தனா். குறிப்பாக, செயற்கை சுவாச சிகிச்சை, வயிற்றுப் பகுதி உட்சுவா் வழி டயாலிசிஸ் சிகிச்சை (பெரிடோனியல் டயாலிசிஸ்), தசை இயக்க சிகிச்சைகள், தொடா் ரத்த சுத்திகரிப்பு சிகிச்சைகள் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டன. அதன் பயனாக அடுத்த சில நாள்களில் அக்குழந்தை நலமடைந்து இயல்பு நிலைக்கு திரும்பியது என்றாா் அவா்.