செய்திகள் :

Blinkits: ``10 நிமிட டெலிவரிக்கு பின்னால் நடக்கும் கொடுமையான சம்பவங்கள்..'' - தொழிலாளரின் பதிவு

post image

டெக் உலகில் நொடிப்பொழுது விரும்பியது எல்லாம் நம் கைகளை வந்து சேர்ந்துவிடுகிறது. அந்த வகையில் ஒவ்வொன்றிற்கும் ஒரு ஆப்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

தற்போது வீட்டுக்கு தேவையான பொருள்கள் வாங்குவதற்கும் வசதியாக வெறும் "10 நிமிடத்தில் டெலிவரி" என்ற அடையாளத்துடன் ஆன்லைன் ஆப்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் அதற்கு பின்னால் நடக்கும் கொடூரமான விஷயங்கள் குறித்து தொழிலாளர் ஒருவர் reddit இல் பகிர்ந்து கொண்டது, இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிளிங்கிட் என்ற ஆப்பில் பகுதி நேர வேலை பார்க்கும் ஒருவர் ”10 நிமிடம் டெலிவரிக்கு” பின்னால் தொழிலாளர்கள் எவ்வாறு கொடூரமான அனுபவத்தை அனுபவிக்கின்றனர் என்பது குறித்து பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில் "நாம் அனைவரும் 10 நிமிடங்களில் மளிகை பொருள்கள் வீட்டுக்கு வரும் யோசனையை விரும்புகிறோம். ஆனால் பெரும்பாலான மக்களுக்கு அதன் பின்னால் என்ன நடக்கிறது என்பது தெரியாது.

டார்க் ஸ்டோர் என்று அழைக்கப்படும் இருட்டான குடோன்களில் தான் மளிகை பொருள்கள் அடுக்கப்பட்டிருக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு பொருள்களை நிர்ணயிக்கப்பட்ட நேரங்களில் தொழிலாளர்கள் எடுக்க வேண்டும். தொழிலாளர்கள் நாள் முழுவதும் இறுக்கமான இடங்களில் ஓடுகிறார்கள்.

பொருள்களை எடுக்க அவர்கள் ஓட வேண்டும். அப்படி ஓடும் போது தினமும் விபத்துகள் நடக்கும். ஒருவரை ஒருவர் மோதிக்கொள்வார்கள், செல்போன் உடையும் என்பதை பயனர் நினைவு கூர்ந்தார்.

ஒரு அழுத்தமான சூழ்நிலையில்தான் அங்கு வேலை நடக்கும். ஒரு பொருளை கண்டுபிடிக்க சில வினாடிகள் கூடுதலாக எடுத்துக் கொண்டாலும் அந்த வேலையை விட்டு நீக்கி வீட்டுக்கு அனுப்பப்படுகிறார்கள்.

பகுதி நேர தொழிலாளர்களின் நிலையே இவ்வாறு இருக்கிறது என்றால், முழு நேர ஊழியர்களின் நிலைமைகள் இன்னும் மோசமாக இருக்கும். சரியான நேரத்தில் பொருள்களை எடுக்க வேண்டும், பேக் செய்ய வேண்டும், மீண்டும் சேமித்து வைக்க வேண்டும் என்று அவர்களின் நிலை நொடிப்பொழுது நடக்க வேண்டும்.

blinkit

இந்த முயற்சி மற்றும் மன அழுத்தம் அனைத்தும், யாராவது 10 நிமிடங்களில் கோக் மற்றும் மேகியைப் பெற வேண்டும் என்பதற்காகவா? டெலிவரிகளுக்கு 15 அல்லது 20 நிமிடங்கள் எடுத்தால், அது மோசமாக இருக்குமா? இந்த வேகத்தின் மீதான வெறி மனித இழப்பை புறக்கணிக்கிறது என்று அந்த பயனர் வாதாடுகிறார்.

இந்த பதிவு இணையத்தில் வைரலாகி பலரும் இது குறித்து விவாதிக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து ஆராய்ந்த மஹாராஷ்டிராவின் உணவு பாதுகாப்பு ஆணையம், புனே அருகேயுள்ள பலேவாடி பகுதியில் அமைந்துள்ள Blinkit நிறுவனத்தின் உணவு உரிமத்தை, ஒழுங்குமுறை மீறல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. மேலும் இதுகுறித்து தீவிரமாக விசாரித்து வருகிறது.

வேலூர்: ஜிம் உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டல் - மீண்டும் கைதான பிரபல ரௌடி `வசூர்’ ராஜா

வேலூர் சத்துவாச்சாரியை அடுத்த புதுவசூரைச் சேர்ந்த பிரபல ரௌடி `வசூர்’ ராஜா. இவன்மீது கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் என 54 குற்ற வழக்குகள் இருக்கின்றன. 9 முறை குண்டர் சட்டமும் பாய்ந்திருக்கிறது. கடந்த 15 ஆண்... மேலும் பார்க்க

Operation Honeymoon: கணவரைக் கொல்ல கூலிப்படைக்கு உத்தரவிட்டது எப்படி? விசாரணையில் பகீர் தகவல்

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த சோனம் என்பவரும், அவரது கணவர் ராஜா ரகுவன்சியும் கடந்த மாதம் மேகாலயாவிற்குத் தேனிலவு சென்றனர்.அவர்கள் கடந்த 23ம் தேதி திடீரென காணாமல் போய்விட்டனர். ஆனால் 10 நாட... மேலும் பார்க்க

புதுக்கோட்டை கொலை வழக்கில் புதிய திருப்பம்; தூங்கிய மகனை அடித்துக் கொன்ற தந்தை; என்ன நடந்தது?

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள சங்கம்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன். இவர், மதுவுக்கு அடிமையாகி தினந்தோறும் வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார்.வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு குடித்துவிட்... மேலும் பார்க்க

பொதுத் தேர்வில் கோட்டைவிட்ட அரசு மாதிரிப் பள்ளி; ஆசிரியர்கள் மீது பாய்ந்த நடவடிக்கை; பின்னணி என்ன?

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகராட்சியில் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.இதில் கடந்த ஆண்டு அரசு பொதுத்தேர்வுகளில் அதிகமானவர்கள் தோல்வி அடைந்தனர்.குறிப்பாக, நடந்து ம... மேலும் பார்க்க

மதுரை : சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; போக்சோ வழக்கு - குற்றம்சாட்டப்பட்டவர் தற்கொலை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சோமசுந்தரபுரத்தைச் சேர்ந்தவர் 52 வயதான சின்னன். விவசாய கூலித் தொழிலாளியான இவர், அப்பகுதியில் உள்ள தோட்டங்களில் வேலைகளுக்கு சென்று வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.இந்நி... மேலும் பார்க்க

நாமக்கல் மூதாட்டி கொடூர கொலை... மர்ம நபர்களைப் பிடிக்க எட்டு தனிப்படைகள்; காவல்துறை என்ன சொல்கிறது?

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், சித்தம்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் சாமியாத்தாள்(67). இவரது கணவர் இறந்து விட்டார். வீட்டின் அருகில் உள்ள சொந்தத் தோட்டத்தில் விவசாயம் செய்து தனியாக வசித்து வருகிறார்.ச... மேலும் பார்க்க