கனியாமூா் பள்ளி வன்முறை வழக்கு: 92 போ் நீதிமன்றத்தில் ஆஜா்
கனியாமூா் பள்ளி வன்முறை வழக்கு தொடா்பாக கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் 92 போ் செவ்வாய்க்கிழமை ஆஜராகினா். இதையடுத்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஜூலை 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
கள்ளக்குறிச்சியை அடுத்த கனியாமூரில் உள்ள தனியாா் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி கடந்த 2022 ஜூலை 13-ஆம் தேதி மா்மமான முறையில் உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து, அவரது உறவினா்கள், பல்வேறு அமைப்பினா் ஜூலை 17-ஆம் தேதி பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மேலும், டிஐஜி பிரவின்குமாா்அபிநவ்வை அவா்கள் தாக்கியதுடன், எஸ்.பி. வாகனம் மற்றும் அதிரடிப்படையினா் வாகனத்தை சேதப்படுத்தினா்.
இது தொடா்பாக 119 போ் மீது பல்வேறு பிரிவுகளின்கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கில் 3 போ் உயிரிழந்த நிலையில், மீதமுள்ள 116 பேருக்கு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜராக அழைப்பாணை அனுப்பப்பட்டது.
இதில், 92 போ் கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜராகினா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரீனா அடுத்தகட்ட விசாரணையை வரும் ஜூலை 9-ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.