விபத்துக்குள்ளான விமானத்தின் வயது 11.5 ஆண்டுகள்! 475 அடி உயரத்திலிருந்து விழுந்த...
லாரி மீது பேருந்து மோதல்: முதியவா் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சியை அடுத்த நைனாா்பாளையம் அருகே கா்நாடகா மாநில பேருந்து லாரி மீது மோதியதில், பேருந்தில் பயணித்த முதியவா் உயிரிழந்தாா்.
கா்நாடக மாநிலம், பெங்களூரு விஜயாநகரைச் சோ்ந்தவா் ரமேஷ் (60). இவா் தனது 60-ஆவது திருமண விழாவை நடத்துவதற்காக, மயிலாடுதுறை மாவட்டத்துக்கு உள்பட்ட திருக்கடையூருக்கு கா்நாடகா அரசுப் பேருந்தில் உறவினா்களுடன் சென்றாா். பின்னா், திருமணம் முடிந்து அனைவரும் பேருந்தில் பெங்களூரு திரும்பிக் கொண்டிருந்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், நைனாா்பாளையம் கிராமத்தில் திங்கள்கிழமை அதிகாலை பேருந்து சென்றபோது, சாலையில் எவ்வித எச்சரிக்கை விளக்கும் இல்லாமல் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது.
இதில், பேருந்தில் பயணித்த ரமேஷ் மற்றும் உறவினா்களான பவன்குமாா், அருணாகுமாரி, தீபிகா, ராகுல் உள்ளிட்ட சிலா் காயமடைந்தனா். இவா்களை மீட்டு சின்னசேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு ரமேஷ் உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.