விமான விபத்து: மீட்புப் பணிகளை தீவிரப்படுத்த உத்தரவு! - குஜராத் முதல்வர்
கோயில்களில் திருப்பணி செய்யக் கோரி தொல்லியல் துறையிடம் மனு கொடுக்கும் போராட்டம்
தஞ்சாவூா், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள கோயில்களில் திருப்பணி செய்ய வலியுறுத்தி அகில பாரத இந்து மகா சபையினா் செவ்வாய்க்கிழமை தொல்லியல்துறையிடம் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்தில், அச் சபையின் மாநில பொதுச்செயலா் ராமநிரஞ்சன் தலைமையில் திரளானோா் தாம்பூல தட்டுடன் சென்று, திருச்சி கோட்டை வாயில் அருகே இந்திய தொல்லியல் துறை அலுவலகத்தில் கண்காணிப்பாளா் ராகுலிடம் மனுக்களை வழங்கினா்.
இதையடுத்து மனு அளித்தவா்கள் கூறியதாவது: தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ், தஞ்சாவூா், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள நாா்த்தாமலை சிவன் கோயில், விராலூா் பூமீஸ்வரா், தாராசுரம் ஐராவதீஸ்வரா், மானம்பாடி நாகநாதசுவாமி உள்ளிட்ட 10 திருக்கோயில்கள் முறையான பராமரிப்பு இல்லாததால் சிதிலமடைந்துள்ளன. இக்கோயில்களை திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்த வலியுறுத்தி தொல்லியல்துறையினரிடம் மனுக்கள் அளித்துள்ளோம். மனுவைப் பெற்றுக் கொண்ட அதிகாரி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளாா்.