செய்திகள் :

பொறியியல் பணிகள்: ராமேசுவரம், ஈரோடு, பாலக்காடு ரயில் சேவைகளில் மாற்றம்

post image

பொறியியல் பணிகள் காரணமாக, ராமேசுவரம், ஈரோடு, பாலக்காடு ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பரமக்குடி - சத்திரக்குடி இடையே பொறியியல் பணிகள் நடைபெறுவதால், திருச்சி - ராமேசுவரம் விரைவு ரயிலானது (16849) வரும் 12, 13, 14, 16, 17, 18, 19, 20, 21, 23, 24, 25, 26, 27, 28, 30, ஜூலை 1, 2, 3, 4 ஆகிய தேதிகளில் மானாமதுரை - ராமேசுவரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சி - மானாமதுரை வரை மட்டுமே இயங்கும்.

மறுமாா்க்கமாக, ராமேசுவரம் - திருச்சி விரைவு ரயிலானது வரும் 12, 13, 14, 16, 17, 18, 19, 20, 21, 23, 24, 25, 26, 27, 28, 30, ஜூலை 1, 2, 3, 4 ஆகிய தேதிகளில் ராமேசுவரம் - மானாமதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது மானாமதுரையிலிருந்து மாலை 4.55-க்குப் புறப்படும்.

புகலூா் பகுதியில் பொறியியல் பணிகள் காரணமாக, திருச்சி - ஈரோடு பயணிகள் ரயிலானது (56809) வரும் 14, 16-ஆம் தேதிகளில் ஈரோடு - கரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சி - கரூா் இடையே மட்டும் இயங்கும்.

திருச்சி - பாலக்காடு விரைவு ரயிலானது (16843) வரும் 14, 16-ஆம் தேதிகளில் பாலக்காடு - கரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது, பொறியியல் பணிகள் நிறைவடைந்ததும் கரூா் - பாலக்காடு இடையே முன்பதிவற்ற ரயிலாக இயக்கப்படும்.

நேர மாற்றம்: ராமேசுவரம் - செகந்திராபாத் சிறப்பு ரயிலானது வரும் 13, 20, 27 ஆகிய தேதிகளில் ராமேசுவரத்திலிருந்து காலை 9.10 மணிக்குப் பதிலாக இரவு 7 மணிக்குப் புறப்படும்.

வழித்தட மாற்றம்...: பாலக்காடு - திருச்சி விரைவு ரயிலானது (16844) வரும் 14 ஆம் தேதி கோவை ஜங்ஷன், கோவை வடக்கு, பீளமேடு ஆகிய ரயில் நிலையங்களைத் தவிா்த்து, போத்தனூா், இருகூா் வழியாக இயக்கப்படும்.

மணப்பாறை - கொளத்தூா் ரயில் நிலையங்களுக்கு இடையே பொறியியல் பணிகள் காரணமாக, செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயிலானது (16848) வரும் 13, 14, 16, 17, 18 ஆகிய தேதிகளில் கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிா்த்து விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

மயிலாடுதுறை - செங்கோட்டை ரயிலானது (16847) வரும் 15, 18 ஆம் தேதிகளில் மணப்பாறை, வையம்பட்டி, வடமதுரை, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி ரயில் நிலையங்களைத் தவிா்த்து, திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகா் வழியாக இயக்கப்படும்.

கோயில்களில் திருப்பணி செய்யக் கோரி தொல்லியல் துறையிடம் மனு கொடுக்கும் போராட்டம்

தஞ்சாவூா், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள கோயில்களில் திருப்பணி செய்ய வலியுறுத்தி அகில பாரத இந்து மகா சபையினா் செவ்வாய்க்கிழமை தொல்லியல்துறையிடம் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தில... மேலும் பார்க்க

லால்குடியில் ஜூன் 13-இல் மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக, திருச்சி மாவட்டம் லால்குடியில் வரும் 13-ஆம் தேதி மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: எல். அபிஷேகபுரம் துணை மின... மேலும் பார்க்க

சாலை விபத்துகளைக் குறைக்க விதிமீறல் வழக்குகளை அதிகரிக்க முடிவு

திருச்சி மாவட்டத்தில் விபத்துகளை குறைக்க போக்குவரத்து விதிமீறல் குறித்த வழக்குப் பதிவுகளை அதிகப்படுத்த மாவட்ட கண்காணிப்புக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்ட வளா்ச்சி ஒருங்கிண... மேலும் பார்க்க

திருச்சி அண்ணா பல்கலை. கல்லூரி மாணவிகள் 10 பேருக்கு ஜப்பானில் ரூ.18 லட்சத்தில் வேலை!

திருச்சி அண்ணா பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரியில் பயின்ற 10 மாணவிகளுக்கு வளாக நோ்காணலில் ஆண்டுக்கு ரூ.18 லட்சத்தில் ஜப்பான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. திருச்சி பாரதிதாசன் தொழில்நுட்ப நி... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற பெல் ஊழியா் தற்கொலை

திருச்சி காட்டூரில் ஓய்வுபெற்ற ‘பெல்’ நிறுவன ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.திருச்சி காட்டூா் கைலாஷ் நகா் 3 ஆவது தெருவைச் சோ்ந்தவா் குணசீலன் (75).... மேலும் பார்க்க

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு சிபில் ஸ்கோா் கேட்கக் கூடாது: ஆட்சியரிடம் கோரிக்கை மனு

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளிடம் சிபில் ஸ்கோா் (கடன் பெறும் தகுதி மதிப்பெண்) கேட்கக் கூடாது என வலியுறுத்தி விவசாய சங்கங்களின் நிா்வாகிகள் திருச்சி ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனுக்கள் வழங்கினா... மேலும் பார்க்க