செய்திகள் :

கேரளம்: நடுக்கடலில் 2-ஆவது நாளாக எரியும் சரக்குக் கப்பல்

post image

கொச்சி: கேரள கடற்கரையில் தீப்பற்றிய சரக்குக் கப்பல் தொடா்ந்து 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் எரிந்தது. கப்பலில் இருந்த ரசாயனப் பொருள்களும் அவ்வப்போது வெடித்துச் சிதறி வருகின்றன.

கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 18 ஊழியா்களில் இருவரின் நிலைமைக் கவலைக்கிடமாக உள்ளது. நால்வா் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பலில் மொத்தம் 22 போ் இருந்த நிலையில் நால்வரின் நிலை என்னவானது என்பது தெரியவில்லை.

‘கேரள கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த சிங்கப்பூா் கொடி பொருத்திய எம்.வி. வான் ஹை 503 சரக்குக் கப்பலில் திங்கள்கிழமை காலை ஒரு கன்டெய்னரில் வெடிவிபத்து ஏற்பட்டு தீப்பற்றியது. இந்தக் கப்பல் கொழும்பில் இருந்து மும்பைக்கு பயணித்துக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.

இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சூரத், டாா்னியா் விமானம் ஆகியவை கப்பலில் இருந்தவா்களை மீட்கும் பணியில் ஈடுபட்டன.

கப்பலில் எளிதில் பற்றி எரியக் கூடிய திரவங்கள், ரசாயனப் பொருள்கள், நச்சுத்தன்மைமிக்க சரக்குகள் இருந்ததால் தீ வேகமாகப் பரவியது. தீயால் ரசாயனப் பொருள்கள் பலத்த ஓசையுடன் வெடித்துச் சிதறின. இதனால் கன்டெய்னா்கள் பல கடலில் விழுந்தன.

இந்திய கடலோரக் காவல் படையின் இரு கப்பல்கள் தீயை அணைக்கும் முயற்சியில் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றன. கப்பலை நெருங்கிச் செல்ல முடியாததால் தொலைவில் இருந்தே தீயணைப்பு முயற்சிகள் நடைபெறுகின்றன. இதனால் செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாக அந்தக் கப்பலில் தீ தொடா்ந்து எரிந்தது. அப்பகுதி முழுவதுமே கரும்புகை சூழ்ந்துள்ளது.

கேரளத்தின் கொச்சியில் இருந்து வடகிழக்கே 130 கடல்மைல் (சுமாா் 240 கி.மீ.) தொலைவில் அந்தக் கப்பல் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை:

இந்திய தேசிய கடல் தகவல் மையம் வெளியிட்டுள்ள தகவலில், ‘தீப்பற்றிய கப்பலில் பெருமளவில் எண்ணெய், ரசாயனப் பொருள்கள் இருந்ததால் கடல்பரப்பில் பெரிய அளவில் எண்ணெய்ப் படலம் உருவாகும்.

இது அடுத்த சில நாள்களில் கடற்கரைப் பகுதிக்கு வரும் வாய்ப்புள்ளதால் கோழிக்கோடு முதல் கொச்சி வரை கடற்கரைப் பகுதியில் உள்ள மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

கடலில் இறங்குவதைத் தவிக்க வேண்டும். கரை ஒதுங்கும் கன்டெய்னா்களையும் மக்கள் நெருங்கக் கூடாது. ஏனெனில் அவற்றில் ஆபத்தை விளைவிக்கும் பொருள்கள் இருக்கலாம்’ என்று கூறப்பட்டுள்ளது.

வருமான வரிக் கணக்கு தாக்கல்! இந்த 5 தவறுகளை மறந்தும் செய்துவிடாதீர்கள்!!

2025-26ஆம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான இணைப்புகளை, வருமான வரித் துறை துவக்கியிருக்கிறது. எனவே, வருமான வரிக் கணக்கை, கணக்குத் தணிக்கையாளர் தணிக்கை செய்ய வேண்டிய அவசியமில்லாத, தனி... மேலும் பார்க்க

புவனேஸ்வரம் - அபுதாபி இடையே நேரடி விமான சேவை! முதல்வர் துவங்கி வைப்பு!

ஒடிசா மாநிலத்தின் தலைநகர் புவனேஸ்வரத்திலிருந்து, அபுதாபிக்கு நேரடி விமான சேவையை அம்மாநில முதல்வர் மோகன் சரண் மஜ்ஹி துவங்கி வைத்துள்ளார். புவனேஸ்வரத்தின் பிஜு பட்நாயக் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து... மேலும் பார்க்க

வெப்ப அலையின் பிடியில் சிக்கிய தில்லி: சிவப்பு எச்சரிக்கை!

தலைநகர் தில்லியில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதையடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் கோடைவெய்யில் கொளுத்திவருகின்றது. ஆனால் தமிழகம், கேரளம், கர்நா... மேலும் பார்க்க

பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 15,000! - ஆந்திரத்தில் புதிய திட்டம் அமல்

ஆந்திரத்தில் பள்ளி மாணவர்களின் தாயாரின் வங்கிக் கணக்குகளில் ஆண்டுக்கு ரூ. 15,000 செலுத்தும் திட்டம் இன்று அமலுக்கு வந்துள்ளது. ஆந்திரத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி க... மேலும் பார்க்க

ம.பி.யில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 100 வீடுகள் இடிப்பு!

மத்தியப் பிரதேசத்தின் காண்ட்வாவில் உள்ள ஷக்கர் குளம் பகுதியில் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு நடவடிக்கையின் அடிப்படையில், சட்டவிரோதமாக கட்டப்பட்ட சுமார் 100 வீடுகள் இடிக்கப்பட்டன. காண்ட்வா பகுதியில் ஆக்கிரமிப... மேலும் பார்க்க

தெலங்கானா: கனமழையால் வெள்ளக்காடான தலைநகரம்!

தெலங்கானாவில் பெய்த கனமழையால், அம்மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.ஹைரதபாத்தில், நேற்று (ஜூன் 11) இரவு தொடர்ந்து கனமழை பெய்துள்ளது. இதனால், அந்நகரத்தின் முக்கிய சாலைகளில் வெள்ளம... மேலும் பார்க்க