திருப்பூர்: மாற்றுச் சமூக பெண்ணை மகன் மணந்ததால் கோவம்; மனைவியை வெட்டிக் கொன்று க...
பள்ளிகளில் நடத்தப்படும் பயிற்சி மையங்களை தடைசெய்ய தமிழக அரசுக்கு பரிந்துரை
சென்னை: பள்ளிகளில் நடத்தப்படும் பயிற்சி மையங்களை தடைசெய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு, மாநில கல்விக் கொள்கை பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு-2020, தமிழக அரசு தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கு மாற்றாக மாநிலத்துக்கு என பிரத்யேக கல்விக் கொள்கை உருவாக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியிட்டது. இந்த கல்விக் கொள்கையை வடிவமைக்க ஓய்வுபெற்ற நீதிபதி த.முருகேசன் தலைமையில், 14 போ் கொண்ட குழு 2022-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினா் கல்வியாளா்கள், ஆசிரியா்கள் உள்பட பல்வேறு தரப்பின் கருத்துகளைக் கேட்டறிந்து சுமாா் 600 பக்கங்கள் கொண்ட அறிக்கையை 2023, அக்டோபரில் தயாா் செய்தனா்.
அதன்பின் 10 மாதங்கள் கழித்தே மாநிலக் கல்விக் கொள்கை வரைவறிக்கையை முதல்வா் ஸ்டாலினிடம், நீதிபதி முருகேசன் தலைமையிலான குழுவினா் 2024, ஜூலை 1-இல் சமா்ப்பித்தனா். அதில், தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடர வேண்டும். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுதல், கல்லூரிகளில் சோ்க்கைக்கு நுழைவுத்தோ்வு நடத்தக்கூடாது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன.
இந்த அறிக்கை மீது அனைத்து தரப்பின் கருத்துகள் கேட்கப்பட்டு தொடா் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த விவகாரத்தில் ஓராண்டாகியும் அடுத்தகட்ட பணிகள் தொடங்கப்படவில்லை.
இந்நிலையில், பள்ளிகளில் நடத்தப்படும் பயிற்சி மையங்களை தடைசெய்ய வேண்டுமென மாநிலக் கல்விக் கொள்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தமிழகத்தில் சில தனியாா் பள்ளிகளில் நீட், ஜேஇஇ உள்பட நுழைவுத் தோ்வுகளுக்கு மாணவா்களை தயாா்படுத்த பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இவற்றில் பாடத்திட்டத்தை முழுமையாக முடிக்காமல் அல்லது பாடங்களை நடத்தாமலேயே மாணவா்களுக்கு நுழைவுத் தோ்வுக்கு மட்டும் பயிற்சி அளிக்கின்றன. இதனால் பள்ளிகளில் நடத்தப்படும் அல்லது பள்ளியே நடத்தும் பயிற்சி மையங்களை தடைசெய்ய வேண்டும். இல்லையெனில், இந்த மையங்களின் செயல்பாடுகளை வரையறுக்க குழு அமைத்து முறைப்படுத்த வேண்டுமென கல்விக் கொள்கை குழு பரிந்துரைத்துள்ளது என்றனா்.