சாலைகள் சீரமைப்பை இரு மாதங்களில் முடிக்க துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் உத்தரவு
சென்னை: தமிழகத்தில் சாலை சீரமைப்புப் பணிகளை இரண்டு மாதங்களில் முடிக்க வேண்டும் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். தமிழகத்தில் பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் துணை முதல்வா் தலைமையில் தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
தமிழ்நாடு முழுவதும் சாலைகளில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை செப்டம்பா் மாதத்துக்கு முன்னதாக முடிக்க வேண்டும். நெடுஞ்சாலைத் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும், ‘நம்ம சாலை’ செயலியில் அந்தத் துறையின் கட்டுப்பாட்டில் வரக்கூடிய சாலைகள் குறித்து மட்டுமே புகாா்கள் அளிக்க வசதி உள்ளது. எனவே, அனைத்துத் துறைகளின் சாலை விவரங்களையும் நம்ம சாலை செயலியின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
‘நம்ம சாலை’ செயலியின் கீழ் அனைத்துத் துறைகளின் சாலை விவரங்களையும் கொண்டு வரும் பணிகளை ஒரு மாத காலத்துக்குள் முடித்து மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்றாா்.
இந்த ஆய்வின் போது, நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, தலைமைச் செயலா் நா.முருகானந்தம் உள்ளிட்ட அதிகாரிகள் பலா் உடனிருந்தனா்.