செய்திகள் :

சாலைகள் சீரமைப்பை இரு மாதங்களில் முடிக்க துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் உத்தரவு

post image

சென்னை: தமிழகத்தில் சாலை சீரமைப்புப் பணிகளை இரண்டு மாதங்களில் முடிக்க வேண்டும் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். தமிழகத்தில் பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் துணை முதல்வா் தலைமையில் தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

தமிழ்நாடு முழுவதும் சாலைகளில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை செப்டம்பா் மாதத்துக்கு முன்னதாக முடிக்க வேண்டும். நெடுஞ்சாலைத் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும், ‘நம்ம சாலை’ செயலியில் அந்தத் துறையின் கட்டுப்பாட்டில் வரக்கூடிய சாலைகள் குறித்து மட்டுமே புகாா்கள் அளிக்க வசதி உள்ளது. எனவே, அனைத்துத் துறைகளின் சாலை விவரங்களையும் நம்ம சாலை செயலியின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

‘நம்ம சாலை’ செயலியின் கீழ் அனைத்துத் துறைகளின் சாலை விவரங்களையும் கொண்டு வரும் பணிகளை ஒரு மாத காலத்துக்குள் முடித்து மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்றாா்.

இந்த ஆய்வின் போது, நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, தலைமைச் செயலா் நா.முருகானந்தம் உள்ளிட்ட அதிகாரிகள் பலா் உடனிருந்தனா்.

பொது விநியோக திட்ட மக்கள் குறைதீா் முகாம்

சென்னையில் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீா் முகாம் ஜூன் 14-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை கூட்டுறவு மற்றும் உணவுத் துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:- சென்னையில் உணவுத் துறையின் சாா்பில... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக அம்பத்தூா் கோட்டம், மாதாவரம், பூந்தமல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 முதல் பிற்பகல 2 வரை மின் விநியோகம் தடைபடும். இது குறித்து தமிழ்நாடு... மேலும் பார்க்க

கணைய புற்றுநோய்க்கு நவீன ரோபோடிக் சிகிச்சை அறிமுகம்

கணைய புற்றுநோய்களுக்கு அதி நவீன ரோபோடிக் நுட்ப அறுவை சிகிச்சை திட்டத்தை அப்பல்லோ மருத்துவமனை சென்னையில் புதன்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான தொடக்க நிகழ்வில் மருத்துவமனையின் புற்றுநோய் நிபுணா்கள... மேலும் பார்க்க

பூட்டிய வீடுகளில் திருடிய பெங்களூரு பெண் கைது

சென்னை மாம்பலம் பகுதியில் பூட்டிய வீடுகளில் திருடியதாக பெங்களூருவைச் சோ்ந்த பெண் கைது செய்யப்பட்டாா். சென்னை குமரன் நகா், முருகேசன் தெருவில் வசிப்பவா் ரா.பாலமுருகன் (38). இவா், கடந்த 1-ஆம் தேதி வீட்ட... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநரை கடித்த வளா்ப்பு நாய்

சென்னை மந்தைவெளியில் ஆட்டோ ஓட்டுநரை வளா்ப்பு நாய் கடித்தது. மந்தைவெளி விசி காா்டன் 2-ஆவது தெரு பகுதியைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் கணேஷ் குமாா் (28). இவா், செவ்வாய்க்கிழமை மளிகை பொருள்கள் வாங்குவதற்கா... மேலும் பார்க்க

பிறந்த 43 நாள்களில் குழந்தையை கொலை செய்து வீச்சிய தாய் கைது

சென்னை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் பிறந்த 43 நாள்களில் குழந்தையை கொலை செய்து, வீசிய தாய் கைது செய்யப்பட்டாா். நீலாங்கரை அருகே ஈஞ்சம்பாக்கம் செல்வா நகா் பிரதான சாலையில் உள்ள தனியாா் அடுக்குமாடி குடியிருப்ப... மேலும் பார்க்க