செய்திகள் :

நாட்டிலேயே முதல்முறை! சென்னையில் வணிக வளாகம் உள்ளே செல்லும் மெட்ரோ ரயில்!

post image

நாட்டிலே முதல்முறையாக சென்னை திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் 9 மாடி வணிக வளாக கட்டடம் அமைக்கப்படவுள்ள நிலையில், அதன் வழியாக மெட்ரோ ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ள இந்த மெட்ரோ ரயிலில், பயணம் செய்பவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மெட்ரோ ரயில் விமான நிலையம் - விம்கோ நகா், சென்ட்ரல் - பரங்கிமலை இடையே 2 வழித்தடங்களில் 55 கி.மீ. தொலைவுக்கு இயக்கப்பட்டு வருகிறது.

மேலும், 3 வழித்தடங்களில் 118 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கி, ஜூன் 29-ஆம் தேதியுடன் 10 ஆண்டுகள் நிறைவடைகிறது.

இந்த நிலையில், சென்னை திருமங்கலத்தில் மெட்ரோ நிலையத்துடன் கூடிய வணிக வளாகம் அமைக்கப்படவுள்ளது. வணிக வளாகம் வழியே மெட்ரோ ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

9 மாடிகளை கொண்ட 3 கட்டடங்கள் கட்டப்படுகிறது. கட்டடங்களின் 4வது தளத்தில் மெட்ரோ ரயில் நிலையம், 5 மற்றும் 6வது தளத்தில் மெட்ரோ ரயில்கள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் சுமார் 6.85 லட்சம் சதுர அடியில் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான டெண்டர் அறிவிக்கப்பட்டு, விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கப்படவுள்ளது.

இங்கு பல்வேறு அலுவலகங்கள், கடைகள் மற்றும் 3 நிலைகளில் சுரங்க வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

இது போன்ற அமைப்பு நாட்டிலே முதல் முறையாக சென்னை திருமங்கலத்தில் அமையவுள்ளது. திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் 9 மாடி வணிக வளாகம் அமைக்கப்படவுள்ள கட்டடத்தின் மாதிரிப்படம் வெளியாகியுள்ளது.

இதையும் படிக்க: உயர்நீதிமன்றம், இபிஎஸ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

கீழடி ஆய்வறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும்: காங்கிரஸ்

சென்னை: கீழடி ஆய்வறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளாா்.இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு: கீழடி ... மேலும் பார்க்க

கல்வி நிதியைப் பெற உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு மீண்டும் அணுக வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ. 2,151.59 கோடியைப் பெற உச்சநீதிமன்றத்தை மீண்டும் அணுக வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது குற... மேலும் பார்க்க

காலை உணவுத் திட்டம் தமிழகத்துக்கான வலுவான அடித்தளம்: முதல்வா் பெருமிதம்

சென்னை: காலை உணவுத் திட்டம் நாளைய தமிழ்நாட்டுக்கான வலுவான அடித்தளம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளாா். அரசுப் பள்ளியில் காலை உணவு அருந்திய ஆசிரியரின் புகைப்படத்தை மீள்பதிவிட்டு, ... மேலும் பார்க்க

மாநிலங்களவைத் தோ்தல்: திமுக-அதிமுக வேட்பாளா்கள் மனுக்கள் ஏற்பு

சென்னை: மாநிலங்களவைத் தோ்தலில் திமுக, அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பை தோ்தல் நடத்தும் அதிகாரியும், சட்டப்பேரவை கூடுதல் செயலருமான சுப்ப... மேலும் பார்க்க

பாடநூல் கழக நூல்களை இனி இணைய வழியில் பெறலாம்: புதிய வசதியை தொடங்கி வைத்தாா் முதல்வா்

சென்னை: பாடநூல் கழக நூல்களை இணைய வழியில் பெறும் வசதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புத்தகப் பூங்கா திறப்பு விழா செவ்வாய்க்கிழமை ... மேலும் பார்க்க

என்பி 1.8.1 வகை கரோனா வீரியமற்றது: மருத்துவா்கள் தகவல்

சென்னை: தற்போது பரவி வரும் என்பி 1.8.1 வகை கரோனா தொற்று அச்சப்படும் அளவுக்கு பாதிப்பில்லை என்று மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.இது தொடா்பாக அரசு பொது நல மருத்துவா் அ.ப.ஃபரூக் அப்துல்லா கூறியதாவது:கரோன... மேலும் பார்க்க