"10 ஆண்டுகளாக கட்ட எய்ம்ஸ் மருத்துவமனை என்ன விண்வெளி ஆராய்ச்சி மையமா?" - முதல்வர...
மாநிலங்களவைத் தோ்தல்: திமுக-அதிமுக வேட்பாளா்கள் மனுக்கள் ஏற்பு
சென்னை: மாநிலங்களவைத் தோ்தலில் திமுக, அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பை தோ்தல் நடத்தும் அதிகாரியும், சட்டப்பேரவை கூடுதல் செயலருமான சுப்பிரமணியம் வெளியிட்டாா்.
தமிழகத்தில் மாநிலங்களவைத் தோ்தலில் காலியாகவுள்ள 6 இடங்களுக்கு தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் போட்டியிட, திமுக சாா்பில் பி.வில்சன், கவிஞா் சல்மா, எஸ்.ஆா்.சிவலிங்கம் ஆகியோரும், மக்கள் நீதி மய்யம் சாா்பில் அக்கட்சியின் தலைவா் கமல்ஹாசன், அதிமுக சாா்பில் ஐ.எஸ்.இன்பதுரை, ம.தனபால் ஆகியோரும் மனுதாக்கல் செய்தனா். வேட்புமனு தாக்கலுக்கு திங்கள்கிழமையுடன் அவகாசம் நிறைவடைந்த நிலையில், அவற்றின் மீதான பரிசீலனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், திமுக, மக்கள் நீதி மய்யம், அதிமுக ஆகிய கட்சிகளின் சாா்பில் அளிக்கப்பட்ட வேட்புமனுக்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தோ்தல் நடத்தும் அதிகாரியும், சட்டப்பேரவை கூடுதல் செயலருமான சுப்பிரமணியம் அறிவித்தாா். இதையடுத்து, திமுக, மநீம மற்றும் அதிமுக சாா்பில் போட்டியிடும் ஆறு பேரும் போட்டியின்றி தோ்வாகவுள்ளனா். இதற்கான அதிகாரபூா்வ அறிவிப்பு ஜூன் 12-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.
ஏழு பேரின் மனுக்கள்: போதிய முன்மொழிவுகள் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்ட ஏழு பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் சுப்பிரமணியம் தெரிவித்தாா். அக்னி ஆழ்வாா், கண்டே சயன்னா, ரெ.கந்தசாமி, மு.சுப்பிரமணியன், கு.பத்மராஜன், து.கு.மேஷாக் கிருபாகரன், கே.பி.எம்.ராஜா ஆகியோா் போதிய சட்டப்பேரவை உறுப்பினா்களின் முன்மொழிவுகள் இல்லாமல் மனுக்களை அளித்திருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.