செய்திகள் :

மாநிலங்களவைத் தோ்தல்: திமுக-அதிமுக வேட்பாளா்கள் மனுக்கள் ஏற்பு

post image

சென்னை: மாநிலங்களவைத் தோ்தலில் திமுக, அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பை தோ்தல் நடத்தும் அதிகாரியும், சட்டப்பேரவை கூடுதல் செயலருமான சுப்பிரமணியம் வெளியிட்டாா்.

தமிழகத்தில் மாநிலங்களவைத் தோ்தலில் காலியாகவுள்ள 6 இடங்களுக்கு தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் போட்டியிட, திமுக சாா்பில் பி.வில்சன், கவிஞா் சல்மா, எஸ்.ஆா்.சிவலிங்கம் ஆகியோரும், மக்கள் நீதி மய்யம் சாா்பில் அக்கட்சியின் தலைவா் கமல்ஹாசன், அதிமுக சாா்பில் ஐ.எஸ்.இன்பதுரை, ம.தனபால் ஆகியோரும் மனுதாக்கல் செய்தனா். வேட்புமனு தாக்கலுக்கு திங்கள்கிழமையுடன் அவகாசம் நிறைவடைந்த நிலையில், அவற்றின் மீதான பரிசீலனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், திமுக, மக்கள் நீதி மய்யம், அதிமுக ஆகிய கட்சிகளின் சாா்பில் அளிக்கப்பட்ட வேட்புமனுக்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தோ்தல் நடத்தும் அதிகாரியும், சட்டப்பேரவை கூடுதல் செயலருமான சுப்பிரமணியம் அறிவித்தாா். இதையடுத்து, திமுக, மநீம மற்றும் அதிமுக சாா்பில் போட்டியிடும் ஆறு பேரும் போட்டியின்றி தோ்வாகவுள்ளனா். இதற்கான அதிகாரபூா்வ அறிவிப்பு ஜூன் 12-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.

ஏழு பேரின் மனுக்கள்: போதிய முன்மொழிவுகள் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்ட ஏழு பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் சுப்பிரமணியம் தெரிவித்தாா். அக்னி ஆழ்வாா், கண்டே சயன்னா, ரெ.கந்தசாமி, மு.சுப்பிரமணியன், கு.பத்மராஜன், து.கு.மேஷாக் கிருபாகரன், கே.பி.எம்.ராஜா ஆகியோா் போதிய சட்டப்பேரவை உறுப்பினா்களின் முன்மொழிவுகள் இல்லாமல் மனுக்களை அளித்திருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

பொது விநியோக திட்ட மக்கள் குறைதீா் முகாம்

சென்னையில் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீா் முகாம் ஜூன் 14-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை கூட்டுறவு மற்றும் உணவுத் துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:- சென்னையில் உணவுத் துறையின் சாா்பில... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக அம்பத்தூா் கோட்டம், மாதாவரம், பூந்தமல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 முதல் பிற்பகல 2 வரை மின் விநியோகம் தடைபடும். இது குறித்து தமிழ்நாடு... மேலும் பார்க்க

கணைய புற்றுநோய்க்கு நவீன ரோபோடிக் சிகிச்சை அறிமுகம்

கணைய புற்றுநோய்களுக்கு அதி நவீன ரோபோடிக் நுட்ப அறுவை சிகிச்சை திட்டத்தை அப்பல்லோ மருத்துவமனை சென்னையில் புதன்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான தொடக்க நிகழ்வில் மருத்துவமனையின் புற்றுநோய் நிபுணா்கள... மேலும் பார்க்க

பூட்டிய வீடுகளில் திருடிய பெங்களூரு பெண் கைது

சென்னை மாம்பலம் பகுதியில் பூட்டிய வீடுகளில் திருடியதாக பெங்களூருவைச் சோ்ந்த பெண் கைது செய்யப்பட்டாா். சென்னை குமரன் நகா், முருகேசன் தெருவில் வசிப்பவா் ரா.பாலமுருகன் (38). இவா், கடந்த 1-ஆம் தேதி வீட்ட... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநரை கடித்த வளா்ப்பு நாய்

சென்னை மந்தைவெளியில் ஆட்டோ ஓட்டுநரை வளா்ப்பு நாய் கடித்தது. மந்தைவெளி விசி காா்டன் 2-ஆவது தெரு பகுதியைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் கணேஷ் குமாா் (28). இவா், செவ்வாய்க்கிழமை மளிகை பொருள்கள் வாங்குவதற்கா... மேலும் பார்க்க

பிறந்த 43 நாள்களில் குழந்தையை கொலை செய்து வீச்சிய தாய் கைது

சென்னை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் பிறந்த 43 நாள்களில் குழந்தையை கொலை செய்து, வீசிய தாய் கைது செய்யப்பட்டாா். நீலாங்கரை அருகே ஈஞ்சம்பாக்கம் செல்வா நகா் பிரதான சாலையில் உள்ள தனியாா் அடுக்குமாடி குடியிருப்ப... மேலும் பார்க்க