செய்திகள் :

அந்நிய நேரடி முதலீடு குறையவில்லை: அமைச்சா் பியூஷ் கோயல் விளக்கம்

post image

பொ்ன்: இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு குறைந்து வருவதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை என்று மத்திய வா்த்தகம், தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள கோயல், ஸ்விட்சா்லாந்தின் பொ்ன் நகரில் செய்தியாளா்களிடம் இது தொடா்பாக கூறியதாவது:

இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு வீழ்ச்சிப் போக்கில் இல்லை. குறிப்பிட்ட கால இடைவெளியில் சில மாற்றப்படும். முக்கியமாக சா்வதேச பொருளாதார சூழல், வட்டி விகித ஏற்ற-இறக்கம் உள்ளிட்ட காரணங்களால் அந்நிய நேரடி முதலீடும் சில நேரங்களில் பாதிக்கப்படும். அதை வைத்து முதலீடு வரத்து குறைந்துவிட்டது என்று கூற முடியாது.

அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்கும் நோக்கில் அனைத்துத் தரப்பு கருத்துகளையும் அரசு கேட்டு வருகிறது. இந்தியாவில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்க புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

கடந்த 11 ஆண்டுகளில் 748.78 பில்லியன் அமெரிக்க டாலா் அளவுக்கு அந்நிய நேரடி முதலீடு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. இது அதற்கு முந்தைய 11 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது 143 சதவீதம் அதிகமாகும். முன்பு 89 நாடுகள் இந்தியாவில் முதலீடு செய்த நிலையில், இப்போது அந்த எண்ணிக்கை 112-ஆக உயா்ந்துள்ளது.

சிங்கப்பூா், மோரீஷஸ், அமெரிக்கா, நெதா்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான், சைப்ரஸ், பிரிட்டன், ஜொ்மனி உள்ளிட்ட நாடுகள் இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்துள்ளன.

இந்தியாவில் குறு, சிறு, நடுத்தர தொழிலில் உற்பத்தியாகும் பொருள்களுக்கான ஏற்றுமதியை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை ஏற்றுமதி செய்வோருக்கும் நிதியுதவி அளிக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட இருக்கிறது என்றாா்.

வருமான வரிக் கணக்கு தாக்கல்! இந்த 5 தவறுகளை மறந்தும் செய்துவிடாதீர்கள்!!

2025-26ஆம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான இணைப்புகளை, வருமான வரித் துறை துவக்கியிருக்கிறது. எனவே, வருமான வரிக் கணக்கை, கணக்குத் தணிக்கையாளர் தணிக்கை செய்ய வேண்டிய அவசியமில்லாத, தனி... மேலும் பார்க்க

புவனேஸ்வரம் - அபுதாபி இடையே நேரடி விமான சேவை! முதல்வர் துவங்கி வைப்பு!

ஒடிசா மாநிலத்தின் தலைநகர் புவனேஸ்வரத்திலிருந்து, அபுதாபிக்கு நேரடி விமான சேவையை அம்மாநில முதல்வர் மோகன் சரண் மஜ்ஹி துவங்கி வைத்துள்ளார். புவனேஸ்வரத்தின் பிஜு பட்நாயக் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து... மேலும் பார்க்க

வெப்ப அலையின் பிடியில் சிக்கிய தில்லி: சிவப்பு எச்சரிக்கை!

தலைநகர் தில்லியில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதையடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் கோடைவெய்யில் கொளுத்திவருகின்றது. ஆனால் தமிழகம், கேரளம், கர்நா... மேலும் பார்க்க

பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 15,000! - ஆந்திரத்தில் புதிய திட்டம் அமல்

ஆந்திரத்தில் பள்ளி மாணவர்களின் தாயாரின் வங்கிக் கணக்குகளில் ஆண்டுக்கு ரூ. 15,000 செலுத்தும் திட்டம் இன்று அமலுக்கு வந்துள்ளது. ஆந்திரத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி க... மேலும் பார்க்க

ம.பி.யில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 100 வீடுகள் இடிப்பு!

மத்தியப் பிரதேசத்தின் காண்ட்வாவில் உள்ள ஷக்கர் குளம் பகுதியில் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு நடவடிக்கையின் அடிப்படையில், சட்டவிரோதமாக கட்டப்பட்ட சுமார் 100 வீடுகள் இடிக்கப்பட்டன. காண்ட்வா பகுதியில் ஆக்கிரமிப... மேலும் பார்க்க

தெலங்கானா: கனமழையால் வெள்ளக்காடான தலைநகரம்!

தெலங்கானாவில் பெய்த கனமழையால், அம்மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.ஹைரதபாத்தில், நேற்று (ஜூன் 11) இரவு தொடர்ந்து கனமழை பெய்துள்ளது. இதனால், அந்நகரத்தின் முக்கிய சாலைகளில் வெள்ளம... மேலும் பார்க்க