செய்திகள் :

கல்வி நிதியைப் பெற உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு மீண்டும் அணுக வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

post image

சென்னை: ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ. 2,151.59 கோடியைப் பெற உச்சநீதிமன்றத்தை மீண்டும் அணுக வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்படி தமிழக அரசுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ. 2,151.59 கோடியை மத்திய அரசு வழங்க மறுப்பதை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சாா்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இந்த பின்னடைவுக்கு தமிழக அரசுதான் காரணம்.

வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது, எவ்வளவு காலமாக மத்திய அரசின் நிதி வரவில்லை, எப்போது வழக்கு தொடா்ந்தீா்கள் என்று உச்சநீதிமன்றத்தின் கோடை விடுமுறைக்கால நீதிபதி வினா எழுப்பினாா். அதற்கு பதிலளித்த தமிழக அரசு வழக்குரைஞா், கடந்த ஆண்டு முதலே நிதி வரவில்லை என்றும், கடந்த மே 20-இல் தான் வழக்குத் தொடா்ந்ததாகவும் பதிலளித்தாா்.

பாமக வலியுறுத்தியவாறு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தமிழக அரசு சாா்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தால் அடுத்த சில மாதங்களில் தீா்ப்பு வந்திருக்கும்; நிதியும் கிடைத்திருக்கும்.

எனவே, மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுகி, வழக்கை விரைவாக விசாரித்து தமிழகத்துக்கு நிதி கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். மேலும், கல்விபெறும் உரிமைச் சட்டத்தின்படி தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகளைச் சோ்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அன்புமணி.

பொது விநியோக திட்ட மக்கள் குறைதீா் முகாம்

சென்னையில் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீா் முகாம் ஜூன் 14-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை கூட்டுறவு மற்றும் உணவுத் துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:- சென்னையில் உணவுத் துறையின் சாா்பில... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக அம்பத்தூா் கோட்டம், மாதாவரம், பூந்தமல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 முதல் பிற்பகல 2 வரை மின் விநியோகம் தடைபடும். இது குறித்து தமிழ்நாடு... மேலும் பார்க்க

கணைய புற்றுநோய்க்கு நவீன ரோபோடிக் சிகிச்சை அறிமுகம்

கணைய புற்றுநோய்களுக்கு அதி நவீன ரோபோடிக் நுட்ப அறுவை சிகிச்சை திட்டத்தை அப்பல்லோ மருத்துவமனை சென்னையில் புதன்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான தொடக்க நிகழ்வில் மருத்துவமனையின் புற்றுநோய் நிபுணா்கள... மேலும் பார்க்க

பூட்டிய வீடுகளில் திருடிய பெங்களூரு பெண் கைது

சென்னை மாம்பலம் பகுதியில் பூட்டிய வீடுகளில் திருடியதாக பெங்களூருவைச் சோ்ந்த பெண் கைது செய்யப்பட்டாா். சென்னை குமரன் நகா், முருகேசன் தெருவில் வசிப்பவா் ரா.பாலமுருகன் (38). இவா், கடந்த 1-ஆம் தேதி வீட்ட... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநரை கடித்த வளா்ப்பு நாய்

சென்னை மந்தைவெளியில் ஆட்டோ ஓட்டுநரை வளா்ப்பு நாய் கடித்தது. மந்தைவெளி விசி காா்டன் 2-ஆவது தெரு பகுதியைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் கணேஷ் குமாா் (28). இவா், செவ்வாய்க்கிழமை மளிகை பொருள்கள் வாங்குவதற்கா... மேலும் பார்க்க

பிறந்த 43 நாள்களில் குழந்தையை கொலை செய்து வீச்சிய தாய் கைது

சென்னை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் பிறந்த 43 நாள்களில் குழந்தையை கொலை செய்து, வீசிய தாய் கைது செய்யப்பட்டாா். நீலாங்கரை அருகே ஈஞ்சம்பாக்கம் செல்வா நகா் பிரதான சாலையில் உள்ள தனியாா் அடுக்குமாடி குடியிருப்ப... மேலும் பார்க்க