விமான விபத்து: மீட்புப் பணிகளை தீவிரப்படுத்த உத்தரவு! - குஜராத் முதல்வர்
கல்வி நிதியைப் பெற உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு மீண்டும் அணுக வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
சென்னை: ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ. 2,151.59 கோடியைப் பெற உச்சநீதிமன்றத்தை மீண்டும் அணுக வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்படி தமிழக அரசுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ. 2,151.59 கோடியை மத்திய அரசு வழங்க மறுப்பதை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சாா்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இந்த பின்னடைவுக்கு தமிழக அரசுதான் காரணம்.
வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது, எவ்வளவு காலமாக மத்திய அரசின் நிதி வரவில்லை, எப்போது வழக்கு தொடா்ந்தீா்கள் என்று உச்சநீதிமன்றத்தின் கோடை விடுமுறைக்கால நீதிபதி வினா எழுப்பினாா். அதற்கு பதிலளித்த தமிழக அரசு வழக்குரைஞா், கடந்த ஆண்டு முதலே நிதி வரவில்லை என்றும், கடந்த மே 20-இல் தான் வழக்குத் தொடா்ந்ததாகவும் பதிலளித்தாா்.
பாமக வலியுறுத்தியவாறு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தமிழக அரசு சாா்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தால் அடுத்த சில மாதங்களில் தீா்ப்பு வந்திருக்கும்; நிதியும் கிடைத்திருக்கும்.
எனவே, மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுகி, வழக்கை விரைவாக விசாரித்து தமிழகத்துக்கு நிதி கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். மேலும், கல்விபெறும் உரிமைச் சட்டத்தின்படி தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகளைச் சோ்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அன்புமணி.