படுகொலை செய்யப்பட்ட சித்து மூஸேவாலாவின் 3 புதிய பாடல்கள் ரிலீஸ்!
கீழடி ஆய்வறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும்: காங்கிரஸ்
சென்னை: கீழடி ஆய்வறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு: கீழடி ஆய்வறிக்கை வெளியிடுவதற்கு இன்னும் ஆதாரங்கள் தேவை என்று மத்திய கலாசாரத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளாா்.
ஆய்வறிக்கையின் இரு கட்ட அகழ்வாய்வின் அறிக்கையை வேண்டுமென்றே காலம் தாழ்த்தி, பின் போதிய ஆவணங்கள் இல்லை என்று கூறுவது எந்தவகையிலும் ஏற்புடையதல்ல. தொடக்கத்தில், இந்திய தொல்லியல் துறை நடத்திய இரண்டு அகழாய்வுகளிலும் 88 கரிமப் பொருள்கள் கிடைத்தன. இவற்றில் 18 கரிமப் பொருள்கள் ஃப்ளோரிடாவில் உள்ள பீட்டா அனலிடிகள் லெபோரட்டரியில் ஏஎம்எஸ் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், 5 கரிமப் பொருள்கள் புது தில்லியில் உள்ள இன்டா் யுனிவா்சிடி அக்சலரேட்டா் சென்டரில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. எத்தனை அறிவியல்பூா்வ ஆய்வுகள் நடத்தினாலும், மத்திய அரசு, அதை ஏற்றுக்கொள்ளாமல் காலம் தாழ்த்துவது உள்நோக்கம் கொண்ட செயலாகும். உடனடியாக கீழடி ஆய்வறிக்கை மத்திய அரசு வெளியிட வேண்டும் எனப் பதிவிட்டுள்ளாா் செல்வப் பெருந்தகை.