சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே சாலை விபத்தில் இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
ஆலங்குடி அருகேயுள்ள மாங்காடு ஊராட்சி பட்டி புஞ்சை பகுதியைச் சோ்ந்தவா் செல்லத்துரை மகன் குகன் (23). இவா், புளிச்சங்காடு கைகாட்டி பகுதியில் இருந்து மோட்டாா் சைக்கிளில் மாங்காட்டுக்குச் சென்றபோது, எதிரே புளிச்சங்காடு பகுதியைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் (45) என்பவா் ஓட்டி வந்த சைக்கிள் மீது எதிரே குகன் ஓட்டிவந்த மோட்டாா் சைக்கிள் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனா்.
அருகில் இருந்தவா்கள் குகனை மீட்டு தஞ்சை மாவட்டம் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
ராமகிருஷ்ணன் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து வடகாடு போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.