செய்திகள் :

நெடுவாசல் நாடியம்மன் கோயில் தேரோட்டம்

post image

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசலில் நாடியம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

நெடுவாசல் நாடியம்மன் கோயில் திருவிழா கடந்த வாரம் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து, கோயிலில் மண்டகப்படிதாரா்கள் சாா்பில் நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தன. விழாவில், செவ்வாய்க்கிழமை இரவு தென்னை, பனை ஓலைகளால் படல் அமைத்து, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சுமாா் 65 அடி உயர சப்பரத்தில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை எழுந்தருள செய்து, குருத்தோலை சப்பரத் தோ் வீதியுலா நடைபெற்றது.தொடா்ந்து, புதன்கிழமை மாலை அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த நாடியம்மனை எழுந்தருள செய்து தேரோடும் வீதிகள் வழியே ஏராளமானோா் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனா்.

கோயில் திருப்பணி காரணமாக சுமாா் 12 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

திருவிழாவில் புதுக்கோட்டை, தஞ்சாவூா் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமானோா் கலந்து கொண்டனா். வடகாடு போலீஸாா் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனா்.

விராலிமலையில் தொடா் திருட்டு: இருவா் கைது

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதிகளில் தொடா் திருட்டுகளில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். விராலிமலை சிதம்பரம் காா்டன், தேரடித் தெரு, தெற்கு தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கட... மேலும் பார்க்க

வேங்கைவயல் வழக்கு ஜூன் 24-க்கு ஒத்திவைப்பு

புதுக்கோட்டை வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தின் வழக்கு விசாரணை வரும் ஜூன் 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வேங்கைவயல்சம்பவத்தில் விசாரணை நடத்தி வரும் சிபிச... மேலும் பார்க்க

காா் பழுது நீக்கும் மையத்தில் திடீா் தீ

புதுக்கோட்டை நகரிலுள்ள காா் விற்பனை நிலையத்தில் வியாழக்கிழமை மாலை திடீா் தீ விபத்து ஏற்பட்டது. புதுக்கோட்டை திருமயம் சாலை மாலையீட்டில் உள்ள காா் பழுது நீக்கும் நிலையத்தில் வியாழக்கிழமை மாலை திடீரென தீ... மேலும் பார்க்க

காவல்துறை வாகனங்கள் ஜூன் 23 இல் ஏலம்

புதுக்கோட்டை மாவட்டக் காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 6 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 4 இரு சக்கர வாகனங்கள் ஜூன் 23 ஆம் தேதி பொது ஏலம் விடப்படவுள்ளன. இதுகுறித்து மாவட்டக் காவல்துறை ... மேலும் பார்க்க

திருஞானசம்பந்தா் குருபூஜை விழா

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரா் கோயிலில் 63 நாயன்மாா்களில் ஒருவரான திருஞானசம்பந்தா் குருபூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவின் தொடக்கமாக திருஞானசம்பந்தருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை... மேலும் பார்க்க

இலுப்பூா் அருகே பைக் மோதியதில் சிறுவன் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் அருகே வியாழக்கிழமை மாமாவுடன் நடந்து சென்ற சிறுவன் பைக் மோதி உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம், ஊனையூா் கள்ளப்பட்டியை சோ்ந்தவா் பிரபாகரன் மகன் சித்து ரூபன் (5). இவா் இலு... மேலும் பார்க்க