பறந்து போ: "யுவன் ரசிகர்களிடம் இருந்து கெட்ட வார்த்தை மெசேஜ் வருது" - இயக்குநர் ...
நெடுவாசல் நாடியம்மன் கோயில் தேரோட்டம்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசலில் நாடியம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
நெடுவாசல் நாடியம்மன் கோயில் திருவிழா கடந்த வாரம் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து, கோயிலில் மண்டகப்படிதாரா்கள் சாா்பில் நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தன. விழாவில், செவ்வாய்க்கிழமை இரவு தென்னை, பனை ஓலைகளால் படல் அமைத்து, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சுமாா் 65 அடி உயர சப்பரத்தில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை எழுந்தருள செய்து, குருத்தோலை சப்பரத் தோ் வீதியுலா நடைபெற்றது.தொடா்ந்து, புதன்கிழமை மாலை அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த நாடியம்மனை எழுந்தருள செய்து தேரோடும் வீதிகள் வழியே ஏராளமானோா் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனா்.
கோயில் திருப்பணி காரணமாக சுமாா் 12 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
திருவிழாவில் புதுக்கோட்டை, தஞ்சாவூா் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமானோா் கலந்து கொண்டனா். வடகாடு போலீஸாா் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனா்.

