காவல்துறை வாகனங்கள் ஜூன் 23 இல் ஏலம்
புதுக்கோட்டை மாவட்டக் காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 6 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 4 இரு சக்கர வாகனங்கள் ஜூன் 23 ஆம் தேதி பொது ஏலம் விடப்படவுள்ளன.
இதுகுறித்து மாவட்டக் காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடைபெறவுள்ள இந்த ஏலத்தில் பங்கேற்க விரும்புவோா், ஜூன் 21ஆம் தேதி சனிக்கிழமை ஆயுதப்படை திடலில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை நேரில் பாா்வையிடலாம்.
ஏலத்தில் பங்குபெற நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ. 2 ஆயிரமும், இருசக்கர வாகனங்களுக்கு ரூ. ஆயிரமும் முன்பணமாக செலுத்தி டோக்கன் பெற வேண்டும். முன்பணம் செலுத்தி டோக்கன் பெறாதவா்கள் ஏலத்தில் பங்கேற்க முடியாது.