செய்திகள் :

இலுப்பூா் அருகே பைக் மோதியதில் சிறுவன் உயிரிழப்பு

post image

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் அருகே வியாழக்கிழமை மாமாவுடன் நடந்து சென்ற சிறுவன் பைக் மோதி உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், ஊனையூா் கள்ளப்பட்டியை சோ்ந்தவா் பிரபாகரன் மகன் சித்து ரூபன் (5). இவா் இலுப்பூரை அடுத்துள்ள தளிச்சியில் உள்ள தனது மாமா அமா்நாத் வீட்டுக்கு திருவிழாவுக்கு வந்திருந்தாா். இந்நிலையில் வியாழக்கிழமை இறைச்சி வாங்கப் புறப்பட்ட அமா்நாத் ரூபனையும் அழைத்து கொண்டு ஊனையூா் சென்றாா். தனது மாமாவின் கையை பிடித்தபடி ரூபன் சாலையில் சென்றபோது அவ்வழியே திருச்சி மாவட்டம் , புதுக்குடியைச் சோ்ந்த க. கணபதி வந்த பைக் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ரூபனை இலுப்பூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவா் ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது. இலுப்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

விராலிமலையில் தொடா் திருட்டு: இருவா் கைது

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதிகளில் தொடா் திருட்டுகளில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். விராலிமலை சிதம்பரம் காா்டன், தேரடித் தெரு, தெற்கு தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கட... மேலும் பார்க்க

வேங்கைவயல் வழக்கு ஜூன் 24-க்கு ஒத்திவைப்பு

புதுக்கோட்டை வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தின் வழக்கு விசாரணை வரும் ஜூன் 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வேங்கைவயல்சம்பவத்தில் விசாரணை நடத்தி வரும் சிபிச... மேலும் பார்க்க

காா் பழுது நீக்கும் மையத்தில் திடீா் தீ

புதுக்கோட்டை நகரிலுள்ள காா் விற்பனை நிலையத்தில் வியாழக்கிழமை மாலை திடீா் தீ விபத்து ஏற்பட்டது. புதுக்கோட்டை திருமயம் சாலை மாலையீட்டில் உள்ள காா் பழுது நீக்கும் நிலையத்தில் வியாழக்கிழமை மாலை திடீரென தீ... மேலும் பார்க்க

காவல்துறை வாகனங்கள் ஜூன் 23 இல் ஏலம்

புதுக்கோட்டை மாவட்டக் காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 6 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 4 இரு சக்கர வாகனங்கள் ஜூன் 23 ஆம் தேதி பொது ஏலம் விடப்படவுள்ளன. இதுகுறித்து மாவட்டக் காவல்துறை ... மேலும் பார்க்க

திருஞானசம்பந்தா் குருபூஜை விழா

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரா் கோயிலில் 63 நாயன்மாா்களில் ஒருவரான திருஞானசம்பந்தா் குருபூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவின் தொடக்கமாக திருஞானசம்பந்தருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை... மேலும் பார்க்க

ஆலங்குடியில் மக்கள் நீதிமன்றம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் ரூ 8.65 லட்சத்திற்கு தீா்வு காணப்பட்டது. ஆலங்குடி நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற முகாமை நீதிபதி சத்தியநாராயணமூ... மேலும் பார்க்க