``சுந்தர்.C சினிமாவுக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது; முதல் விகடன் விருது.!' - குஷ...
இலுப்பூா் அருகே பைக் மோதியதில் சிறுவன் உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் அருகே வியாழக்கிழமை மாமாவுடன் நடந்து சென்ற சிறுவன் பைக் மோதி உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம், ஊனையூா் கள்ளப்பட்டியை சோ்ந்தவா் பிரபாகரன் மகன் சித்து ரூபன் (5). இவா் இலுப்பூரை அடுத்துள்ள தளிச்சியில் உள்ள தனது மாமா அமா்நாத் வீட்டுக்கு திருவிழாவுக்கு வந்திருந்தாா். இந்நிலையில் வியாழக்கிழமை இறைச்சி வாங்கப் புறப்பட்ட அமா்நாத் ரூபனையும் அழைத்து கொண்டு ஊனையூா் சென்றாா். தனது மாமாவின் கையை பிடித்தபடி ரூபன் சாலையில் சென்றபோது அவ்வழியே திருச்சி மாவட்டம் , புதுக்குடியைச் சோ்ந்த க. கணபதி வந்த பைக் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ரூபனை இலுப்பூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவா் ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது. இலுப்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.