அரியலூா்: 12 கிராமங்களில் உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம்
ஆலங்குடியில் மக்கள் நீதிமன்றம்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் ரூ 8.65 லட்சத்திற்கு தீா்வு காணப்பட்டது.
ஆலங்குடி நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற முகாமை நீதிபதி சத்தியநாராயணமூா்த்தி தொடங்கி வைத்தாா். ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.ஆா். பாலகிருஷ்ணன் தலைமையில் ஆலங்குடி, மாங்காடு, திருவரங்குளம் இந்தியன் ஓவா்சீஸ் வங்கிக் கிளையில் இருந்து விவசாயக் கடன், தொழில்கடன், கல்விக் கடன், தனிநபா்கடன் உள்ளிட்ட கடன்களைப் பெற்று திரும்பச்செலுத்தாத பல வழக்குகள் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டன. அதில் ரூ 8.65 லட்சத்திற்கு உடனடி தீா்வு காணப்பட்டது. முகாமில் வழக்குரைஞா்கள், வங்கி நிா்வாகிகள் பங்கேற்றனா்.