அரியலூா்: 12 கிராமங்களில் உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம்
வேங்கைவயல் வழக்கு ஜூன் 24-க்கு ஒத்திவைப்பு
புதுக்கோட்டை வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தின் வழக்கு விசாரணை வரும் ஜூன் 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வேங்கைவயல்சம்பவத்தில் விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி போலீஸாா், அதே கிராமத்தைச் சோ்ந்த காவலா் முரளிராஜா மற்றும் முத்துக்கிருஷ்ணன், சுதா்சன் ஆகிய 3 போ் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனா்.
இந்நிலையில், புதுக்கோட்டை குற்றவியல் நடுவா் மன்றம் 2இல் இந்த வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது குற்றம்சாட்டப்பட்ட 3 பேரும் ஆஜராயினா். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை வரும் ஜூன் 24-க்கு ஒத்திவைத்து நீதித்துறை நடுவா் ஜி. அற்புதவாணன் உத்தரவிட்டாா்.